Mar 30, 2006

ஒண்ணரைப்பக்க துக்ளக் (30Mar06)

துக்ளக்கில் வரும் ஒண்ணரைப்பக்க நாளேடு பிரசித்தமானது. தேர்தல் நெருங்குகையில் தேர்தல் முடிவுகளின் சாத்தியக்கூறுகளுக்கு நாளேடுகளின் செய்திகள், அரசியல் நிகழ்வுகள் எப்படி மாறக்கூடும் என்று கணிக்கும் நகைச்சுவை மிகுந்த பக்கங்கள். வாய்விட்டுச் சிரிக்கலாம்.
 
ஆனால், முடிவுகளுக்கு ஏற்ப மற்ற பத்திரிக்கைகளில் வரப்போவதை மட்டும்தான் ஊகிக்க முடியுமா? துக்ளக்கில் வருவதை ஊகிக்க முடியாதா? நான் முயற்சிக்கிறேன்.
 
முதலில் தி மு க கூட்டணி வென்றால்:
 
அட்டைப்படம்:
 
ஒரு வட்டம் இன்னொரு வட்டத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார். (தி மு க கரை வேட்டிகள்)
 
ஆமா, நம்ம மாவட்டத்தை ஏன் போலீஸ் கைது செய்திருக்கிறாங்க?
 
அதுவா? பொதுக்குழுவிலே அவர் முதல்வர் டாக்டர் கலைஞர் வாழ்கன்னு சொன்னாராம்..
 
அதுக்கு ஏன் கைது செய்யறாங்க?
 
அவர் வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்கன்னு சொல்லவே இல்லையாமே!
 
எச்சரிக்கை
 
தேர்தல் தொடங்கும் முன்னரே கமிஷனரை மாற்றியது, தேர்தல் நடக்கும்போதும் கண்மணிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது, எண்ணிக்கையிலும் குளறுபடி ஆகிய பல குற்றச்சாட்டுகளை எடுத்துக்கொண்டு அதிமுக அணி ஜனாதிபதியை சந்திப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. தங்கள் பங்குக்கும் விதிமுறை மீறல் செய்த அதிமுக இதையெல்லாம் செய்யலாமா என்று கேட்பதைவிட செய்வதற்கு இவர்களாவது உள்ளார்களே என்று நினைப்பதுதான் புத்திசாலித்தனம்.
 
தலையங்கம்
 
நடந்தது நல்லதற்கில்லை
 
எதிர்பார்த்தபடியே தி மு க கூட்டணி சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. சீட் பங்கீட்டில் திமுக செய்த "தியாகங்களையும்" மீறி திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம் - நமக்கு அல்ல.
 
ஏழு கட்சி கூட்டணியிலிருந்து சில கட்சிகள் பிரிந்து வந்துவிட்டிருந்தாலும், ஓட்டில் பெரிய மாற்றம் ஏதும் வந்து விடாது என்பதே நமது கருத்தாக இருந்தது.
 
துகளக் பிப்ரவரி முப்பதாம் தேதியிட்ட இதழில் இருந்து:
 
கே: வரும் சட்டசபைத் தேர்தலில் எந்த அணி ஜெயிக்கும் என நினைக்கிறீர்கள்?
 
ப: இப்போது உள்ள நிலைமையில் தி மு க கூட்டணியின் எண்ணிக்கை பலமாகவே இருக்கிறது. அதிமுக அதை முறியடிக்க பெரும் முயற்சியும் முனைப்பும் எடுக்க வேண்டி வரும். அதில்லாமல் மக்கள் கூட்டணி என்றெல்லாம் பம்மாத்துப் பண்ணிக்கொண்டிராமல் கூட்டணிக்கட்சிகளுக்கு உரிய மரியாதை தர ஜெயலலிதா முன்வரவேண்டும். அவர் அப்படிச் செய்வாரா என்பது சந்தேகம்தான்.
 
துக்ளக் ஏப்ரல் 31ஆம் தேதியிட்ட இதழில் இருந்து:
 
கே: ம தி மு க வின் வருகை அ தி மு க வுக்கு பலம்தானே?
 
