Nov 2, 2009

பினாத்தல் வரலாற்றில் முதல் முறையாக!

முதல் முறையாக அச்சில் ஒரு சிறுகதை.



என் கதை அச்சாகவேண்டும் என்று வெறியாய் நான் என்றும் செயல்பட்டதில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதி, பலமைல்தூர அஞ்சலில் போட்டு மறந்து, ஆரம்ப ஆர்வங்கள் எல்லாம் காணாமல் போய், வரவில்லையா சரி என்று சமாதானப்படுத்திக்கொண்டதும் பலமுறை அல்ல - இரண்டோ மூன்றோதான் எழுதினேன்.

பின் வலைப்பதிவுக்கு வந்தபின் பதிவின் உடனடிப் பதிப்பும் அதைவிட உடனடி விமர்சனமும் அச்சிற்கான காத்திருத்தலை தேவையற்றதாக்கியது.

இருந்தாலும் உள்ளுக்குள் அந்த ஏக்கம் ஒரு மூலையில் தொக்கிக் கொண்டே இருந்தது.

அச்சுக்கு கதை அனுப்புவது என்பது வேறு ஒரு வகை. அதற்காகச் செய்யப்படவேண்டிய ஜிகினாக்கள் வேறு என்று சொல்லிக் கொடுத்து அதைச் சாத்தியப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி.

குங்குமம் 02-11-2009 தேதியிட்ட இதழில் “கைவண்ணம்” என்ற பெயரில் அச்சாகியுள்ளது. அதன் நகலை இங்கே குங்குமத்துக்கு நன்றியுடன் கொடுத்துள்ளேன்.

 

blogger templates | Make Money Online