Mar 5, 2007

ஆமாங்க - நீங்க கேள்விப்பட்டது உண்மைதான் (05 Mar 2007)

நான் இல்லை என்று வாதாடியிருக்கலாம். ஆனால் உண்மை சொல்ல முடிவெடுத்துவிட்டேன்!

வேறு ஒரு பதிவில் நான் எழுதியவற்றைப் படித்து மன உளைச்சல் அடைந்திருக்கும் சக வலைப்பதிவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆமாம். சென்னைக் கச்சேரி பதிவில், வலைக்கிரிக்கெட் அணியைப் பற்றி இகழ்ச்சியாக எழுதியிருந்தது, வலைப்பதிவர்கள் கிரிக்கெட்டில் உலகக்கோப்பை என்ன உப்புக்கருவாடு கூட வெல்ல முடியாது என்று எழுதியது நானேதான். என் மெயில் எனப்போடப்பட்டிருந்ததை நான் மறுத்திருக்க முடியும்.. ஆனால் உண்மை சொல்ல வேண்டுமே!

ஏன் அப்படி எழுதினேன்? வலைப்பதிவர்களை விடுத்து வேறு பிரபலங்களை அணியில் சேர்த்தால் காமெடிக்கு வசதியாக இருக்கும் என்பதால்தான். பதிவுலகில் நீங்களெல்லாம் சூப்பர் ஸ்டார்கள்தான். ஆனால் கோப்பை வெல்ல இன்னும் சிலத் தகுதிகள் தேவையாக இருப்பதாக கருதியதால் பிரபலங்களை அழைத்து வர நேரிட்டது.

அப்பதிவின் (இப்பதிவுக்கும்) நோக்கம் நகைச்சுவை மட்டுமே என்பதால் என்னை மன்னித்து விடுவீர்கள் தானே?

23 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ஓஓஓஓஓஒ நீங்க சொல்வது "இந்தப்" பதிவைப் பற்றியா ? நான் "அந்தப்" பதிவைப்பற்றி என்று நினைத்துக் கொண்டேன். :-)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க அனானி.

"அந்தப்"பதிவைப் பத்தி சொல்ல என்ன இருக்கு? காமெடியெல்லாம் சிரிக்க மட்டும்தான். கருத்து சொல்ல இல்லை ;-)

கதிர் said...

இந்த பதிவை கன்னா பின்னாவென எதிர்க்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

மன்னிப்பு கேக்கறதை ஏன் கன்னா பின்னாவென்று எதிர்க்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா தம்பி?

கதிர் said...

இந்த பதிவில் இருக்கும் உள்குத்து என்னவென்று தெரியாமலே பின்னூட்டிவிட்டேன்.

இப்பலாம் என்ன நடக்குதுன்னே தெரியமாட்டேங்குது. :((

அந்த கன்னா பின்னா எதிர்ப்பு, கன்னா பின்னா ஆதரவாக மாறுகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

வா ராசா, அப்படிப்போடுறா என் ராஆசா!!

Anonymous said...

தல,

கலக்குறியே...அங்கையும் சரி...இங்கையும் சரி

அனானி

மணிகண்டன் said...

//அப்பதிவின் (இப்பதிவுக்கும்) நோக்கம் நகைச்சுவை மட்டுமே என்பதால் என்னை மன்னித்து விடுவீர்கள் தானே?
//

என்னங்க நீங்க, இதுக்கெல்லாம் போய்?

இதுல உள்குத்து எதுவும் இல்லையே:)))

மணிகண்டன் said...

//"அந்தப்"பதிவைப் பத்தி சொல்ல என்ன இருக்கு? காமெடியெல்லாம் சிரிக்க மட்டும்தான். கருத்து சொல்ல இல்லை ;-)
//

என்னை வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ண்லையே??

:)))

பொன்ஸ்~~Poorna said...

ஐய்யா... டாபிகல் பதிவுக்கு உங்களை விட்டா அடிச்சிக்க ஆளில்லை.. :))) அடிச்சி ஆடுங்க :)

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

//தல,

கலக்குறியே...அங்கையும் சரி...இங்கையும் சரி

அனானி //

இந்த அங்கேன்றது தேவ் பதிவைச் சொன்னா நன்றி. வேற எதையாவதுன்னா.. ஸாரி.. தப்பா யோசிக்காதீங்கண்ணா!!

