Jun 18, 2006

டா கில்லி கோட் - பாகம் 2

 
அத்தியாயம் 3
"நீ எங்கே இங்கே வந்தே கருப்பாயி? உங்க தாத்தாக்கும் உனக்கும்தான் பேச்சு வார்த்தை கிடையாதே.." என்றார் இன்ஸ்பெக்டர் வீராச்சாமி.
 
"அந்தாளு எக்கேடு கெட்டா எனக்கென்னா? நான் உங்களுக்கும் சாருக்கும் டீ கொணாந்தேன்"
 
'உனக்கு எதாசும் புரியுதாய்யா?" ராமசாமியைக்கேட்டார் இன்ஸ்பெக்டர்.
 
"நாக்காலே மூக்கைத் தொடறது சில சினிமாலே பார்த்திருக்கேன். நாக்குக்கும் மூக்குக்கும் கில்லிக்கும் சம்மந்தம் இருக்கு.(பாகம் 1 பார்க்க) கில்லியைப்பத்தி தான் எதோ சொல்ல வந்திருக்காரு"
 
சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீராச்சாமியின் முகம் மாறியது. "எனக்கு வயித்த கலக்குது, பெவிலியன்ல டாய்லெட் இருக்கும், அங்கே போறேன்" என்று அவசரமாக ஓடினார்.
 
கருப்பாயி ராமசாமியைப்பார்த்தாள். "நீதான் ராமசாமியா? எங்க தாத்தன் உன்னப் பத்தி அடிக்கடி சொல்லும். உன்னை இந்த போலீஸ்காரனுங்க அமுக்கப் பாக்கறானுங்க, அதுனாலேதான் அந்த இன்ஸ்பெக்டருக்கு டீயிலே பேதி மாத்திரை கலந்து அவன அப்பீட் பண்ணினேன்"
 
"உங்க தாத்தாவுக்கும் உனக்கும் பேச்சு வார்த்தை கிடையாதா?"
 
"நான் ஒரு நாள் எங்க தாத்தாவை மோசமா பாத்துட்டேன்.. அதுலேர்ந்து அந்தாள் கூட பேசறது கிடையாது"
 
"என்ன பார்த்தே?"
 
"அந்த ஆள் சின்னப்பசங்க கூட சேர்ந்து கில்லி ஆடறதப் பாத்துட்டேன். இந்த வயசுலே கில்லியா கேக்குது கிழவனுக்கு?"
 
"சரி உன் தாத்தா என்னவோ சொல்ல்த் தான் இப்படி கோடு எழுதியிருக்காரு. எதாச்சும் புரியுதா?"
 
"ஒண்ணு மட்டும் புரியுது. 3 X டூஸ்கொயர் னா 12 தானே வரும்? அந்த ஆள் எந்நேரமும் 12ஆம் நம்பர் சாராயக்கடையிலேதான் இருப்பாரு. அதத்தான் எழுதியிருப்பார்"
 
"சரி வா உடனே அங்கே போலாம்"
 
12 ஆம் நம்பர் சாராயக்கடைக்கு போனதும் அங்கே ஒரு ஆள் - "நீ கருப்பாயிதானே? ரங்கம்பேத்தி?"
 
"ஆமாம்"
 
"உன் தாத்தா இதை உன் கையிலே கொடுக்கச் சொன்னாரு" என்று ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான்
 
தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த ராமசாமி "ஆ.. பிடிச்சுட்டேன்! ரதணின்னா என்னான்னு கண்டுபிடிச்சுட்டேன்!"
 
அத்தியாயம் 4
 
துபாயில் ஐ சி சி தலைமையகம்.
 
"சார், நல்ல வேளை சார், ரங்கன் செத்துட்டான். அவன் மட்டும் பயமுறுத்தின மாதிரி விஷயத்தை எல்லாம் வெளிப்படுத்தி இருந்தான்னா!"
 
" கவலைப்படாதே, நம்ம பக்கம் இப்போதைக்கு ஸ்ட்ராங் தான்."
 
"இல்ல சார். நெனச்சுப் பாக்கவே பயமா இருக்குது. அந்த உண்மைகள் மட்டும் வெளிய வந்திருந்தா.. வெஸ்ட் இண்டீஸ்லே வேர்ல்ட் கப் நடக்குமான்றதே சந்தேகம்.. இல்லையா?"
 
"ரங்கனை கவனிச்சது மட்டும் போதாது. ராமசாமின்னு ஒரு கில்லி எக்ஸ்பர்ட்டும் என்னவோ தேடறானாம். தகவல் வந்தது. அவன் கைக்கு எந்த ரகசியமும் கிடைச்சுறக்கூடாது"
 
"சரி சார் அவனையும் கவனிக்கச் சொல்லிடறேன்"
 
அத்தியாயம் 5
 
"ஆமா, ரதணினா என்ன?"
 
"திருப்பிப்போட்டுப் பாரு - ரதணி - தரணி - யாரு தரணி? கில்லி பட டைரக்டர்! கில்லி பத்திதான் எதோ சொல்ல வந்திருக்காரு உங்க தாத்தா; அவர் வயசாயும் கில்லி ஆடறாருன்னா அவர் கில்லி சங்கத்துலே முக்கியமான ஆளாத்தான் இருக்கணும். புனித கில்லி பத்தியும் அவருக்குத் தெரிஞ்சிருக்கலாம்!"
 
"புனித கில்லியா - அப்படீன்னா?"
 
"எல்லாத்தையும் ஒரே பாகத்துலே சொல்லி முடிச்சுட முடியுமா? அடுத்த பாகத்துக்கு மிச்சம் வைக்க வேணாமா?"
 
"அப்புறம் காலன்னா?"
 
"அதையும் திருப்பிப் போடு - லகான்! கிரிக்கெட் பத்திய படம்!  கில்லிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்மந்தம் இருக்குன்னு சொல்ல வராரு!"
 
"சரி இந்த பேக்கட்லே என்ன இருக்குன்னு பாக்கலாமா?"
 
உள்ளே ஒரு கில்லி இருந்தது. அதன்மேல் MCC என்று எழுதியிருந்தது..
 
"எனக்கு எல்லாம் புரிஞ்சுபோச்சு!" என்றார் ராமசாமி
 
தொடரும்..
 
 

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Suspense thaangalley, aiyah, epdinga ipdi? inspector-kku vayaththa kalakkumbothey englaukkum kalakkara maara oru feeling. arumai.

neenga sonna maara sat-tunu mudichiraatheenga, innum konjam pola eluthunga appu.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குரு. பாக்கலாம் இன்னும் எவ்வளவுதான் இழுக்கறதுன்னு..

நன்றி ஸ்ரீராம்.

தகடூர் கோபி(Gopi) said...

:-))))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபி!

இலவசக்கொத்தனார் said...

ஆமாம். இந்த மாதிரி கதை எழுதும் போதே சினிமாவா வந்தா யாரு எந்த ரோல்ன்னு யோசிப்பாங்களாமே. நீங்களும் யோசிச்சீங்களா? யாரு யாரு எந்த ரோல்? கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம்.

 

blogger templates | Make Money Online