Jan 16, 2007

குமுதம், விகடன், டைம்ஸ் யாராவது இதை வெளியிடுவார்களா?

வெளியிட மாட்டார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இருந்தாலும், வேறு ஒருவர் பெயரில் வெளிவந்தால் இது பதிப்பிக்கப்படும், அதற்கு வரலாறும் இருக்கிறது.

தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைவிட, யாரால் எழுதப்பட்டிருக்கிறது என்பதைத் தான் அதிகம் கவனிக்கிறது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, இதை வெளியிடுகிறேன்.

தோய்க்க:

சட்டை - 3

பேண்ட் - 2

பட்டுப்புடவை - 1

ஸ்கூல் யூனிபார்ம் - 3

தேய்க்க:

சட்டை - 2

சுடிதார் - 2

சுஜாதாவின் லாண்டரிக்கணக்கை வெளியிட்ட சாவியே, இதை வெளியிடத் துணிச்சல் இருக்கிறதா???

57 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

நீருமா?

நல்லாயிருங்கடே!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கொத்தனார்:-)

✪சிந்தாநதி said...

சாவி? இப்பவும் வருதா என்ன? பாத்து ரொம்ப நாளாச்சு...

பினாத்தல் சுரேஷ் said...

வந்தா என்ன வராட்டி என்ன? நமக்கு ஒரு உப்புமா பதிவுக்கு சான்ஸ், விடாம புடிச்சுகிட்டேன்:-)) வருகைக்கு நன்றி சிந்தாநதி.

Anonymous said...

ம்ம் சரி சரி , எந்தா சாரே.. நிங்களும் இந்த ஜோதியில் ஐக்கியமாயிட்டோ. குருவாயூரப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஅ

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க இளா! குருவாயூரப்பனெல்லாம் எதுக்கு? நமக்குள்ளேயே பேசித் தீத்துக்கலாம்;-)

Anonymous said...

http://vivasaayi.blogspot.com/2007/01/blog-post_16.html

ஜோடியில ஐக்கியமாயிட்டோம்ல

பினாத்தல் சுரேஷ் said...

இளா - விஸ்டா வருமா வராதா? அதிலே எதாச்சும் ஜாதீயக்குறியீடு (பக்) இல்லாம இருக்குமா?

Anonymous said...

There is one place where you can get this published for sure: a laundry that is closest to your residence ;-).
Just kidding, but a good one though!

Anonymous said...

//இளா - விஸ்டா வருமா வராதா? அதிலே எதாச்சும் ஜாதீயக்குறியீடு (பக்) இல்லாம இருக்குமா?//
வந்தாச்சுங்க. அடுத்த வாரம்னு நினைக்கிறேன். அதுக ஜாதீயம் இருக்குமான்னு தெரியாது. ஆன அலுமினியம் பூசுனாப்ல இருக்குங்க கலரெல்லாம்

Anonymous said...

//இளா - விஸ்டா வருமா வராதா? அதிலே எதாச்சும் ஜாதீயக்குறியீடு (பக்) இல்லாம இருக்குமா?//
வந்தாச்சுங்க. அடுத்த வாரம்னு நினைக்கிறேன். அதுல ஜாதீயம் இருக்குமான்னு தெரியாது. ஆன அலுமினியம் பூசுனாப்ல இருக்குங்க கலரெல்லாம்

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க அனானி,

உங்க ஊர் லாண்டரிலே பப்ளிஷ் எல்லாம் பண்ணுவாங்களா? எங்க ஊர்லே சும்மா கேட்டுகிட்டு போயிடுவாங்க:-) துணி திரும்பறதும் திரும்பாததும் பூர்வ ஜன்ம பலன்,.

பினாத்தல் சுரேஷ் said...

அலுமின் - ஈயம் இருக்கும்னு சொல்றீங்க;-)

Anonymous said...

