Nov 8, 2004

தீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 3

5. கிரிவலம்

கதை திரைக்கதை வசனம் டைரக் ஷன் நடிப்பு - ரஜினிகாந்த்.

இந்தப் படத்தின் நாயகன் புதுப்பட வேலைகளிலும் கல்யாண வேலைகளிலும் பிஸி ஆகி விட்டதால் படம் பாதி வரை மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது.

நண்பர்களும் பகைவர்களும் கூட்டு சேர்ந்து விட, நாயகனுக்கு யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்ற குழப்பத்தில் ஒரு அரைகுறை வாய்ஸ் விடுகிறார். எதிரிகளின் "பூர்வ ஜென்ம புண்ணியத்"தில் அந்த வாய்ஸ் பிசுபிசுக்க, எதிரிகள் நாட்டியம் ஆடுகிறார்கள்.

இதற்கிடையே நாயகனின் உடன் வேலை செய்யும் சிலரும் ஆளாளுக்கு வாய்ஸ் விடத் தொடங்குகிறார்கள்.

மேலும் குழப்பமாக, நாயகனின் ஐஸ்வர்யத்தின் மீதும் சில மன்மத ராசாக்கள் கண் வைக்க, "இடைவேளை"

நாயகன் மீண்டும் கிரிவலம் செல்லத் துவங்குவாரா? அல்லது கோட்டையை நோக்குவாரா? பார்ட் 2 வில் பதில் கிடைக்கும்.

இப்போதைக்கு இந்தப் படம் ஒரு குழப்ப சங்கமம் மட்டுமே!

6. ட்ரீம்ஸ்

கதை வசனம் டைரக் ஷன் - விதி
நடிகர்கள் - பொதுஜனம்.

நல்ல ஆட்சி கிடைக்காதா என்ற பொது மக்களின் கனவுகளே இந்த ட்ரீம்ஸ்.

"கனவு காணுங்கள்" என ஜனாதிபதியே கூறிவிட்டதால் மக்கள் தூக்கத்தில் ஆழ்கின்றனர்.

அவர்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிடக் கூடாது என அனைத்து அரசியல்வாதிகளும் முயற்சி எடுக்கின்றனர்.

படத்தின் முடிவில் அரசியல்வாதிகளே வெற்றி அடைகிறார்கள்.

சோக முடிவாக இருந்தாலும் யதார்த்தமாக எடுக்கப்பட்ட படம்.

2 பின்னூட்டங்கள்:

Boston Bala said...

வெகு அருமை! மகாநடிகன், அயோத்தியா, ஜனனம், மீசை மாதவனையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி ;-)

Anonymous said...

summ dhool kilappureenga!!!!!!!!

 

blogger templates | Make Money Online