ப: பலமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சாதாரண வாக்காளன் தேர்தலுக்கு ஓட்டுப்போடச் செல்லும்போது ராஜீவ் காந்தி மற்றும் 21 பேர் இறந்த கொடூரத்தையும் அதற்குக் காரணமானவர்களையும் அந்தக் காரணமானவர்களை தமிழகத்தில் ஆதரிப்பவர்களையும் பற்றி யோசித்தால், இந்த பலம் பலவீனமாகவும் மாறக்கூடும். இப்படித்தான் நடக்கும் என்று நான் சொல்லவில்லை. இப்படியும் நடக்கலாம் என்றுதான் சொல்லுகிறேன்.
 
எனவே, நடப்பு அரசியலை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் யாருக்கும் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பவை அல்ல.
 
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் சில செய்திகளும் இந்தத் தேர்தல் முடிவுகளில் இருக்கிறது.
 
234 தொகுதிகளில் 180-இல் திமுக கூட்டணி வென்றிருந்தாலும் கூட, வாக்குப்பதிவானது 55% என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டுப்போடாமலிருந்த 45% மக்களும் திமுக கூட்டணிக்கு எதிரானவர்களாக இருந்திருந்தால்? என்ற கேள்விக்கு விடை இப்போதைக்குக் கிடைக்காது. தி மு க அணி பெற்ற வாக்குக்களின் சதவீதம் 45% என்பதாகக் குறிப்பிடப்படுகிறது, இது ஒரு சுத்தப்பொய் -  இந்தச் சதவீதம் வாக்களித்தவர்களில் திமுக அணி பெற்ற வாக்குகள் தானே அன்றி மொத்த வாக்குக்களில் அல்ல. மொத்த வாக்களித்தவர்களில் திமுக அணி பெற்றுள்ள வாக்குக்கள் வெறும் 25% மட்டுமே.
 
அதாவது, நான்கில் ஒருவர்தான் திமுக அணிக்கு வாக்களித்துள்ளார். மீதி மூன்று பேரும் தி மு க அணிக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளனர்.
 
இப்படி ஒரு எதிர்ப்பைச் சுமந்து கொண்டு திமுக ஆட்சி ஏறுகிறது, அதற்கு நமது வாழ்த்துக்கள்.
 
கேள்வி பதில்
 
முத்துசாமி, மொரப்பநாடு
 
கே: மீண்டும் கலைஞர் முதல்வர் ஆகிறாரே? இது பற்றி உங்கள் கருத்து?
 
ப: கலைஞர் முதல்வர் ஆகிறாரா? உங்கள் அறியாமையை எண்ணி வருத்தப்படுகிறேன்.
 
ரஜினிசெல்வா, பாண்டிச்சேரி
 
கே: பத்திரிக்கைகள்தான் ஆட்சியை வழிநடத்த வேண்டும் என்று கலைஞர் கூறியிருக்கிறாரே, இதுபற்றி?
 
ப: மகன் மேல் நம்பிக்கை போய்விட்டதா? ஸ்டாலின் கோபித்துக்கொள்ளப்போகிறார்.
 
அகமது இஸ்மாயில், கீழக்கரை
 
கே: தோல்வி கண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு உங்கள் அட்வைஸ் என்னவாக இருக்கும்?
 
ப: மோசமான ஆட்சி என்று சொல்ல முடியாத அளவில் ஆட்சி இருந்தாலும், சேரத்தகாத சில கட்சிகளுடன் கூட்டு வைத்ததால் தோல்வி காண நேரிட்டது. இருப்பினும், உங்களுக்கு இன்னும் 38% மக்கள் ஆதரவு இருக்கிறது, மனம் தளராமல் இருந்தால், திமுக செய்யும் தவறுகளின் பயனை அறுவடை செய்ய முடியும்.
 
___________________________________________________
 
இன்னும் சில நாட்களில் அடுத்த சாத்தியக்கூறுகளான அதிமுக அணியின் வெற்றிக்கும், மூன்றாம் அணி வெற்றிக்கும் ஒண்ணரைப் பக்க துக்ளக்குகளை வெளியிடுகிறேன்.