//அலுமின் - ஈயம் இருக்கும்னு சொல்றீங்க;-) //
அல்-லு-மின் ஈ-யெம் இப்படி இருந்தா என்ன ஈயம்?

பினாத்தல் சுரேஷ் said...

//அல்-லு-மின் ஈ-யெம்//

அய்யா! நீங்க ஆரியம் பிடிக்காதுன்னு சொன்னப்பவே தெரிஞ்சிருக்கணும்.. உள்குத்தோ உள்குத்து சாமியோவ்!

Anonymous said...

//துணி திரும்பறதும் திரும்பாததும் பூர்வ ஜன்ம பலன்//

இதுல பூர்வ ஜன்ம பலன் எங்கே இருந்துங்க வருது. எல்லாருக்கும் எப்பவுமே இருக்கனும். போகவே கூடாது. கூடவே இருக்கனும் எப்பவுமே.

துணி-துணிச்சல்

பினாத்தல் சுரேஷ் said...

இளா, துணி(ச்சல்) இருக்கறதே பூர்வ ஜன்ம பலன் அன்றோ?

Radha Sriram said...

சுரேஷ்,

ரொம்ப hyper aa இருக்கீஙக போல இருக்கு. எதுக்கும் சக்கரை caffeine எல்லாம் பாத்து சாப்டுஙக!!!
வழக்கம் போல நல்லா ரசிச்சேன்.

இலவசக்கொத்தனார் said...

இளா, எப்பவுமே போகாம இருந்தா அது வெறும் துணிச்சல் இல்லை. அசட்டுத் துணிச்சல்.

எங்க தைரியமா செயல்படுணுமோ அங்க துணிச்சலா இருக்கணும். ஆனா வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு பயந்துதான் ஆகணும். அந்த மாதிரி இடங்களில் துணிச்சலா நின்னா அது நல்லது இல்லை. நகைப்புக்குரியது.

அது போல எல்லா விஷயங்களுக்கும் பயந்துக்கிட்டே இருக்கவும் கூடாது. அது பயந்தாங்குள்ளித்தனம். அது ஆண்மைக்கு அழகில்லை. அதுனால போன துணிச்சலானது திரும்ப வரணும்.

ஆனா அங்க பயப்பட வேண்டும் என்ற உணர்வு வர ஒரு முதிர்ச்சி வேண்டும். அது அவ்வளவு எளிதாக வாய்த்திடாது. அது வாய்க்கப் போன ஜென்மங்களில் புண்ணியம் பல செய்திருத்தல் வேண்டும். இப்பேருண்மையைத்தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பினாத்தலானந்தா அவர்கள்
மிக எளிமையாய்

//துணி திரும்பறதும் திரும்பாததும் பூர்வ ஜன்ம பலன்,.// எனச் சொல்லி இருக்காரு.

குருவே சரணம்!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ராதா ஸ்ரீராம். சக்கரை கட்டுப்பாட்டிலே தான் இருக்கு, கொலஸ்ட்ரால் சமீபத்துலே செக் பண்ணலே:-))

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா ஆஹா ஆஹா..

இப்படி ஒரு சீடனைத்தான் இவ்வளவு நாளாய் தேடிக்கொண்டிருந்தேன் கொத்தனாரே!.

போற போக்கைப் பார்த்தா நீங்க ரஜினி பேச்சுக்கே உரை எழுதலாம் போல இருக்கே!

இலவசக்கொத்தனார் said...

//இப்படி ஒரு சீடனைத்தான் இவ்வளவு நாளாய் தேடிக்கொண்டிருந்தேன் கொத்தனாரே!.//

காலுங்கீழ் இருக்கறது கண்ணுக்குத் தெரியலையாக்கும். :))

//போற போக்கைப் பார்த்தா நீங்க ரஜினி பேச்சுக்கே உரை எழுதலாம் போல இருக்கே!//

குருவின் ஆசீர்வாதங்கள் இருந்தா இதுவும் நடக்கும். :)

ரவி said...

