Oct 15, 2005

பசுவய்யா என்னும் கவிஞன் 15 Oct 2005

சுந்தர ராமசாமி என்னும் கதை சொல்லியின் இழப்பு பெரியதுதான்.

அதைவிடப் பெரிய இழப்பாக பசுவய்யா என்னும் கவிஞனின் மறைவு எனக்குப் படுகிறது.

தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் ஆரம்ப காலத் தூண்களில் முக்கியமானவர்; தமிழின் மிகச் சிறந்த புதுக்கவிதைகளில் சிலவற்றை கொடுத்தவர்; பல நாட்டுக் கவிதைகளையும் மொழி பெயர்த்து கவிச்சுவை குறையாமல் கொடுத்தவர்;

அந்த மகா கவிஞனுக்கு நம் அஞ்சலி!

பசுவய்யாவின் "எனது தேவைகள்"

கொஞ்சம் முகம் பார்த்து தலை சீவ ஒரு சந்திரன்
லோஷன் மணக்கும் பாத்ரூம்
என் மனக்குதிரைகள் நின்று அசை போட ஒரு லாயம்
என் கையெழுத்துப்பிரதியில் கண்ணோட
முகங்கொள்ளும் ஆனந்தச் சலனங்கள்
நான் காண ஒரு பெண்
சிந்திக்கையில் கோத ஒரு வெண் தாடி
சாந்த சூரியன்
லேசான குளிர்
அடி மனத்தில் கவிதையின் நீரோடை.

ஞான ரதம் டிசம்பர் 1973

0 பின்னூட்டங்கள்:

 

blogger templates | Make Money Online