Mar 27, 2006

ஜூ வி அதிர்ச்சி செய்தி - முழு விவரம் (27Mar06) Full version

ஜூனியர் விகடன் ஏப்ரல் 31 தேதியிட்ட இதழில் இருந்து:

கழுகார் வரவுக்காக வழி மீது விழி வைத்துக்காத்திருந்தோம். வழக்கமாக, தாமதம் ஆவதாயிருந்தால் மிஸ்டு கால் ஒன்று கொடுப்பார் - அதையும் காணவில்லை என்பதால் ஆவல் அதிகமாகி விட்டது.

பயங்கரமான பதட்டத்துடன் உள்ளே நுழைந்தார் மிஸ்டர் கழுகு.

"காரமான செய்தியுடன் வந்திருக்கிறேன். முதலில் கூலா எதாவது கொடுங்க" என்றார்.

பிரிட்ஜில் சில்லென்று இருந்த தர்பூசணி ஜூஸோடு அவரை குளிர்வித்தோம்.

"அறிவாலயமும் போயஸ் கார்டனும் வழக்கத்துக்கு அதிகமாகவே பரபரப்பாயிருக்கிறதே, உங்கள் செய்தியாளரை அனுப்பவில்லையா"

"எப்போதும் அங்கே ஒரு செய்தியாளர் இருப்பாரே, பரபரப்பாய் இருப்பதைப்பற்றித் தகவல் ஒன்றும் சொல்லவில்லையே" என்றோம்.

"ஒரு உறுதி செய்யப்படாத தகவல் இருக்கிறது, உங்களிடம் சொல்லலாமா என்று தயக்கமாகவும் இருக்கிறதே" என்றார்.

"நீங்கள் சொன்னாலே அது உறுதியான தகவலாகத்தான் இருக்கும், சும்மா பிகு பண்ணாதீங்க" என்றோம் கார போண்டா பிளேட்டை அவர் முன் நகர்த்தியவாறே.

"போயஸ் கார்டன் வட்டாரத்துலே புதுசா சில பெரிய டெக்னிகல் ஆசாமிகள் நடமாட்டம் இருக்குதுன்னு சொல்லியிருந்தேன் நினைவிருக்கா"

"ஆமாம், போன வாரம் அட்டைப்படத்துலேயே மாண்டேஜ் கொடுத்திருந்தோமே, எப்படி மறக்கும்?"

"எச் ஓ ஸி ன்னு ஒரு நிறுவனம்தான் எல்லா மின்னணு வாக்கியந்திரங்களுக்கும் ஸாப்ட்வேர் தயார் செய்து குடுக்கறவங்க. இந்த பெரிய தலைங்களுக்கும் அந்த நிறுவனத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்காம். ஸாப்ட்வேரில சின்னதா ஒரு மாற்றம் செஞ்சுட்டா, தேர்தல்லே ஜெயிச்சுடலாம்ன்றதுதான் திட்டம்."

" அடடா, இது அறிவாலயத்துக்குத் தெரியாதா?"

"தெரியாம போகுமா? அவங்க பங்குக்கு அவங்களும் தேவையான ஸாப்ட்வேர் மாற்றம் எல்லாம் செஞ்சு தயாராத்தான் இருக்காங்க. எச் ஓ ஸி நிறுவனத்துக்கும் சன் டிவிக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்திக் காரியத்தை சாதிச்சுக்கலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். சன் டிவியின் பெரிய தலைங்க எல்லாம் டெல்லிக்கு ஏற்கனவே பறந்துட்டாங்களாம்"

"அப்படி என்னதான் மாற்றம் செய்வாங்களாம்?"

அதைத்தான், பினாத்தல் சுரேஷுன்னு ஒரு அறிவுஜீவி இங்கே கீழே கொடுத்திருக்கார். இடது பக்கம் உள்ளது அ தி மு க ஆசைப்பட்ட வாக்குப்பதிவு சாப்ட்வேர், வலதுபக்கம் திமுக சாப்ட்வேர். வேணுமுன்னா நீங்களே முயற்சி பண்ணிப் பாருங்க.




