தேர்வு முடிவுகள் வந்துவிட்டதில் இன்னிக்கு நீ, நாளைக்கு நான் என்றிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.
பரபரப்பான செய்திகளை முந்தித்தரும் தினக்குழப்பம் நாளிதழில் இரண்டு செய்திகளும் மாறிமாறி வர, குழம்பிப்போயிருக்கிறார்கள் நிருபர்களும் ஆசிரியர்களும். எந்தச் செய்தியை எப்படி எழுதுவது என்ற குழப்பத்தில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் செய்த வன்முறையில்.. இதோ அந்த ஸ்க்ரீன்ஷாட்.
பிகு: க்ளிக்கிப்பார்த்தால் படிக்கும் அளவுக்குத் தெரியும்.
May 9, 2011
தேர்வா? தேர்தலா?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள்
Mar 23, 2011
எங்கே தேடுவேன்.. தலைவனை எங்கே தேடுவேன்.. (Flash - தேர்தல் ஸ்பெஷல்)
பினாத்தல்கள் வழங்கும் மற்றுமொரு ஃப்ளாஷ் குவிஸ்.
தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று புரட்சித்தலைவர் பாடிவிட்டுப்போய்விட்டார். ஆனால் அந்தத் தலைவன் / தலைவி எங்கே இருக்கிறார்?
இந்த ஃப்ளாஷில் ஒருவேளை இருக்கலாம் :-)
விளையாட்டு ரொம்ப சிம்பிள். பதினாறு அரசியல்வாதிகள் போட்டோக்கள் ஃப்ளாஷின் வலதுபக்கத்தில் இருக்கும். பத்து கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான அரசியல்வாதியை க்ளிக் செய்து உறுதி செய்து அடுத்த கேள்விக்குச் செல்லவேண்டியதுதான்.
வெயிட்.. வாட் இஸ் திஸ் பொருத்தமான?
அதற்குத்தான், க்ளூ தர ஃப்ளாஷின் இடதுபக்கத்தில் ஒரு சிறு அனிமேஷன் க்ளிப்; அந்த அசைபடத்தில் வரும் விஷயங்கள் எந்த அரசியல்வாதிக்குப் பொருத்தம் என்பதைத் தேர்ந்தெடுத்து, க்ளிக்க வேண்டும்.
கடைசியில் வரும் கோடை எனக்கு அனுப்பினால், அதை நான் இங்கே அப்டேட் செய்துவிடுவேன்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 67 பின்னூட்டங்கள்
வகை அரசியல், நையாண்டி, போட்டி, ப்ளாஷ், விளையாட்டு
Feb 13, 2011
மயிர் நீப்பின்..
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 20 பின்னூட்டங்கள்
Apr 1, 2010
Dec 14, 2009
திருத்த வேண்டிய பதிவு
சரியோ தவறோ, என் நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன் என்னும் கெட்ட எண்ணம் எனக்குக் கிடையாது. மாறியே ஆகவேண்டும் என்றால் அதைப் பொதுவாகச் சொல்வதில் கூச்சமும் கிடையாது; இதோ அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம். இது நான் முன்னால் (2007 மே) எழுதிய சிறுகதை, மாற்றத்தை வேண்டியது. நம்பிக்கை சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது. எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும். இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன். "யப்பா! 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே" என்றாள். "நீ பேசியே இருக்கலாமில்ல? நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன். இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்" "நான் எப்படி பேச முடியும்? என் வீட்டு நிலைமை தெரியுமில்ல?" "எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது?" "பணம் பேச்சு எடுக்காத! அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது" "சொல்லு. வேற என்ன விஷயம்?" "நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம் இல்ல? அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம் கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு திக்குனு இருந்திச்சு" "அந்த சோடாபாட்டிலா? அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து ஏன் பயப்படறே?" "எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும்? அப்பாகிட்டே வந்து பேசு!" "இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்" ஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும் போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும். "ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா?" "நான் தான் பேசறேன். கோபிதானே?" "ஆமாம் சார்" "உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது" "ப்ராப்ளமா