Aug 16, 2005

மங்கள் பாண்டே - the Rising??????

விடுமுறை தினம் என்றாலே , சாலமன் பாப்பையாவையும், ராஜாவின் பிற்போக்கு நகைச்சுவையயும், படையெடுத்து வாழ்த்துச் சொல்லும் திரைக் கலைஞர்களின் கருத்துச் சிதறல்களையும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறைப் படங்களையும் இருவேறு தொல்லைக்காட்சிகளில் (சன், ஜெயா) பார்த்து ரசித்து(?!)முடித்த பின்னால்தான் எத்ற்காக விடுமுறை என்று நாட்காட்டியைப் பார்த்து தெரிந்து கொள்வேன்.

நேற்றும் அப்படித்தான். ஆனால் சுதந்திர தினமாயிற்றே என அருகில் இருந்த திரைச்சாலையில் மங்கள் பாண்டே படம் பார்த்தேன். படம் பார்த்து முடித்த கையோடு விமர்சனம் எழுதும் முன் தமிழ் மணத்தை திறந்து ஒரு ரவுண்டு விட்டால், இந்த விமரிசனம்.

நான் சொல்ல நினைத்த அதே விஷயங்களை, இன்னும் கொஞ்சம் நகைச்சுவை தடவி, கதையையும் சொல்லி (எனக்கு கதையை எழுதும் வேலை மிச்சம்) எழுதி இருக்கிறார் சுவடு ஷங்கர்.

படம் முடிந்தபின் மனதில் நிற்கும் சில கேள்விகள்:

நாலு வருஷம் உழைத்து, இழைத்து தயாரிக்கப்பட்ட மங்கள் பாண்டே ஏன் இவ்வளவு தட்டையான, ஒரு பரிமாண பாத்திரப்படைப்பாக இருக்கிறது?

கொழுப்பைக் கடித்து விட்டதால் அசூத் என தன்னைத்தானே நினைத்துக்கொள்ளும் பாண்டே ஏன் அதற்குப் பிறகும் துப்புரவுதொழிலாளியிடம் இருந்து விலக வேண்டும்?

பாண்டேவின் கலகத்துக்கு காரணம் கொழுப்பா அல்லது ஆசாதியா - படம் பார்த்தபின் எனக்குத் தோன்றும் எண்ணம் - இவை இரண்டும் இல்லை, தீண்டத் தகாதவன் ஆகிவிடுவோம் என்ற பயம்தான்!

நானா சாஹேப், டில்லி பாட்ஷா, ஜான்ஸி லக்ஷ்மிபாய் போன்றோரை பாண்டே நம்புகிறானா இல்லையா - ஆசாதி, மக்கள் ஆட்சி போன்ற வீர வசனங்கள் பேச மட்டும்தான் அவர்களை எதிர்ப்பது போன்ற காட்சி அமைப்பு பயன் பட்டிருக்கிறது.

அமிஷா பட்டேலை சதிமாதா ஆக்க நினைத்த கும்பல் என்ன ரெண்டு அம்பை மட்டும் விட்டு பின் அம்பேல் ஆகி விடுகிறது? கோர்டான், சதியை எதிர்க்க நினைத்தாரா இல்லை 'ஃபிகர் சூப்பர்" என்று டாவு கட்ட நினைத்தாரா?

ஓம் புரியின் வாய்ஸ் ஓவர் - நிச்சயமாக எரிச்சல் ஊட்டிய சில விஷயங்களில் ஒன்று. அமிதாப்பின் லகான் வாய்ஸ் ஓவர் அளவாக இருந்து திரைக்கதை நகர்தலுக்கு உதவியாக இருந்தது. இங்கே யார் இங்க்லீஷ் பேசினாலும் ஓடி வந்து துபாஷி வேலை செய்கிறார் ஓம் புரி! கடுப்பு.

பாடல்கள் - தனியாகக் கேட்டால் நன்றாக இருக்குமோ என்ற தோற்றத்தை தியேட்டரிலும், படத்துடன் பார்த்தால் நன்றாக இருக்குமோ என்ற தோற்றத்தை தனியாகக் கேட்கும்போதும் ஏற் - படுத்துகின்றன.

ஆமிர் கான் மற்றும் அனைத்து நடிகர்களின் நல்ல நடிப்பு, 100 கோடி செலவில் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், மெனக்கெட்டிருப்பது தெரியும் அரங்க அமைப்பு, காஸ்ட்யூம்கள் எல்லாம் - டாகுமெண்டரித்தனமான திரைக்கதையால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.

படம் நிச்சய்மாக எதிர்பார்ப்பிற்கு வாழவில்லை! (not living upto the expectations!)

1 பின்னூட்டங்கள்:

வீ. எம் said...

nice review comments suresh!
i thout of going to the movie yesterday in maayajaal , chennai..but due to some other reason, dropped the plan..

anyway , will see it sometime next week

V M

 

blogger templates | Make Money Online