ஏப்ரல் 31 ஒரு பெரிய தவறாகிவிட்டது, சுலபமாக எல்லாரும் கண்டுபிடித்துவிட்டார்கள். வேற தேதி போட்டிருந்தா குழப்பமாயிருக்கும். டோண்டு, மணியன், கோகுல்குமார், MRS அருண் குமார், சோம்பேறிப்பையன் ஆகியோர் கண்டுபிடித்து பின்னூட்டமும் உடனுக்குடனே போட்டுவிட்டார்கள்!

இப்படிக்கூட நடக்குமா? ஜூவியில் அதிர்ச்சி செய்தி! (27Mar06)

ஜூனியர் விகடன் ஏப்ரல் 31 தேதியிட்ட இதழில் இருந்து:

கழுகார் வரவுக்காக வழி மீது விழி வைத்துக்காத்திருந்தோம். வழக்கமாக, தாமதம் ஆவதாயிருந்தால் மிஸ்டு கால் ஒன்று கொடுப்பார் - அதையும் காணவில்லை என்பதால் ஆவல் அதிகமாகி விட்டது.

பயங்கரமான பதட்டத்துடன் உள்ளே நுழைந்தார் மிஸ்டர் கழுகு.

"காரமான செய்தியுடன் வந்திருக்கிறேன். முதலில் கூலா எதாவது கொடுங்க" என்றார்.

பிரிட்ஜில் சில்லென்று இருந்த தர்பூசணி ஜூஸோடு அவரை குளிர்வித்தோம்.

"அறிவாலயமும் போயஸ் கார்டனும் வழக்கத்துக்கு அதிகமாகவே பரபரப்பாயிருக்கிறதே, உங்கள் செய்தியாளரை அனுப்பவில்லையா"

"எப்போதும் அங்கே ஒரு செய்தியாளர் இருப்பாரே, பரபரப்பாய் இருப்பதைப்பற்றித் தகவல் ஒன்றும் சொல்லவில்லையே" என்றோம்.

"ஒரு உறுதி செய்யப்படாத தகவல் இருக்கிறது, உங்களிடம் சொல்லலாமா என்று தயக்கமாகவும் இருக்கிறதே" என்றார்.

"நீங்கள் சொன்னாலே அது உறுதியான தகவலாகத்தான் இருக்கும், சும்மா பிகு பண்ணாதீங்க" என்றோம் கார போண்டா பிளேட்டை அவர் முன் நகர்த்தியவாறே.

"போயஸ் கார்டன் வட்டாரத்துலே புதுசா சில பெரிய டெக்னிகல் ஆசாமிகள் நடமாட்டம் இருக்குதுன்னு சொல்லியிருந்தேன் நினைவிருக்கா"

"ஆமாம், போன வாரம் அட்டைப்படத்துலேயே மாண்டேஜ் கொடுத்திருந்தோமே, எப்படி மறக்கும்?"

"எச் ஓ ஸி ன்னு ஒரு நிறுவனம்தான் எல்லா மின்னணு வாக்கியந்திரங்களுக்கும் ஸாப்ட்வேர் தயார் செய்து குடுக்கறவங்க. இந்த பெரிய தலைங்களுக்கும் அந்த நிறுவனத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்காம். ஸாப்ட்வேரில சின்னதா ஒரு மாற்றம் செஞ்சுட்டா, தேர்தல்லே ஜெயிச்சுடலாம்ன்றதுதான் திட்டம்."

" அடடா, இது அறிவாலயத்துக்குத் தெரியாதா?"

"தெரியாம போகுமா? அவங்க பங்குக்கு அவங்களும் தேவையான ஸாப்ட்வேர் மாற்றம் எல்லாம் செஞ்சு தயாராத்தான் இருக்காங்க. எச் ஓ ஸி நிறுவனத்துக்கும் சன் டிவிக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்திக் காரியத்தை சாதிச்சுக்கலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். சன் டிவியின் பெரிய தலைங்க எல்லாம் டெல்லிக்கு ஏற்கனவே பறந்துட்டாங்களாம்"

"அப்படி என்னதான் மாற்றம் செய்வாங்களாம்?"

___________________________________________________________________________________

தட்டச்ச கஷ்டமாக இருப்பதால், இன்னும் இரண்டு மணி நேரத்தில் முழுப்பதிவும் இடுகிறேன். இல்லாத பட்சத்தில், இங்கே சென்று படித்துக்கொள்ளுங்கள்.