சார்?" "பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே" "எப்ப சார் அவர் திரும்பி வருவார்?" "இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்" ரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது. சரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம். "முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்?" "சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு" "கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்" "ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று." காபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு. "தம்பி, தரகர் வந்திருந்தாருப்பா" "என்ன சொல்றாங்களாம்?" "15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்" "15ஆ! தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு "5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன் கிடைக்கறது கஷ்டம்!" சிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம். "சரி பாக்கறேன். வேற எதுவும்?" "சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா?" "மறுபடியும் வம்பு வலிச்சிருக்கானா? இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்" "சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா" சலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன்? ரம்யா வீட்டுக்கு போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி பிரச்சினைகள். ஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன். "முத்து, கேண்டீன் வர்றயா?" "என் தலைவனையா கேவலப்படுத்தறீங்க?" என்று குண்டாந்தடியை ஓங்க, கேண்டீன் போகும் வழியில் பெட்ரோல் கேனைப் பார்த்தேன். முத்துவும் பார்த்தான். சிரித்துக்கொண்டோம். ”ஓக்கேதானே?” என்றேன். ”பின்ன?” பெட்ரோல் கேனை எடுத்து அவன் என் மேல் சாய்த்தான். நான் அவன்மேல். ”நெருப்புப் பெட்டி இருக்கா?” மூன்றாமவன் தன் சட்டைப்பையில் இருந்து லைட்டரை எடுத்தான். தீ தீ தீ. ஜகஜோதி ஜோதி ஜோதி.. **** முன்னர் கேள்விப்பட்ட விஷயங்களின் படி எழுதிய சிறுகதை. கேள்விப்பட்டது எல்லாமே தவறு என்று நீதிமன்றமே சொன்னபிறகும் என் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது அநியாயம்.
உனக்குத் தெரியாதாம்மா?"ஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள்
Jun 19, 2009
Jun 17, 2009
நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு
Apr 1, 2009
துக்ளக் இணைய இதழ் - இலவசமாய் படிக்க:
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள்
Jan 19, 2009
திருமங்கலம் Millionaire!
"உனக்கு எப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரியும்?"
"எனக்குத் தெரியும்"
"பெரிய பெரிய ப்ரொபஸர்ங்க, ஐ ஏ எஸ் ஆபீஸருங்க எல்லாம் 4 கேள்வி தாண்டறதில்லை.. உனக்கு மட்டும் எப்படி தெரியும்?"
"தெரியும்"
"நீ யாரு? எந்த ஊர்லே இருந்து வந்தே?"
"மதுரைக்குப் பக்கத்துல திருமங்கலம்னு ஒரு கிராமம்.. அங்கேதான் நான் வளர்ந்தது.. டீக்கடை வச்சு பொழைச்சுக்கிட்டிருந்தேன்"
காட்சி மில்லியனேர் செட்டுக்கு மாறுகிறது.. நிகழ்ச்சி நடத்துபவர் ஆரம்பிக்கிறார்:
"வாருங்கள் நாம் மில்லியனர் நிகழ்ச்சி விளையாடலாம்... நம் எதிரே இருப்பது திருமங்கலத்தில் இருந்து வந்திருக்கும் சுடலைமுத்து.. சுடலைமுத்து என்ன செய்றீங்க?"
"டீக்கடை வச்சிருக்கேன்"............(தேவையான அளவு அவரைக் கிண்டல் செய்ததன் பின்)..
"இதோ உங்களுக்கான முதல் கேள்வி.. ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் போட்டிருக்கும்?
அ. இந்திரா காந்தி
ப்ளாஷ் பேக்:
நானும் எல்லா எலக்ஷனிலும் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் தான் ஓட்டுப்போட்டு கிட்டிருந்தேன்.. திடீர்னு ஒரு நாள் டிவியில மட்டும் பாத்த பெரிய மனுஷங்க எல்லாம் ஊருக்கு வந்தாங்க..