உக்காந்து யோசிப்பீங்களோ ?

Anonymous said...

//அது பயந்தாங்குள்ளித்தனம். அது ஆண்மைக்கு அழகில்லை.//
துணிச்சலும் பயமின்மையும் ஆண்மைக்கு மட்டுமே உரியது என்று சொல்லி, கொத்தனார் தன் ஆணாதிக்க உணர்வை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார். (பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது ;) ) இதற்கு என் யானைக்குட்டி பயங்கரமான பிளிறலுடன் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது..

சுரேஷ்,
பட்டுப் புடவை ஒன்று சரி, அதென்ன மூணு ஸ்கூல் யூனிபார்ம்.. மூணாவது எப்போதிருந்து? சொல்லவே இல்லை ;)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

கண்ணுக்கு கிட்ட இருக்கிறதுதான் ப்ளைண்டு ஸ்பாட்டுலே மாட்டும்!

என் ஆசீர்வாதங்கள் உங்கள் திறனாய்வுக்கு எப்போதும் உண்டு;-)

பினாத்தல் சுரேஷ் said...

செந்தமிழ் மணி (சே, கனவிலிருந்து வெளிய வரவே முடியல:-)) செந்தழல் ரவி,

சீரியஸ் பதிவ சுலபமா போட்டுடலாம். உப்புமா பதிவு போட உக்காந்துதான் யோசிக்கணும்:-))

பினாத்தல் சுரேஷ் said...

வாம்மா பெண் தெய்வம்:-)) (புரியாதவர்கள் சாத்தான் குளத்துப் பக்கம் ஒதுங்கவும்:-))

என்ன சொல்லிவிட்டார் கொத்தனார்..

கம்பராமாயணத்திலே ஒரு பாட்டு வரும்.. உண்மை இல்லை, பொய்யுரை இலாமையால்.. பொய் இல்லாவிட்டால் உண்மைக்குத் தேவை இல்லை.. அதே தியரியை விரித்தால், தெய்வங்களுக்கு பயந்து நடுங்கும் ஆண்களுக்குதானே துணிச்சலின் அருமை தெரியும்? அதைத்தான் விளக்கியிருக்கிறார் எம் சீடன்.

(டேய் பினாத்தல், இந்த கமெண்டுக்கெல்லாம் கம்ப ராமாயணத்திலிருந்து கோட்டா? கலக்குறேடா!)

சட்டை கூடதான் 3 போட்டிருக்கேன், சுரிதார் கூடதான் ரெண்டு போட்டிருக்கேன்! நல்லவேளை அதையெல்லாம் கண்டுக்காம யூனிபார்மை மட்டும் பாத்தியே!

ரவி said...

/////சீரியஸ் பதிவ சுலபமா போட்டுடலாம். உப்புமா பதிவு போட உக்காந்துதான் யோசிக்கணும்:-))///

மெய்தான்..!!!

பினாத்தல் சுரேஷ் said...

ரவி, அனுபவம் பேசுகிறதா?

இலவசக்கொத்தனார் said...

//துணிச்சலும் பயமின்மையும் ஆண்மைக்கு மட்டுமே உரியது என்று சொல்லி, கொத்தனார் தன் ஆணாதிக்க உணர்வை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார்.//

அம்மிணி, இந்த மாதிரி புகை போட்டு விடறது எப்படின்னே உக்கார்ந்து யோசிப்பீங்களோ? இன்னைக்கு தமிழ்மணத்துல வர விமர்சனப் பதிவுகளில் பாதி Point of View பதிவுகள்தான். அதாவது என்ன எழுதி இருக்காங்க அப்படிங்கறது அவசியமில்லாத ஒண்ணு. அதை நமக்கு வேணுங்கற மாதிரி திருப்பி எழுதுனவன் முதுகுல எப்படிடா துணி தோய்க்கலாம் என்றுதான் அலைவது.