Mar 24, 2006

மனம் கவர் கருத்துக்கணிப்பு flash (24 mar 06)

தோழர்களே..

தேர்தல் நெருங்கி விட்டது. இனி பத்திரிக்கைகளின் சூடு வெய்யிலுக்குப் போட்டி போடும்.

Lies, bigger Lies and Statistics என்று கூறுவார்கள், அதற்கும் மேலாக இந்தக் கருத்துக்கணிப்புகளைக் கூற வேண்டும். இடியோ இடியுடன் கூடிய மழையோ, வெயிலோ, புயல் காற்றோ அல்லது லேசான காற்றோ என்று எல்லாவற்றையும் தொட்டுச்சென்று, முழுமையாக தவறு எனச்சொல்லமுடியாத கருத்துக்கணிப்புகள்..

ஜெயலலிதா விரும்பிய வண்ணம் உளவுத்துறை கணிப்பு வெளியிடுகிறது.

தி மு க கூட்டணியின் மனம் கவர்கிறது குங்குமம் கணிப்பு.

இந்தியா டுடேவும் குமுதமும் அவர்கள் மனம் கவர்ந்த கருத்துக்கணிப்பு வெளியிடுகின்றன.

நாம் என்ன செய்வது? நம் மனம் கவர்ந்த கணிப்பை யார்தான் வெளியிடுவார்?

எனவே, "நமக்கு நாமே" திட்டத்தின் படி, இந்த flash மென்பொருளை உருவாக்கி இருக்கிறேன்.

சில வாக்கியங்களுடன் உங்கள் உடன்பாட்டையோ எதிர்ப்பையோ, slider bar-ஐ னகர்த்தி உங்கள் மனநிலையை மென்பொருளுக்குத் தெரிவியுங்கள், உங்கள் மனம் கவர் கருத்துக்கணிப்பைப் பாருங்கள்.

உங்களுக்கு வந்த விடையை பின்னூட்டமாக எனக்குத் தெரிவியுங்கள்.

மறவாதீர், கருத்துக்கணிப்பு வரலாற்றில் இந்த மென்பொருள் ஒரு முக்கியமான மைல்கல்!



Mar 22, 2006

தவறிழைத்தான் பினாத்தலான் (22 Mar 06)

Invitation என்று ஒரு பதிவு என் பெயரில் வெளியாகி இருப்பதன் காரணங்கள்:
 
1. எனக்குக் கிடைக்கப்போகும் ஐபாட் அனைவருக்கும் கிடைக்கட்டுமே என்ற நல்லெண்ணம்.
 
2. தருமி அவர்கள் தனிமடலில் கூறியிருந்தது போல, இது உண்மையாக இருந்தால் தமிழ் வலைப்பதிவர்க்கு இலவசமாகக் கொடுத்தே ஐ பாட் நிறுவனமே போடியாகிவிடும் என்பதை மெய்ப்பிப்பதற்காக.
 
3. இதை தப்பித் தவறி யாராவது க்ளிக்கினால் என் கணக்கில் இன்னொரு புள்ளி கூடுமே என்ற பேராசை
 
4. பதிவு இட வேறெந்த சரக்கும் இல்லாமை..
 
என்றெல்லாம் காரணங்களை அடுக்கத் தோன்றினாலும், உண்மையான காரணம் ஒன்றே - என் முகவரிப்புத்தகத்தில் யாருக்கெல்லாம் அனுப்பலாம் என்று யோசித்து, ரேண்டமாக சிலவற்றை நீக்கியபோது, என் பிளாக்கர் பதியும் மின்னஞ்சலை அழிக்க மறந்துவிட்டேன் - அம்புட்டுதேன்.
 
உடனே ???? என்று மணியனின் கேள்வி வந்தபின் தான் தவறை உணர்ந்தேன், அழிக்க இப்போது முடியாது, மாலைதான் முடியும்.

அதுவரை, இங்கே க்ளிக் செய்து, குட்டிக்கதைகளைப் படித்து மகிழ்ச்சியில் ஆழுங்கள்.