வீட்டுக்குள்ள ஒழிச்சு வச்சிருந்த ரேஷன் கார்டு .. வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துகிட்டு ஓடிப்போனேன்.. கும்பலையெல்லாம் விலக்கிட்டு உள்ளே நுழைஞ்சேன்.. அப்ப அதைப்பாத்துட்ட்உ ஒரு பெரிய மனுசன் எனக்கு ரூபாய் நோட்டு ஒண்ணு தந்தாரு.. அதில..
போலீஸ் ஸ்டேஷன்..
கான்ஸ்டபிள் சொல்கிறார்: ஆமாம் சார்.. எனக்கு கூட அப்பதான் 1000 ரூபாய்க்கு நோட்டு இருக்குனே தெரியும்..
மில்லியனர் செட்..
"வாழ்த்துக்கள்.. திருமங்கலம் டீக்கடைக்காரருக்கு 1000 ரூபாய் பரிசு.."
"3000 ரூபாய்க்கான இரண்டாம் கேள்வி.. தயாரா?"
"தயார்"
"மின்சார விளக்கு எரிய முக்கியமான தேவை எது?
அ. நெருப்பு பெட்டி
ப்ளாஷ்பேக்:
"என்னாய்யா டீ போட்டிருக்கே.. ஒரே உப்பா கரிக்குது"
"மன்னிச்சுக்கங்க.. சக்கரையும் உப்பும் பக்கத்துல இருந்துச்சு.. உப்பைப் போட்டுட்டேன் போல.."
"ஒரு மெழுகுவத்தி கொளுத்திக்க வேண்டியதுதானே.."
"எல்லாம் தீந்து போச்சுங்க.. நேத்து வரிக்கும் கரண்டே கட் ஆவலையா? அதனால தேவைப்படல. எலக்ஷன் தான் முடிஞ்சு போச்சே.. இதோ போய் வாங்கி வரேன்"
கரவொலி சத்தம் மில்லியனர் அரங்கை நிறைக்கிறது.
"20000 ரூபாய்க்கான பரிசை வாங்கிச் செல்கிறார் திருமங்கலம் சுடலைமுத்து"
"இவ்வளவு பெரிய அமவுண்டை பார்த்திருக்கிறீர்களா சுடலைமுத்து?"
"எங்கேங்க? எங்க வீட்லே மொத்தம் 2 வோட்டுதான். பக்கத்து வீட்டு பரமர் 10 வோட்டு மொத்தமா வச்சிருந்தான்.. அள்ளிட்டான்"
"கவலைப்படாதீங்க.. நீங்க இங்கேயும் அள்ளலாம்"
"ஆறாவது கேள்வி.. தயாரா?"
"கேளுங்க"
"உளியின் ஓசை படத்தின் கதை வசனகர்த்தா யார்?
அ.கலைஞர்
ப்ளாஷ்பேக்:
"மச்சான் என்னை சினிமாக்கு கூட்டிகிட்டு போறதா சொல்லி ஏமாத்திகிட்டே இருக்கே"
"இதோ.. இன்னிக்கு கூட்டிட்டு போறேன்.. வார்டு கவுன்சிலர் வந்தாரு.. எல்லாருக்கும் டிக்கட் தந்தாரு.."
"ப்ரீயாவா?"
"ஆமாம்.. எனக்கு மட்டுமே 10 டிக்கட் தந்தாரு.. முடிஞ்சா ப்ளாக்லே வித்துட்டு அதுலயும் கொஞ்சம் பணம் பாக்கலாம்"
படம் பார்க்கிறார்கள்.
"தோ பாரு.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சங்காத்தமும் கிடையாது.. எங்கப்பன் ஊட்டுக்கு போறேன் நான்.. சினிமா கூட்டுட்டு போறானாம் சினிமா.. தியேட்டர்லே தனியா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இனிமே என்னைப்பாக்க வராதே!"
மில்லியனேர் செட்
"சரியான விடை சுடலை.. நீங்கள் 40000 ரூபாய் ஜெயித்துவிட்டீர்கள்"..
போலீஸ் ஸ்டேஷன்:
"தில்லானா மோகனாம்பாள் யார் வசனம் சொல்லு பாக்கலாம்?"