அந்த மாதிரித்தான் இருக்கு நீங்க சொல்லறதும். நான் என்ன ஆணுக்கா அழகுன்னு போட்டேன். ஆண்மைக்கு அழகுன்னு போட்டு இருக்கேங்க. ஆண்மை என்பது ஒரு குணம். அதுவும் ஆண்மை என்பது ஆணுக்கு மட்டுமான குணாதிசயம் இல்லை. அது இரு பாலரிடமும் இருக்க வேண்டியது. சொல்லப்போனால் இப்போ எல்லாம் பெண்களிடம்தான் அதிகம் இருக்கிறதாகப் பேச்சு.

அது புரியாமல் எப்படிடா இங்க பெண் ஈய முலாம் பூசலாம் என்ற உங்கள் பார்வையில் இந்த ஆண்மை, ஆணாகப் பட்டதில் ஆச்சரியமே இல்லை. அதனால் இந்த கலர் கண்ணாடி வழியாத்தான் பார்ப்பேன் என்று அடம் பிடிக்காமல், நிஜத்தை அதன் வண்ணத்திலே பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அடுத்தவர் சொல்ல வந்த விதம் புரியும்.

இலவசக்கொத்தனார் said...

பார்ட் 2

இந்தம்மா இங்க வருவாங்கன்னு எதிர் பார்க்கலையே. எது எதோ எழுதி சுத்தி விட்டாச்சு. இனிமே என்ன ஆகுதுன்னு பார்ப்போம். ஒரே ஒரு பயம்.

//சொல்லப்போனால் இப்போ எல்லாம் பெண்களிடம்தான் அதிகம் இருக்கிறதாகப் பேச்சு. // இதையும் நம்ம தடகள சாந்தி மேட்டரையும் கன்பியூஸ் பண்ணி அடுத்த பொது மாத்து போடாம இருந்தா சரி. :)))

இலவசக்கொத்தனார் said...

//
(டேய் பினாத்தல், இந்த கமெண்டுக்கெல்லாம் கம்ப ராமாயணத்திலிருந்து கோட்டா? கலக்குறேடா!)
//

குருவே சரணம்.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார் - பார்ட் ஒண்ணு:

எதோ கொளுத்திப் போட்டிருக்கீங்க, என்ன எழுதியிருக்கீங்கன்னு புரியலை, முழுசாப்படிக்கலை.. இருந்தாலும் நீங்க நம்ம ஆளுன்றதால, உடன்படுகிறேன்:-) பதில் சொல்ல வேண்டியது தெய்வம்தானே!

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார் பார்ட் - ரெண்டு:

அய்யோ இதைப்படிச்சா முதலுதுலே எதோ விவகாரமா சொல்லி இருக்கீங்க போல இருக்கே.. சரி.. என்ன ஆனாலும் பாத்துக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

//என்ன எழுதியிருக்கீங்கன்னு புரியலை, முழுசாப்படிக்கலை.. //

படிக்காததுனால் புரியலையா? இல்லை படிச்சும் புரியலையா? உமக்கே புரியலைன்னா நம்ம பிளான் சக்சஸ்தான்! மக்கா அந்த பியர் பாட்டிலை ஓபன் பண்ணுங்கடா, அண்ணன் தப்பிச்சுட்டாருல்ல!

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார் - பார்ட் 3:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி:-)))

இலவசக்கொத்தனார் said...

//என்ன ஆனாலும் பாத்துக்கலாம்.//

இதுதான்யா நல்ல குருவிற்கு அழகு. என்ன ஆனாலும் பாத்துக்கலாமுன்னு சொல்ற பாரு, இதுதான்யா ஆண்மை.

(அடிக்க வரவங்க - ப்ளீஸ் நோட் தி பாயிண்ட். தப்பா என்னைத் தேடி வந்துராதீங்க.)

இலவசக்கொத்தனார் said...

