Dec 12, 2007

எழுத்தறிவித்தல் - உதவுங்களேன்!!!

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்!

எழுத்தறிவித்தல் அப்படின்னா எழுத்தைப் பத்தின அறிவிப்பு எனத்தானே பொருள்? இந்தப் பதிவும் அதுதான்:-)

மேட்டர் ஒண்ணும் பெரிசா இல்லைங்க, சர்வேசன் ஒரு சிறுகதைப் போட்டி அறிவிச்சாலும் அறிவிச்சார், நீண்டநாளா எழுதாத சிறுகதைகள் எல்லாம் முட்டிக்கிட்டு வந்து ஒண்ணுக்கு மூணா எழுதித் தள்ளிட்டேன். ஆனா சர்வேசன் ஒண்ணுதான் ஏத்துப்பாராமே..

எழுதினவன்ற முறையில எனக்குப் பிடிக்காத கதையை பதிந்திருக்கவே மாட்டேன் - எனவே மூணுமே எனக்குப் பிடிச்ச கதைகள்தான். ஹிட்ஸ், பின்னூட்டம் -- இது எல்லாமே மூணு கதைக்கும் ஏறத்தாழ சமமாவே இருக்கு.

அதனால, சர்வேசன் பாணியிலேயே ஒரு சர்வே வச்சுடலாம்னு..

படித்த பிறகே வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

கதை ஒன்று: காமத்திற்கும் கண் உண்டு

கதை இரண்டு : கடன் அட்டை

கதை மூன்று: காட்டு வழி போற தேவ் நீ கவலப்படாதே

படிச்சுப் பாத்து, வாக்களியுங்கள் என கரம் சிரம் தாழ்த்தி வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்.


21 பின்னூட்டங்கள்:

நாகை சிவா said...

போட்டாச்சு போட்டாச்சு

பினாத்தல் சுரேஷ் said...

நாகை சிவா,

நன்றி நன்றி..

பின்னூட்டம் போடலேன்னா பரவாயில்லை.. வாக்கு குத்திட்டாவது போங்க மகாஜனங்களே! 8 வோட்டுதான் வந்திருக்கு.. 100ஆவது வந்தாதான் தீர்மானிக்கமுடியும்..

இலவசக்கொத்தனார் said...

என்னால முடிஞ்சது ஒரு பி.க.

ச.சங்கர் said...

சொல்லியாச்சு :)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கொத்தனார்..

நன்றி ச சங்கர்.

Nimal said...

மை வோட்டு 4 கடன் அட்டை

கோபிநாத் said...

போட்டாச்சு தல ;)

அரை பிளேடு said...

நம்ம வோட்டு வந்தியத் தேவனுக்கே :))

கொடும்பாளூர் வேளாளரே !!வந்தியத்தேவனையே ரிலீஸ் செய்யும்.

:))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நிமல், கோபிநாத் & அரைபிளேடு.

வெட்டிப்பயல் said...

நம்ம ஓட்டு கடன் அட்டை...
இந்த கதை ரொம்ப நாள் மனசுல நிக்கும்...

ப்ரசன்னா (குறைகுடம்) said...

குத்தியாச்!!!! :-)

seethag said...

penathal

my vote is for kaamaththukkum kan undu. believe me that story is about our deeper,subtle ,persisting conflicts and prejudices being passed on for generations.

unable to write in tamil due to fonts issue.my apologies

Anonymous said...

என்னுடைய ஒட்டு கடன் அட்டைக்குதான். நான் உங்கள் கதைகளை முன்னமே படித்து வந்தேன். இன்று தான் பின்னூட்டமிட வாய்ப்பு கிடைத்தது...இப்போது உங்கள் பழைய பதிவுகளை படித்து வருகிறேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்னவன்...

Anonymous said...

என்னுடைய ஒட்டு கடன் அட்டைக்குதான். நான் உங்கள் கதைகளை முன்னமே படித்து வந்தேன். இன்று தான் பின்னூட்டமிட வாய்ப்பு கிடைத்தது...இப்போது உங்கள் பழைய பதிவுகளை படித்து வருகிறேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்னவன்...

Anonymous said...

நம்ம ஒட்டு கடன் அட்டைக்கு தான் :)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வெட்டிப்பயல், ப்ரசன்னா, சீதா, இன்னவன் & அருண்.

புரட்சி தமிழன் said...

நான் ஒரு கள்ள ஓட்டும் சேர்த்து போட்டச்சி

புரட்சி தமிழன் said...

நம்ம ஓட்டும் கிரிடிட் கார்டுக்குத்தான்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி புரட்சித் தமிழன்.

பாச மலர் / Paasa Malar said...

என்னுடைய வாக்கு .."காமத்திற்கும் கண் உண்டு"

Anonymous said...

I totally agree with Seetha. So my vote too is for Kamthirkum kan undu.

anu

 

blogger templates | Make Money Online