விளம்பரம் செய்த இட்லிவடைக்கும், கில்லியில் பிரகாஷுக்கும் நன்றி.. ஹிட்டு ஏறுது ஆனா பின்னூட்டம் வர்றதில்லையே.. ஏன்..ஏன்?

Mar 21, 2006

குட்டிக்கதைகளுக்கான database - version 1.2 (21 Mar 06)

என் இனிய தமிழ் வலை ரசிகப்பெருமக்களே,

ஒவ்வொரு கட்சியிலும் பல பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டம் வார்த்தைகளுக்குள் அகப்படாத வானவில் போன்றது. நாளொரு கட்சி, பொழுதொரு கொள்கை என்று மாறிக்கிடக்கும் காட்சிகள் அவர்கள் துன்பத்தைத் தூண்டிக்கொண்டும் இன்பத்தைத் தாண்டிக்கொண்டும் ஒரு ராஜாங்கம் நடாத்துகிறது.

எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன குட்டிக்கதை சொல்லலாம் என அவர்கள் முட்டிக்கொண்டிருக்கிறார்கள், சிந்தனையைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பினாத்தலாரின் தாயுள்ளத்தை இச்செய்தி அடைந்தபோது அவர் உடைந்தே விட்டார்.

"ஆஹா இந்த நிலை எய்திடலாமோ..சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,குட்டிக்கதைகள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று அன்றே பாரதி சொன்னதை (என்ன அவர் வேற என்னவோ சொன்னாரா? அதெல்லாம் எதுக்கு இப்ப?) நனவாக்கிட அல்லும் பகலும் பாராமல் குட்டிக்கதைகளை உருவாக்கினார்.

கீழே உள்ள தகவல் சுரங்கத்தில் கட்சிக்கொடியை அழுத்தினால் ஒவ்வொரு கட்சிக்கும், தற்போதைய நிலைக்கும், தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மாறக்கூடிய நிலைகளுக்கும், மேலும் பல்வேறு சாத்தியக்கூறுகளுக்கும் குட்டிக்கதைகளை கருவாக்கி உருவாக்கி அதை பேச்சாளர் உபயோகிக்கும் எருவாக்கியும் விட்டார்.

எந்த உரிமை பிரச்சினையும் இல்லாமல் அனைவருக்கும் இலவசமாக உபயோகிக்கும் உரிமையையும் அள்ளிக்கொடுத்திருக்கிறார்.

அனைவரும் வருக, குட்டிக்கதைகளைப் பருக!

(மின்னஞ்சல் மூலமாக பிளாக்கரில் எழுத்துக்கோவைகளை மட்டுமே ஏற்ற முடிகிறது, embedded object-ஐ அல்ல; என்பதை முந்தைய சோதனை மூலமாக அறிந்து கொண்டேன். சுட்டிக்காட்டிய துபாய்வாசிக்கும், ஜீவ்ஸுக்கும் நன்றி. சுட்டிக்காட்டாமல் பார்த்து ஏமாந்தவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்)


குட்டிக்கதைகளுக்கான Database (21 Mar 06)

என் இனிய தமிழ் வலை ரசிகப்பெருமக்களே,

ஒவ்வொரு கட்சியிலும் பல பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படும்
கஷ்டம் வார்த்தைகளுக்குள் அகப்படாத வானவில் போன்றது. நாளொரு கட்சி,
பொழுதொரு கொள்கை என்று மாறிக்கிடக்கும் காட்சிகள் அவர்கள் துன்பத்தைத்
தூண்டிக்கொண்டும் இன்பத்தைத் தாண்டிக்கொண்டும் ஒரு ராஜாங்கம்
நடாத்துகிறது.

எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன குட்டிக்கதை சொல்லலாம் என அவர்கள்
முட்டிக்கொண்டிருக்கிறார்கள், சிந்தனையைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பினாத்தலாரின் தாயுள்ளத்தை இச்செய்தி அடைந்தபோது அவர் உடைந்தே விட்டார்.

"ஆஹா இந்த நிலை எய்திடலாமோ..
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
குட்டிக்கதைகள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று அன்றே பாரதி
சொன்னதை (என்ன அவர் வேற என்னவோ சொன்னாரா? அதெல்லாம் எதுக்கு இப்ப?)
நனவாக்கிட அல்லும் பகலும் பாராமல் குட்டிக்கதைகளை உருவாக்கினார்.

