Nov 8, 2004

தீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 2

3. மன்மதன் (மெகா சீரியல்)

கதை வசனம் டைரக் ஷன் - மீடியா
கதா நாயகிகள் - ஜீவஜோதி, செரினா மற்றும் ஜெயலக்ஷ்மி.

நாட்டில் உலாவும் பல மன்மதர்களைப்பற்றிய சீரியல் இது.

கதை மனதில் ஒட்டாமல் போனதற்க்கு காரணம் கதையில் வரும் கணக்கில்லாத கதாபாத்திரங்களே.

தொடரின் ஆரம்பத்தில் "மன்மதன்"-ஆக வரும் டாக்டர் ப்ரகாஷ், ஸ்வாமி பிரேமானந்தா ஆகியோர் பிற்பகுதியில் காணாமல் போய்விடுகிறார்கள்.

அண்ணாச்சி கதாபாத்திரம் ஜீவஜோதியால் பழிவாங்கப்பட்டு ஜெயிலுக்கு போகும் அதே நேரத்தில், பழிவாங்கப்பட்ட அபலையாக அறிமுகம் ஆகிறார் செரினா. கொஞ்ச நேரத்தில் இவரும் காணாமல் போகிறார்.

கதையின் பிற்பகுதியில் இன்ட்ரோ கொடுக்கும் ஜெயலக்ஷ்மியால் போலிஸ் டிபார்ட்மென்டே ஆடிப்போகிறது.

பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் பரபரப்பு!

4. சத்ரபதி

கதை வசனம் டைரக் ஷன் - சோனியா காந்தி
கதை வசனம் டைரக் ஷன் உதவி (உபத்திரவம்)- கூட்டணிக் கட்சிகள்
நடிப்பு - மன் மோகன் சிங்

ஏழு பதிகளுக்கு வாழ்க்கைப்பட்டு நினைத்தது எதையும் செய்ய முடியாமல் கஷ்டப்படும் ஒரு அபலையாக மன் மோகன் சிங் வாழ்ந்து காட்டி உள்ளார்.

இவர் ஒரு டம்மி என்று ஆரம்ப காட்சிகளிலேயே இலாகா ஒதுக்கீட்டில் தோலுரித்து காட்டி விடுகிறார் ஒரு பதி.

நான் என் இஷ்டப்படி தான் ரயில் ஓட்டுவேன் என திரிகிறார் இன்னொரு பதி. (படத்தின் காமெடியனும் இவரே)

எனக்கு முதல் மந்திரி பதவி அல்லது அட் லீஸ்ட் கிரிக்கெட் வாரியம் - இல்லையென்றால் மறுபடி அன்னியள் கோஷம் என்கிறார் இன்னொரு பதி.

விலை ஏற்ற விடமாட்டோம் - அன்னிய பிரதமர் ஓகே ஆனால் அன்னிய அட்வைஸ் கூடாது எனக் குழப்பும் ஒரு பதி

இவர்களுக்கு இடையே குடும்பத்தை சந்தி சிரிக்க விடாமல் நடத்துகிறாள் இந்த அபலை.

கண்ணீர்க் காட்சிகள் நிறைந்தது.

0 பின்னூட்டங்கள்:

 

blogger templates | Make Money Online