Mar 22, 2006

தவறிழைத்தான் பினாத்தலான் (22 Mar 06)

Invitation என்று ஒரு பதிவு என் பெயரில் வெளியாகி இருப்பதன் காரணங்கள்:
 
1. எனக்குக் கிடைக்கப்போகும் ஐபாட் அனைவருக்கும் கிடைக்கட்டுமே என்ற நல்லெண்ணம்.
 
2. தருமி அவர்கள் தனிமடலில் கூறியிருந்தது போல, இது உண்மையாக இருந்தால் தமிழ் வலைப்பதிவர்க்கு இலவசமாகக் கொடுத்தே ஐ பாட் நிறுவனமே போடியாகிவிடும் என்பதை மெய்ப்பிப்பதற்காக.
 
3. இதை தப்பித் தவறி யாராவது க்ளிக்கினால் என் கணக்கில் இன்னொரு புள்ளி கூடுமே என்ற பேராசை
 
4. பதிவு இட வேறெந்த சரக்கும் இல்லாமை..
 
என்றெல்லாம் காரணங்களை அடுக்கத் தோன்றினாலும், உண்மையான காரணம் ஒன்றே - என் முகவரிப்புத்தகத்தில் யாருக்கெல்லாம் அனுப்பலாம் என்று யோசித்து, ரேண்டமாக சிலவற்றை நீக்கியபோது, என் பிளாக்கர் பதியும் மின்னஞ்சலை அழிக்க மறந்துவிட்டேன் - அம்புட்டுதேன்.
 
உடனே ???? என்று மணியனின் கேள்வி வந்தபின் தான் தவறை உணர்ந்தேன், அழிக்க இப்போது முடியாது, மாலைதான் முடியும்.

அதுவரை, இங்கே க்ளிக் செய்து, குட்டிக்கதைகளைப் படித்து மகிழ்ச்சியில் ஆழுங்கள்.

விளம்பரம் செய்த இட்லிவடைக்கும், கில்லியில் பிரகாஷுக்கும் நன்றி.. ஹிட்டு ஏறுது ஆனா பின்னூட்டம் வர்றதில்லையே.. ஏன்..ஏன்?

4 பின்னூட்டங்கள்:

Unknown said...

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது இது தானோ? ;)

காலையிலே அந்தப்பதிவ போட்டீங்க, மத்தியானம் இந்தப்பதிவு - இதை 'மட்டும்' பற்றி சொன்னேன். வேறெதுவுமில்லை பெனாத்ஸ்!

பினாத்தல் சுரேஷ் said...

துபாய்,

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தவறாப்பதிவு போட்டவன் அதை அழிப்பான்! அவ்வளோதானெ!

கைப்புள்ள said...

"கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" இலங்கை வேந்தன் சிச்சுவேசன்ல இருந்து வருத்தம் தெரிவிச்சிருக்கீங்களே அதுக்கே உங்களைப் பாராட்டலாம்.

துளசி கோபால் said...

எனக்கு வந்த 'அழைப்பு' என்னோட அட்ரஸ் புத்தகத்துலே இருக்கற எல்லாருக்கும்
அனுப்பவான்னு அன்பாக் கேட்டப்ப 'எஸ்'னு சொல்லி இப்ப அதுபோயிருக்கு நூத்துச் சொச்சம் பேருக்கு.
அட தேவுடா!

 

blogger templates | Make Money Online