Sep 29, 2005

மலாகா சுற்றுப்பயணம், பண்பாடு இன்ன பிற! 28 Sep 05

சுற்றுப்பயணத்தை முடித்து வீடு திரும்பிவிட்டேன்.

ஆப்பிரிக்கக் கண்டமும் ஐரோப்பியக்கண்டமும் ஒட்டிக்கொள்ளும் ஜிப்ரால்டருக்கு அருகில், மத்தியத் தரைக்கடலோரம் கடற்கரையாலும், வெயில் காயும் "சன் பாத்" பகுதி என்பதாலும் சுற்றுலாத்தலமான மலாகாவில் ஆறு நாட்கள்..

உடலை மறைக்க உடை என்ற ஸ்பானிய பண்பாட்டை மறந்து, குடும்பத்தோடும், காதலனோடும் தனியாகவும் வெயில் காயும் வனிதையருக்கு மத்தியில் புதுமைப்பித்தன் சிறுகதைகளை மொத்தமாகப் படித்தேன்.

சில பார்வைகள்:

1. உடையே அணியாதவர்களைக் கூட வெறித்துப் பார்க்க ஏன் கூட்டம் கூடுவதில்லை? கோவாவில் வெயில் காய்பவர் 10 சதவீதம் என்றால், வேடிக்கை பார்ப்பவர் 90 சதவீதமாக இருப்பதை அந்த 90ல் இருந்து பார்த்திருக்கிறேன். இங்கே வேடிக்கை பார்ப்பவர் என்பது இல்லவே இல்லை என்றே கூறிவிடலாம். மேலும், 5 நிமிடத்துக்க் மேல் வேடிக்கையும் அலுத்து விடுகிறது:-)

2. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு(?) இல்லைதான் என்றாலும் யாரும் யாருடனும் என்ற வெட்கக்கேடும் இல்லை! கூட்டம் கூடிய இடங்களிலும் இடிமன்னர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

3. காபரே என்பது சென்னை மற்றும் பான்டிச்சேரியின் சில நிழலான இடங்களில் நடைபெறும் ஆடை அவிழ்ப்பு நடனம் என்றே கருதியிருந்தேன். சுத்தமான மேலை சாஸ்திரீய நடன வகையை எப்படி கொச்சைப்படுத்தி இருக்கிறோம் நாம்.. மூன்று ஷோக்கள் பார்த்தேன் - நடனமும், வழங்கிய விதமும் - அருமை!

4. டிவி விளம்பரங்களை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்த்தால், நம் மக்கள் அறிவாளிகள்தான். பெரும்பாலான ஐரோப்பிய விளம்பரங்கள் நேரிடையானவை, நகைச்சுவை அற்றவை.

5. புதுமைப்பித்தன் ஏன் மரணத்தைப் பற்றி அதிகக் கதைகள் எழுதி இருக்கிறார்? யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா?

பாரிஸ் பற்றி பிறகு எழுதுகிறேன்.

குஷ்பூ தங்கர் தமிழ் பண்பாடு பற்றி பதிவு போடுவதாக இல்லை. பின்னூட்டம் மட்டும்தான் (யார் கேட்டார்கள் என்கிறீர்களா?)

1 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

TEST TEST TEST..

Did anybody try commenting on this post?

Whatever the problem was, now rectified.

Sorry for the inconvenience!

 

blogger templates | Make Money Online