Anonymous said...

"""""இந்த அங்கேன்றது தேவ் பதிவைச் சொன்னா நன்றி."""""

ஆமாமாம் நானும் அந்த தேவ பதிவைப் பத்திதான் சொல்றேன்.... எங்கையோ ஒரு புள்ளி வைக்க விட்டுப் போச்சு..தேடிக் கண்டு புடிச்சு நீங்களே வச்சுக்குங்க தம்பி :)""

அனானி

பினாத்தல் சுரேஷ் said...

மணிகண்டன்,

அப்பதிவு, இப்பதிவு எல்லாத்தையும் குழப்பிகிட்டு இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். ஒரு சின்ன டிக்ஷனரி:

//அப்பதிவின் (இப்பதிவுக்கும்) நோக்கம் நகைச்சுவை மட்டுமே என்பதால் என்னை மன்னித்து விடுவீர்கள் தானே?//

இதில் - அப்பதிவு - தேவ் பதிவு
இப்பதிவு - இந்தபினாத்தல் பத்கிவு

//நீங்க சொல்வது "இந்தப்" பதிவைப் பற்றியா ? நான் "அந்தப்" பதிவைப்பற்றி என்று நினைத்துக்
கொண்டேன். :-)//

இதில் இந்தப்பதிவு - தேவ் பதிவு
அந்தப்பதிவு, சம்மந்தம் இல்லாதைன்னொரு பதிவு

புரிந்ததா? எனக்கு குழம்ப ஆரம்பிச்சிடுச்சி:-(

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ், தாங்க்ஸ்.

நமக்கு உப்புமா போட சான்ஸ் கிடைச்சா விட்டுடுவோமா?

பினாத்தல் சுரேஷ் said...

தேவ இல்லை அங்கேதான் புள்ளி வைச்சு தேவ் பதிவு ஆக்கணும், சரிதானே அனானி அண்ணே! புள்ளிக்குள்ளேயும் உள்குத்து வைக்கிறாங்கப்பா!

அபி அப்பா said...

பந்து பொறுக்கி போட ஆள் தேவை எனில் இங்கே அனுகவும்!!

லக்கிலுக் said...

//"அந்தப்"பதிவைப் பத்தி சொல்ல என்ன இருக்கு? காமெடியெல்லாம் சிரிக்க மட்டும்தான். கருத்து சொல்ல இல்லை ;-)//

"எந்தப்" பதிவுன்னு சொல்ல முடியுமா?

எனக்கும் வாயிருக்கு. நானும் சிரிக்கணும் ;-)

கார்த்திக் பிரபு said...

enna kodumaia saravana?

Prabu Raja said...

:)

பினாத்தல் சுரேஷ் said...

அபி அப்பா,

உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் ;-)

லக்கிலுக்,

உங்களுக்கு.. தெரியாது.. நம்பச்சொல்றீங்களா?

கார்த்திக் பிரபு..

its all in the game senthil.

பிரபு ராஜா,

டாங்க்ஸ்.

Anonymous said...

பெங்களூர் கிளையில் இருந்து காமெடியாக யோசித்து போடப்பட்ட பின்னூட்டம் இன்னும் வெளிவரவில்லையே. பார்க்கிறீரா ?

Anonymous said...

முந்தைய பின்னூட்டம் போட்டது அ.மு.க

பினாத்தல் சுரேஷ் said...

அ மு க,

உங்கள் பின்னூட்டம் வெளியிடப்படாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அனுமதிக்கக்கூடிய பின்னூட்டம்தான். காரணம் தனிமெயிலில் தொடர்பு கொண்டால் சொல்கிறேன்.

மற்றவர்களுக்கு - அந்த பின்னூட்டம் தனிநபர் தாக்குதலோ, ஒப்புக்கொள்ள முடியாத மொழியிலோ, என்னைக் காயப்படுத்துவதோ, உள்குத்து கொண்டதோ இல்லை! என் சொந்தக் காரணங்களுக்காக மட்டுமே அதை அனுமதிக்கவில்லை!!!!!

 

blogger templates | Make Money Online