Oct 2, 2005

சத்திய சோதனை 02 Oct 05

சுதந்திரம் என்பதற்கான அர்த்தம் மறுக்கப்படும்போதுதான் தெரியவரும் என்கிறது தமிழ் வட்டத்தின் இந்தப் பதிவு.

சில நாடுகளில் இன்னும் இரண்டாம் நிலைக் குடிமகன்களாகவே மதிக்கப் படுகிறோம் என்ற எண்ணம் நம்மில் பலருக்குண்டு. குறிப்பாக வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் குடியுரிமை பெற்றோருக்கும், முதல் தலைமுறை புலம் பெயர்ந்தோருக்கும் உள்ள சட்ட ரீதியிலான இடைவெளியை சந்திக்க நேரும்போதெல்லாம் கேட்க நேரும் வார்த்தைகள் இவை,

இருப்பினும், 1895 - 1900 காலகட்டத்து இங்கிலாந்து ஆளுகைக்குட்பட்ட இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் நிலைமையை சத்திய சோதனை மூலமாக அறிந்துகொள்ளும் போதுதான் இன்றைய நிலைமையின், சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் புரிகிறது. தலைப்பாகை கட்டுவதிலிருந்து, தெருவில் நடப்பது, முதலாம் வகுப்பில் பயணம் செய்வது, வேலைக்கு தலைவரி கட்டவேண்டியது என எல்லா நிலைகளிலும் காட்டப்பட்ட ஆளுமை வெறி, நிற வெறி ஆகியவற்றைப் படிக்கும்போதே கடந்த ஒரு நூற்றாண்டில் மனிதகுலம் எவ்வளவோ சாதித்திருக்கிறது என்பது தெரிகிறது.

இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருக்கலாம் - ஆனால் அதையும் கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையும் மனதுள் துளிர்க்கிறது.

என் மனதில் பட்டதை எந்தத் தயக்கமும் இல்லாமல் கூற வாய்ப்பளித்தோரில் முக்கியரான மஹாத்மா காந்திக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

2 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

TEST TEST TEST..

Did anybody try commenting on this post?

Whatever the problem was, now rectified.

Sorry for the inconvenience!

Ganesh Gopalasubramanian said...

He is a great personality out of bounds, out of words and out of worlds.

 

blogger templates | Make Money Online