Nov 8, 2004

தீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 1

1. நெறஞ்ச மனசு

கதை வசனம் டைரக் ஷன் - ஜெ. ஜெயலலிதா
கதா நாயகன் - விஜயகுமார்
வில்லன் - வீரப்பன்

பெயர்க்காரணம் - வில்லனை ஒழித்ததால் டைரக்டருக்கு மனசு நெறயுது.

காட்டிலே இருக்கும் வில்லனை தீர்த்துக் கட்டும் போலிஸ் அதிகாரியாக விஜயகுமார் வெளுத்து வாங்கியுள்ளார். ஆனால் வில்லனை கொல்லும் காட்சியில் லாஜிக் உதைப்பதாக கூறும் மனித உரிமை குழுவிற்கு கதா நாயகனோ, டைரக்டரோ சரியான விடை கூறவில்லை என்பது ஒரு குறையே!

இந்த படத்தின் வெற்றிக்கு கெஸ்ட் ரோல் செய்த கர்னாடக அதிரடிப்படையும் காரணம் என்று கலைஞர் பாராட்டி உள்ளார். மேலும் இதே படத்தை அவர் இயக்கிய போது சோக முடிவு இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

பத்திரிக்கைகளின் கருத்து இந்தப்படத்தை பொறுத்தவரை தெளிவாக இல்லை. சில சமயம் அவர்கள் வில்லனின் பாய்ன்ட் ஆஃப் வியூவில் கொன்றது தவறு, உயிரோடு பிடித்திருக்க வேண்டும் என்றும் சில சமயம் கதை திரைக்கதையை வியந்து பாராட்டியும் குழப்புகிறார்கள்.

மொத்தத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி மிகுந்த விளம்பரத்துடன் வெளியாகி உள்ள படம்.

2. அட்டகாசம்

கதை திரைக்கதை டைரக் ஷன் - சன் டிவி
கதா நாயகன் - சன் டிவி

மக்கள் நம்மை மட்டுமே கவனிக்கிறார்கள் என்பதால் கதா நாயகன் போடும் ஆட்டமே இந்த அட்டகாசம்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய சென்டிமென்ட் காட்சிகள்-

தாத்தா சென்டிமென்ட் - 12 மணி நேரம் தொடர்ந்து அய்யோ கொல்றாங்களே - இதை எலெக்ஷன் வரும் போதெல்லாம் ஃப்ளாஷ்பேக்க்காக காண்பித்து வோட்டை அறுவடை செய்வது ஒரு நல்ல உத்தி.

தங்கச்சி சென்டிமென்ட் - பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை தங்கச்சிக்காக "புதுசு கண்ணா" என்ற பாடல் இடம் பெறுவதால் தங்கச்சி மானிலத்தில் முதலாக வரும் காட்சி நம்ப முடியவில்லை என்றாலும் நல்ல காட்சி அமைப்பு.

படத்தில் பல நல்ல நடிகர்கள் (உம் - வைகோ, வாசன்) இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிந்தாலும், அவை உறவினர் சென்டிமென்ட்டுக்காக நீக்கப்பட்டவை

தாத்தா எட்டு மணிக்கு மூட நம்பிக்கை கூடாது என்று சொல்வதை தொடர்ந்து வரும் க்ராஃபிக் சாமிக்காட்சிகள் நல்ல டைரக்டோரியல் டச்.

1 பின்னூட்டங்கள்:

அன்பு said...

கண்ணோட்டம் சூப்பர்...

 

blogger templates | Make Money Online