//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி:-)))//

க.க.க.போ. :))

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

உங்கள் பின்னூட்டத்துக்கான என் புரிதலின் தேடலில் கிடைத்த விழுமியங்களைப்பற்றி முழுமையான கருத்தொருமிப்பின் பரிணாமங்களை அலசி உள்வாங்க காலதேச வர்த்தமானங்களின் இன்றியமையா ஒத்துழைப்பு அவசியம் என்பதுதான் நான் சொல்ல வந்தது.

(குருன்னா சும்மாவா:-))

பினாத்தல் சுரேஷ் said...

//(அடிக்க வரவங்க - ப்ளீஸ் நோட் தி பாயிண்ட். தப்பா என்னைத் தேடி வந்துராதீங்க.)
//

உன்னைத் தாண்டிதானே என்னை அடைய முடியும் சீடா?

Anonymous said...

//உங்கள் பின்னூட்டத்துக்கான என் புரிதலின் தேடலில் கிடைத்த விழுமியங்களைப்பற்றி முழுமையான கருத்தொருமிப்பின் பரிணாமங்களை அலசி உள்வாங்க காலதேச வர்த்தமானங்களின் இன்றியமையா ஒத்துழைப்பு அவசியம் என்பதுதான் நான் சொல்ல வந்தது.//

ரொம்ப தெளிவா புரிஞ்சிருச்சு.... :)

இலவசக்கொத்தனார் said...

//உங்கள் பின்னூட்டத்துக்கான என் புரிதலின் தேடலில் கிடைத்த விழுமியங்களைப்பற்றி முழுமையான கருத்தொருமிப்பின் பரிணாமங்களை அலசி உள்வாங்க காலதேச வர்த்தமானங்களின் இன்றியமையா ஒத்துழைப்பு அவசியம் என்பதுதான் நான் சொல்ல வந்தது.//

மீண்டும் குருவே சரணம். ஒரு வரியில அசுரன் பதிவு ஒண்ணு படிச்சா வர எபெக்ட்டை கொண்டு வந்துட்டீங்களே. :))

(அசுரன் சார், சும்மா ஒரு விளையாட்டுக்கு. கோபிச்சுக்காதீங்க. உங்களோட தமிழும் சில சமயம் புரியறது இல்லையா..ஹிஹிஹி)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ராம்..

கந்தா முனியா ஜேம்ஸ்.. இவருக்கு இந்த கமெண்ட் புரிஞ்சிருச்சாம்டா..இப்படி ஒரு ஆளைத்தான தேடிகிட்டிருந்தீங்க?

இலவசக்கொத்தனார் said...

//உன்னைத் தாண்டிதானே என்னை அடைய முடியும் சீடா?//

அதெல்லாம் அப்படி நிச்சயமா சொல்ல முடியாது. நார்மலா கால் அடியில கிடப்போம். ஆனா ஒரு சண்டையின்னு வந்தா அப்படியே எஸ் ஆகிட மாட்டோம்.....அதனால அதை நம்பி முதுகைக் காமிச்சிக்கிட்டு இருக்காதீங்க.

பினாத்தல் சுரேஷ் said...

//மீண்டும் குருவே சரணம். ஒரு வரியில அசுரன் பதிவு ஒண்ணு படிச்சா வர எபெக்ட்டை கொண்டு வந்துட்டீங்களே. :))//

நம்ம தொழிலே அதுதானே.. நமக்குன்னு ஒரு ஸ்டைலும் இல்லாம மத்தவங்களை காப்பி அடிச்சே காலத்தை ஓட்டுறது:-))

இலவசக்கொத்தனார் said...

//கந்தா முனியா ஜேம்ஸ்..//

கந்தா - சரி
முனியா - சரி
ஜேம்ஸ் - சரி
என்னமோ மிஸ்ஸிங் மாதிரி தெரியுதே. இன்னுமொரு பூனைக்குட்டி வெளிய வந்திருச்சோ? :)))

பினாத்தல் சுரேஷ் said...

