Jan 26, 2006

போலி எழுத்தாளருக்கு நன்றி (26 Jan 2005)

உலகின் முதல் voyeur-ஆல்தான் கதவு என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் முதல் திருடனால்தான் பூட்டும் சாவியும் கண்டுபிடிக்கப்பட்டன.

அடுத்தவர் அஞ்சலை எட்டிப்பார்த்து வம்புக்கு அலைபவர்களால்தான் அஞ்சலை மூடி சீலிடும் வழக்கம் ஆரம்பித்தது.

இவ்வளவு ஏன்? வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் எனக்குத் தெரியாமல் இருந்த எவ்வளவு விஷயங்கள் ஒரு தனி நபரின் பெர்வர்ஷன்கள் தெரிய வைத்திருக்கின்றன?

1. பிளாக்கர் வலைத்தளங்களில் பிளாக்கர் கணக்கு வைத்திருப்பவர் மட்டுமே பின்னூட்டம் இடுமாறு செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது, என் அறிவுக்கண்ணைத் திறந்தது இவரே.

2. வெள்ளைக்காரர்கள் நம் தமிழ்க்கவிதைகளைப் படித்துப் புல்லரித்து, தன்னிச்சையாக பின்னூட்டம் இடுவதை Word Verification செயல்படுத்தி நிறுத்த முடியும் என்பதும் இவர் ஆட்டத்துக்குப் பின்னால்தான் தெரிய வந்தது.

3. எழுதியவர் யார் என்று பார்க்காமல் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கே அதிக கவனம் செலுத்த வேண்டிய - எல்லா விமர்சனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய உத்தமமான வழியை - இவர்தான் வலுக்கட்டாயமாக அனைவரையும் பின்பற்ற வைத்தார்.

4. ஐ பி, பொய் பி போன்ற கணினி சார்ந்த விஷயங்களில் என் சூன்ய ஞானத்தை அபிவிருத்தி செய்யக் கட்டாயப்படுத்தியவரும் இவரே.

5. பிளாக்கரில் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு இவர் செய்து வரும் பிரசாரம் மிகவும் வலுவானது. நேற்று வரை இதற்கு எதிராக இருந்த என்னையும் இதை உபயோகப்படுத்தும்படி செய்துவிட்டார்.

இப்படிப்பட்ட ஒரு "ஞானகுரு"வின் சில செயல்பாடுகள் மட்டும் எனக்குப் புரிவதில்லை.

1. ஜாதி இல்லை இல்லை என்றே "போராடினாலும்", குரிப்பிட்ட சிலரை மட்டுமே குறிவைத்துத் தாக்கி, வேரு ஜாதிகளை வெளிப்படையாகக் கூறுபவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது தன் துவேஷங்களை வெளிச்சமிடும் என்று உணராதது ஏன்?

2. தமிழ்மணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவு நீக்கப்பட்ட மறு நாளில் இருந்து தமிழ்மண நிர்வாகிகள் பெயரிலும் வந்து சேறு பூசும் செயல் தன்னைக்காட்டிக்கொடுத்துவ்டும் என்று இவர் அறிவுக்குப் புலப்படாதது ஏன்?

3. மட்டுறுத்தப்படும் பதிவுகளில் சும்மாவேனும் கூட தன் தூய தமிழ் பின்னூட்டங்களைப் போட்டு "போரட்டத்தை"த் தொடராதது ஏன்?

4. ஆரம்பத்தில் நான் பிளாக்கரை ஹேக் செய்வேன், ஈமெயிலில் உள்ளே புகுவேன் என்று ஆடிய ஆட்டம் எல்லம் இப்போது எங்கே போனது?

5. ஐ பி சேகரிக்கப்படும் வலைத்தளங்களில் இவர் நடமாட்டமே இல்லாதது ஏன்?

6. கே வி ஆர் விடுத்த Open Challenge-ஐக் எதிர்நோக்காமல் ஓடியது ஏன்?

இப்படிப்பல கேள்விகள்...

இன்று காலையில் விழித்த கொஞ்ச நேரத்தில், வேலைக்குக் கிளம்பும் முன் பின்னூட்டங்களைப்பார்க்கலாம் என்றால் முழித்ததே இந்த ஆபாசத்தில்! இதைப்பார்த்து பயப்படுவதும், நாமும் ஒரு போராட்டத்தைத் தொடங்குவதும் சேற்றில் கல்லடிப்பது போன்ற வீண் செயல்தான் என்றாலும் 30 - 40 பின்னூட்டங்களைப் பார்க்காமல் அழிக்க முடியாததால் காலை வேளை எரிச்சல் நாளையே கெடுத்துவிடுகிறது.

pervert, psycho, sadist போன்ற அத்தனை வார்த்தைகளும் இந்தக் கேடுகெட்ட ஜென்மத்தின் முன்னால் மென்மையான வார்த்தைகள் ஆகிவிடுகின்றன. இவர் யார் என்பது ஊரறிந்த ரகசியம். தண்டிக்கப்படப்போவதும் உறுதி என்றாலும், எப்போது, யாரால் தண்டிக்கப்படுவார் என்பது மட்டுமே தெரியாமல் இருக்கிறது.

பி கு:

Just in Case!!

என் பெயரில் வரும் எந்தப்பின்னூட்டமும் இதுவரையோ இனியுமோ

1. தனிநபர் தாக்குதலாக இருந்ததில்லை, இருக்காது.

2. ஜாதி, மத விஷயங்களில் நான் பட்டுக்கொன்டதும் கிடையாது, இனியும் அந்த எண்ணம் இல்லை

3. ஆபாசமான, உடல் உறவு சார்ந்த எந்த வார்த்தையயும் என் எந்தப்பதிவிலுமோ நான் இட்ட பின்னுட்டங்களிலுமோ பயன்படுத்தியது கிடையாது, பயன்படுத்தௌம் எண்ணமும் கிடையாது

4. என் பிளாக்கர் Profile என்:4928811 , என் ஒரே வலைத்தளம் பினாத்தல்கள். வேறு எண்ணோ, வலைத்தளமோ உருவாக்கும் திட்டம் இல்லை.

4 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

Welcome Visitor no 20000 from USA!

Amar said...

சஸ்பென்ஸ் தாங்க முடியுல.
யார் தான் இந்த போலி ?

யார்?
யார்? யார்?
யார்? யார்?

பினாத்தல் சுரேஷ் said...

ரவி சொல்வதுடன் நான் ஒத்துப்போகவில்லை.

கருத்து சுதந்திரத்தை (???!!!) பாதுகாக்க, இந்தப்பின்னூட்டம் பதிப்பிக்கப்படுகிறது..

பினாத்தல் சுரேஷ் said...

தைலு,

I have seen your blog..

to comment, write more:-))

 

blogger templates | Make Money Online