"எனக்குத் தெரியாது"
"அதுவே தெரியாது.. இது எப்படி தெரியும்?'
"அவங்க அந்தக் கேள்வி கேக்கலையே!"
மில்லியனர் செட்
"1,60,000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி:
தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
அ.பாம்பே
"இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது.. ஆடியன்ஸ் போல்"
போலீஸ் ஸ்டேஷன்..
"இந்தக் கேள்விக்கு உனக்கு விடை தெரியாதா? குழந்தை கூட சரியாகச் சொல்லுமே?"
"படித்த குழந்தை சரியாக்ச் சொல்லும்.. எனக்குத் தெரியாது"
மில்லியனர் செட்டில் கரவொலி.
"ஆஹா.. நம்ம டீக்கடைக்காரர் எல்லாக் கேள்விக்கும் சரியான விடை சொல்லி கலக்கிகிட்டிருக்கார்.. இன்னும் இரண்டு லைப் லைன் வேற வச்சிருக்கார். 320000 ரூபாய்க்கான ஒன்பதாவது கேள்வி.. தயாரா?"
"தயார்.."
"மதுரையில் டிவி பார்க்க எந்த கேபிள் கனெக்ஷன் வேண்டும்?
அ. அரசு கேபிள்
ப்ளாஷ்பேக் விரிகிறது..
"வெட்றா அந்தக் கம்பத்தை.."
"அண்ணே பாத்து வெட்டுங்கன்னே.. டீக்கடை ஓலைச் சாரம் அதோட ஒட்டி இருக்கு"
"இவன் எவண்டா.. அண்ணன் கேபிள்லே தெரியாத சானல் எங்கயும் தெரியக்கூடாதுன்னு பாடுபட்டுகிட்டிருக்கோம்.."
வெட்டிய கம்பம் கீழே விழுகிறது..டீ பாய்லரும் சேர்த்து.
போலீஸ் ஸ்டேஷன்.
"பத்து நாள் ஆச்சு எனக்கு சூடுபட்ட கொப்பளம் ஆற"
மில்லியனர் செட்
"சரியான விடை.. கலக்கறீங்க சுடலை.."
"10 ஆவது கேள்வி..
"லட்டு தயாரிக்க என்ன தேவை?
அ. கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய்
"விடை தெரியுமா தெரியாதா?"
"கேள்வி ரொம்பக் கஷ்டமா இருக்குது"
"வழக்கம் போல ப்ளாஷ்பேக்குக்கு போக வேண்டியதுதானே?"
ப்ளாஷ்பேக்:
"சுடலை.. லட்டு கொடுக்கறாங்களாம்.. போய் வாங்கல?"
"அடப்போடா.. அவன் அவன் வாஷிங் மெஷினும் டிவியும் கொடுக்கறான்.. இவங்க போயும் போயும் லட்டுதான் தராங்களா?"
"அட.. இது சாதா லட்டு இல்லைடா..வாங்கிப் பிரிச்சுப் பாரு"
மில்லியனர் செட்
"விடை ஈ..இவற்றில் எதுவும் இல்லை"
"ஷ்யூர்? கான்பிடண்ட்?"
"ஆமாம்"
"எப்படி சொல்றீங்க?"
"தங்கத்தைப் பத்தி வேறெந்த விடையிலேயும் இல்லியே?"
"வாவ்.. சரியான விடை"
"13 ஆவது கேள்விக்கு வந்துட்டீங்க.. 50,00.000 ரூபாய் இந்தக்கேள்விக்கு சரியான விடை சொன்னா கிடைக்கும்"
"இவற்றுள் எது கலவரத்தை உடனடியாக உண்டாக்கும்?
அ. பங்காளிச் சண்டை
ப்ளாஷ் பேக்..
"எல்லாக் கடையையும் மூடச்சொல்லுங்கடா.. மேயர் அம்மா வராங்க.. "
போலீஸ் ஸ்டேஷன்..