தோழா, சீடா, எனக்கு உளவுப்படை தகவல் தராதா ஆட்டோ வருகிறதென்று.. எப்படியும் நீதான் முதலில்..

இலவசக்கொத்தனார் said...

//நம்ம தொழிலே அதுதானே.. நமக்குன்னு ஒரு ஸ்டைலும் இல்லாம மத்தவங்களை காப்பி அடிச்சே காலத்தை ஓட்டுறது:-))//

நீங்களாவது காப்பி அடிச்சு சொந்த சரக்கு எல்லான் எடுத்து விடறீங்க. நாங்க ஒரு படி மேல போயி வெறும் கட் பேஸ்ட் வேலைதான். இப்போ என்ன சொல்றீங்க, இப்போ என்ன சொல்றீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

//என்னமோ மிஸ்ஸிங் மாதிரி தெரியுதே. இன்னுமொரு பூனைக்குட்டி வெளிய வந்திருச்சோ? :))) //

இங்கே பூனைக்குட்டி எல்லாம் விக்கிறதில்லை.. வேற இடம் தேடுங்க

இலவசக்கொத்தனார் said...

//தோழா, சீடா, எனக்கு உளவுப்படை தகவல் தராதா ஆட்டோ வருகிறதென்று.. எப்படியும் நீதான் முதலில்..// - குரு

//உன்னைத் தாண்டிதானே என்னை அடைய முடியும் சீடா?// - குரு

No Comments - சிஷ்யக்கேடி, ச்சீ சிஷ்யக்கோடி!

இலவசக்கொத்தனார் said...

சரி 50 ஆயிருச்சு. இன்னைக்கு ஆட்டம் க்ளோஸ். மீண்டும் அடுத்த முறை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் நண்பன்.....கொத்ஸ் கொத்ஸ் கொத்ஸ்...

பினாத்தல் சுரேஷ் said...

//நீங்களாவது காப்பி அடிச்சு சொந்த சரக்கு எல்லான் எடுத்து விடறீங்க.// அடிக்கறது காப்பி - இதிலேன்ன சொந்தச்சரக்கு???

பினாத்தல் சுரேஷ் said...

////தோழா, சீடா, எனக்கு உளவுப்படை தகவல் தராதா ஆட்டோ வருகிறதென்று.. எப்படியும் நீதான் முதலில்..// - குரு

//உன்னைத் தாண்டிதானே என்னை அடைய முடியும் சீடா?// - குரு

No Comments - சிஷ்யக்கேடி, ச்சீ சிஷ்யக்கோடி!
//

x - y - z இதில் x அடிக்க வருபவன், y சீடன், z - குரு

x யாரை முதலில் பார்ப்பான்?

யாரைத் தாண்டி யாரை அடைய வேண்டும்?

லாஜிக்கெல்லாம் கரெக்டாதான் இருக்கு கொத்தனார்..

இலவசக்கொத்தனார் said...

உம்மை மாதிரி ப்ளாஷ் விளையாட்டு எல்லாம் நமக்குத் தெரியாது சாமி. ஆனா z வரும் போது y வந்து x பின்னாடி ஒளிஞ்சுக்கறா மாதிரி நீங்களே போட்டுக்குங்க. அப்போ யாரு மேல அடி விழும்?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நன்றி நன்றி.. இந்த ஏழையை மதித்து 50 காட்டிய பின்னூட்ட குருவே..

Leo Suresh said...

பெனாத்தலாரே பதிவைவிட பின்னூட்டங்கள் கலக்கலாயிருந்தது
லியோ சுரேஷ்

பினாத்தல் சுரேஷ் said...

//பெனாத்தலாரே பதிவைவிட பின்னூட்டங்கள் கலக்கலாயிருந்தது
லியோ சுரேஷ்//

அப்ப பதிவை வெளியிடாட்டியும் பின்னூட்டங்களையாவது வெளியிட சிபாரிசு பண்ணுங்களேன்:-)))

 

blogger templates | Make Money Online