"ஆச்சரியமா இருக்கு உன்னைப்பாத்தா.. கேள்விக்கு எப்படி பதில் சொல்லி ஏமாத்தினேன்ன்னு கேட்டா அதுல இருந்து தப்பிக்கறதுக்கு கலவரத்துக்கு க்ரிஷ்ணாயில் சப்ளை பண்ணேன்னு ஒத்துக்கற.. இதுக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?"
"என்ன ஒரு இருபதாயிரம் கிடைக்குமா?"
"ஷார்ப்பா இருக்காண்டா"
மில்லியனேர் செட்
"சுடலைமுத்து, நீங்க ரொம்ப கேர்புல்லா இருக்கணும். ஒரு கோடிக்கான கேள்வி இது. தயாரா?"
"தயார் சார்"
"இதோ உங்கள் கேள்வி"
"இவற்றுள் எது இலவசமாகக் கிடைக்காது?
அ. டிவி
"குழப்பமா இருக்கே சார்.. டிவி எங்க ஊருக்கு கிடைச்சிருச்சு.. மத்ததுல.."
"மில்லியா.. மல்லியா கேஸா?"
"குழப்பமா இருக்கு சார்.. 50/50 ஆப்ஷன் உபயோகப்படுத்தறேன்"
"சரி.. கம்ப்யூட்டர், ரெண்டு தவறான விடையை அழிச்சுடுங்க"
"இ. மில்லி, ஈ. மல்லி.. எது சரியான விடை?"
"இப்பவும் சரியாத் தெரியலையே சார்.. எலக்ஷன் டைம்ல மட்டுமா எல்லா டைம்லேயுமா சார்?"
"அது எனக்குத் தெரியாது.. விடை இ. மில்லியா ஈ. மல்லியா?"
"தெரியலையே சார்"
"அப்ப விடை இ. மில்லியாவும் இருக்கலாம், ஈ.மல்லியாவும் இருக்கலாம் இல்லையா?"
"ஓக்கே சார்.. சரியான விடை ஈ. மல்லி"
"ஷ்யூர்? இ.மில்லியாவும் இருக்கலாம் இல்லையா?"
"இருக்கலாம் சார். ஆனா என் விடை ஈ.மல்லிதான்"
"ஓக்கே கம்ப்யூட்டர் கப்யூட்டர் ஈ மல்லியாம். லாக் பண்ணித் தொலைங்க.. லாக் பண்ணித் தொலைங்க"
"ஆ! ஈ மல்லி சரியான விடை.. நீங்கள் இப்ப ஒரு கோடீஸ்வரர்.. அடுத்த கேள்வி,.."
பாங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
"ஆ! அடுத்த கேள்வி நாளை இதே நேர நிகழ்ச்சியில கேட்கப்படும்.. நன்றி"
செட்டை விட்டு வெளியே வந்த நடத்துநர் "போலீஸ் ஸ்டேஷன், சுடலை ஏமாத்துறான்.. அவனை அடிச்சு உண்மையைக் கண்டுபிடிங்க"
போலீஸ் ஸ்டேஷன்.. "எப்படிடா ஈ மல்லின்னு சரியா சொன்னே?"
"எலக்ஷன் டைம்லே நெறய மில்லி ப்ரீயா கிடைச்சுது சார்.. மல்லி எப்பவுமே கிடைச்சதில்ல.. அதான் சொன்னேன்.."
"சரி.. திருமங்கலத்துக்காரன் எல்லாரும் சொல்ற மாதிரிதான் கேள்விய செட் பண்ணி இருக்கானுங்க கேனப்பயலுங்க.. அவனுங்க கிட்ட பிரச்சினைய வச்சுகிட்டு உன்னை அடிக்கச் சொன்னான் பாரு.. அவனைத்தான் உதைக்கணும்.."
மறுநாள் செட்டில்:
"வாங்க சுடலைமுத்து.. உங்ககிட்ட கடைசிக் கேள்வி கேட்கணும்.. இதுக்கு சரியான விடை சொன்னா உங்களுக்கு ரெண்டு கோடி.. தப்பான விடை சொன்னா, அய்யா ஜாலி.. நாங்க எதுவுமே கொடுக்க வேணாம்"
"கேளுங்க சார் கேள்வி"
"இந்தியாவின் பிரதம மந்திரி யார்?
அ. கலைஞர் மு கருணாநிதி
"சுலபமான கேள்விதான்.... இல்ல?"
"எனக்கு இதுக்கு விடை தெரியாதே?"
"ஏமாத்தாதீங்க.. இதுக்கா விடை தெரியாது?"
"நெஜமாதான் சொல்றேன் சார்..போன் அ பிரண்ட் போடலாமா?"
"யாருக்கு?"
"இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.."
"யாரது?"
"சோனியா காந்தி!"
***************************************************************************
தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?
அ.
இல்லை.. எல்லாம் நம் தலைவிதி!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 71 பின்னூட்டங்கள்
Sep 17, 2008
ஒரு சோறு பதம்? தெரியலையே - உதவி வேணும். (17 Sep 2008)
உங்கள் வசதிக்காக வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். பதில்களை உடனுக்குடன் மட்டுறுத்த இயலாது.
1. இரட்டை டம்ளர் முறைக்கு நான் இங்கே தீர்வு கொடுத்துள்ளேன்
2. ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் முதலெழுத்துதான் வித்தியாசம்
3. ஜோதியில் சைவப்படம் போட்டால் சீட்டு கிழியும், தாவூ தீரும்
4. இவ 110,131 மேகீ 43 சரி, மத்ததெல்லாம் தப்பு. முயற்சி பண்ணுங்க.. உங்களால முடியும்.
5. இது இந்தப்பதிவுக்கு மட்டுமல்ல, தங்கமணிக்கும் எதிர்பதிவல்ல
6. என் டி ஷர்ட் டை திருடினாலும் பரவாயில்லை, டி ஷர்ட் வாசகத்தைத் திருடிவிட்டார்கள்.
7. வாரம் 30$ வைக்கலாமா 70$ வைக்கலாமா என்றுதான் குழப்பம்
8. இப்போதெல்லாம் 30 விநாடியில் நேரிசை வெண்பா எழுத முடிகிறது
9. கிளி ஜோக் தவிர வேறெதுவும் கம்பன் விழாவில் சொல்லக்கூடாது
10. காற்றை வஞ்சித்துத்தான் பறக்கவேண்டும் என்றால், எனக்கு வேண்டாம் அந்த பட்டம்
11. கும்மிடிப்பூண்டியில் வயதான ஓட்டுநராக இருந்தாலும் காலை அழுத்தினால் வண்டி நிற்கிறது.
12. சென்னை மாநகராட்சி போர்ட் - என் கைவிரல் சென்னை மாநகராட்சியில் இருக்கிறது, கால் வெளியே.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 22 பின்னூட்டங்கள்
Jun 24, 2008
கமலின் தசாவதாரம் - தொடருது பினாத்தலின் Quiz அவதாரம்!
அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை.
உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன்.
கான்சப்ட் என்னன்னா (இந்தக் கான்சப்ட்ன்ற வார்த்தையையே டிவிக்காரங்க நாறடிச்சு வச்சிருக்காங்க!) .. சரி விடுங்க.. இந்த விளையாட்டோட ஆரம்பம், குமுதத்துல வர பயோடேட்டா மாதிரிதான். ஒரு நபரைப் பத்தி 4 குறிப்பு சொல்லியிருக்கேன்.. சமீபத்திய மகிழ்ச்சி, சமீபத்திய சோகம், வாழ்நாள் சாதனை, நீண்டநாள் கடுப்பு - ஆனா குறிப்பா சொல்லாம, படமா சொல்லி இருக்கேன். அந்தப் படத்தை வச்சு,படம் என்ன சொல்லவருதுன்னு புரிஞ்சுகிட்டு, அவை எந்தப் பிரபலத்தைக் குறிக்குதுன்னு தெரிஞ்சவுடனே அந்த போட்டோவைக் கிளிக் செய்யணும், அப்புறம் உறுதிப்படுத்தணும் அஷ்டே.
அதுலயும், அந்தக்குறிப்புள்ள படங்கள் எல்லாம் உடனே தெரியாது. அதை ஒரு சின்ன வெள்ளை சதுரம் வச்சு மறைச்சிருக்கேன். அந்த வெள்ளை சதுரத்தைக் கிளிக் பண்ணீங்கன்னா, படம் தெரியும். குறைந்த குறிப்புகள்லேயே கண்டுபிடிச்சீங்கன்னா, அதுக்கு போனஸ் உண்டு. சீக்கிரம் முடிச்சீங்கன்னா அதுக்கும் டைம் போனஸ் உண்டு.
படம் சரியாத் தெரியாட்டி, எந்த இடம் பெரிசாத் தெரியணுமோ அந்த இடத்துல வலது-கிளிக்கி, zoom செய்துகொள்ளலாம். பார்த்தவுடனேயே மறுபடி வலது-க்ளிக்கி, show all எனத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
முதல் பக்கத்துல இருக்கிற உதவியைக் கிளிக்கினா உதாரணமும் எப்படி விளையாடணும்ன்ற விதிமுறைகளும் இருக்கு.
ஒரு முறை உறுதிப்படுத்திட்டீங்கன்னா அடுத்த கேள்விக்குப் போயிடும். அதே கேள்விக்குத் திரும்பி வரமுடியாது. கவனமா உறுதிப்படுத்துங்க..
மொத்தம் 10 கேள்விகள். 10 கேள்விக்கு, 16 பிரபலங்களோட படம்.. எனவே, எலிமினேஷன் பண்ணி எல்லாம் ஆன்சர் சொல்ல முடியாது :-) 10 கேள்வியும் முடிஞ்சவுடனே உங்க மார்க்கும், ஒரு கோட் -உம் வரும். அந்தக் கோடை மட்டுமே பின்னூட்டமா போட்டீங்கன்னா கூட போதும், அதை டீ கோட் பண்ணி எவ்வளவு மார்க்குன்னு நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களுக்கும் சொல்லிடுவேன் :-)
கோடை மட்டும் பின்னூட்டமா போட்டா போதும்னு ஒரு பேச்சுக்குதான் சொல்றேன், எப்படி இருந்தது, என்ன மாதிரி மேம்பாடு செய்யலாம்னு ஆலோசனையும் சொல்லலாம்..
இது தயாராகி 10 நாளுக்கு மேலே ஆகுது.. தசாவதாரம் சுனாமிலே மாட்டிக்கக்கூடாதுன்னு டிலே பண்ணினா நாட்டிலே ஆயிரம் மாற்றங்கள்.. படத்தையெல்லாம் அடிச்சு அடிச்சு திருத்தவேண்டியதாப் போச்சு. தயாரிப்பில் உறுதுணையாகவும், மேம்பாடுகளும் சொல்லி இருந்த மின்னரட்டை நண்பர்கள் - இலவசக்கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், பாஸ்டன் பாலா, வெட்டிப்பயல், கண்ணபிரான் ரவிசங்கர், சிறில் அலெக்ஸ், இட்லிவடை ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.
தற்போதைய விடை நிலவரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.
Jun 16, 2008
கேள்வி பதில் ச சங்கர் - கொத்தனார் வயா பினாத்தல்!
2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு?
3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா?)? அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள்?
இரவு 11 மணிவரை மனைவியின் அருகில் இருந்தேன். வலி எடுக்கவில்லை. எப்போதும் எடுக்கலாம் என்ற நிலை. எனக்கு இருக்கும் குறைபாட்டினால் அங்கே பக்கத்தில் இருக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். காலல 8 :30க்குத்தான் மறுபடி மருத்துவமனைக்கு வந்தேன். வருவதற்கு இரண்டே நிமிடம் முன் குழந்தை பிறந்தது எனத் தெரிவித்தார்கள். வெயில் அதிகமாக இல்லாததால் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி உள்ளறையில் விளக்கொளியில் வைத்து கண்ணாடி ஜன்னலைத் திறந்து காட்டினார்கள் என் தேவதையை!
எண்ணங்களா? முதல் எண்ணம் மனைவி பெத்துப் பிழைச்சு வரணும்ங்கறதுதான். ரெண்டாவதா, ஒண்ணு ரெண்டு மைக்ரோ செகண்டுக்கு, "அப்பாவா ஆகப்போறே, இனியாவது குழந்தைத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கணும்" அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. இன்னி வரைக்கும் அந்த எண்ணத்தை ஜெயிக்க விடலையே! நாமல்லாம் யாரு!
ஹலோ பி ஏ.. இப்ப உடனடியா, அடுத்த மூணு நிமிஷத்துக்குள்ள எனக்கு இந்த உத்தரவெல்லாம் டைப் ஆகி வரணும்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 36 பின்னூட்டங்கள்
Jun 11, 2008
ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும் இன்னபிற பிரபலங்களும் (11 Jun 2008)
சிவாஜி வாயிலே ஜிலேபி..
"இதான் க்ளூவா?" இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் தன் சட்டைப்பையினின்றும் எடுத்த கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தவண்ணம் கேட்டார்.
"ஆமாம் சார். அந்த யங் சாப் அப்படித்தான் தன் கையிலே பச்சை குத்தியிருந்தான்" சொன்னார் சிலம்பரசன் ஐ பி எஸ்.. சத்தியிலிருந்து மாற்றலாகி வந்திருந்தார். புது ரெக்ரூட்மெண்ட்.
"இறந்தவர் பேரு என்ன?"
"வாகீசன் சார். ஆர் எஸ் புரத்துல தங்கி இருக்கார். இண்டஸ்ட்ரிஸ்ட்"
"எப்படி இறந்தார்?"
"பாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் ரிசல்ட் இன்னும் வரலை.. ஆனா உடம்பெல்லாம் நீலம் பாரிச்சிருந்தது சார்"
"லாஸ்ட் வீக் இதே ஏரியாவுல ஒரு கொலை நடந்ததே.. அதுல இறந்தவர் பேர் என்ன?"
"ஜியா மொகித்தீன் சார்.. அவரும் புட் பாய்சனிங் தானாம் சார்"
".. ம்" கோகுல்நாத் இன்னும் விவேக்கைக் கூப்பிட முடிவெடுக்கவில்லை..
"ஸ்வீட் சாப்பிடறீங்களா சார்.. பக்கத்துக் கடையில ஆனிவர்ஸரியாம்.. அதுக்காகக் கொடுத்துட்டுப் போனாங்க.."
கோகுல்நாத் துல்லியமாக அதிர்ந்தார்..
"சிலம்பரசன்.. அந்த ஜிலேபியச் சாப்பிடாதீங்க..
இன்னுமா உங்களுக்கு க்ளூ புரியல?
காலையில் அப்பா சொன்னாரே..'என் பெண் சமத்து. எந்த இடத்திலும் தன்னிலை உணர்ந்து நடந்து கொள்வாள்' இங்கே அதெல்லாம் முடியாது என பெருமூச்செறிந்தாள்.
வாயிலுக்குச் செல்லலாம். அங்கேயாவது இந்த அருண் ராஸ்கல் வந்திருக்கிறானா என்று பார்க்கலாம்.
டிக்கட் கேட்ட பரிசோதகரிடம் சீசன் டிக்கட்டைக் காட்டி வெளியே வந்தாள். சி எஸ் டி டெர்மினல் வாசல் ஆட்டோக்காரர்கள் 'வரீங்களா அம்மா' என்று கேட்டதற்கு தலையசைத்துவிட்டு முன்னேறினாள்.
அருண் வேகமாக வந்தான். "டார்லிங், நம் கஷ்டம் எல்லாம் தீந்துது.. இந்தா இனிப்பு சாப்பிடு" என்று வாயிலே ஒரு இனிப்பையும் திணித்தான்.
'என்னது இது.. நான்குபேர் போகிற வருகிற இடத்திலா சாப்பிடுவது?'
' அதனால் என்ன சிவாஜி (டெர்மினஸ்) வாயில்லே ஜிலேபி' என்று ஜோக்கடித்தான் அருண்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 44 பின்னூட்டங்கள்