கீழே உள்ள தகவல் சுரங்கத்தில் கட்சிக்கொடியை அழுத்தினால் ஒவ்வொரு
கட்சிக்கும், தற்போதைய நிலைக்கும், தேர்தலில் வென்றாலும் தோற்றாலும்
மாறக்கூடிய நிலைகளுக்கும், மேலும் பல்வேறு சாத்தியக்கூறுகளுக்கும்
குட்டிக்கதைகளை கருவாக்கி உருவாக்கி அதை பேச்சாளர் உபயோகிக்கும்
எருவாக்கியும் விட்டார்.

எந்த உரிமை பிரச்சினையும் இல்லாமல் அனைவருக்கும் இலவசமாக உபயோகிக்கும்
உரிமையையும் அள்ளிக்கொடுத்திருக்கிறார்.

அனைவரும் வருக, குட்டிக்கதைகளைப் பருக!

<object id="kutti"
codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version="
height="500" width="400" align="middle"
classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000">
<param name="_cx" value="10583"></param>
<param name="_cy" value="13229"></param>
<param name="FlashVars" value=""></param>
<param name="Movie" value="http://www.nurz.com/files/t1X32641.swf"></param>
<param name="Src" value="http://www.nurz.com/files/t1X32641.swf"></param>
<param name="WMode" value="Window"></param><param name="Play"
value="-1"></param>
<param name="Loop" value="-1"></param>
<param name="Quality" value="High"></param>
<param name="SAlign" value=""></param>
<param name="Menu" value="-1"></param>
<param name="Base" value=""></param>
<param name="AllowScriptAccess" value="sameDomain"></param>
<param name="Scale" value="ShowAll"></param>
<param name="DeviceFont" value="0"></param>
<param name="EmbedMovie" value="0"></param>
<param name="BGColor" value="000000"></param>
<param name="SWRemote" value=""></param>
<param name="MovieData" value=""></param>
<param name="SeamlessTabbing" value="1">
<embed src="http://www.nurz.com/files/t1X32641.swf" quality="high"
bgcolor="#FFFFFF" width="400" height="500" name="Bharathy"
align="middle" allowscriptaccess="sameDomain"
type="application/x-shockwave-flash"
pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer">
</embed>
</object>

ஒரு சோதனை முயற்சி. Flash தெரியாவிட்டால், இன்னும் 3 மணி நேரத்தில்
மீண்டும் வலையேற்றுவேன்.

Mar 20, 2006

யார் சொன்னது துக்ளக் நடுநிலையற்றது என்று? (20 Mar 06)

துக்ளக்கை ஒரு நடுநிலை ஏடு அல்ல என்று சொல்பவர்கள் கவனத்துக்கு:
 
துக்ளக் ஒன்று தனது அரசியல் நிலைப்பாட்டிற்காக நியாயங்களைத் துறந்த பத்திரிக்கை அல்ல.
 
தமிழ் முரசு போலவோ, தினமலர் போலவோ அல்லது நமது எம் ஜி ஆர் போலவோ அப்பட்டமாகவா துக்ளக் தன் அரசியல் நிலைப்பாட்டைக்காண்பிக்கிறது?
 
துக்ளக்குக்கும் டாக்டர் நமது எம் ஜி ஆருக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் என்னால் உடனடியாகச் சொல்ல முடியும்.
 
1. நமது எம் ஜி ஆர் ஒரு நாளிதழ், துக்ளக் ஒரு வார இதழ்.
 
2. விளம்பரப்படியே பார்த்தால் கூட, நடுநிலையான செய்திகளுக்கு துக்ளக், நாட்டு நடப்பை அறிய நது எம் ஜி ஆர் படிக்க வேண்டும்.
 
3. நமது எம் ஜி ஆரில் கட்சி சார்ந்த செய்திகள் மட்டுமே இருக்கும். துக்ளக்கில் எதிர்க்கட்சிகள் சார்ந்த செய்திகளே இருக்கும்.
 
4. நமது எம் ஜி ஆரில் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் எனத் தெளிவாகக் கூறப்படும். துக்ளக்கில், யாருக்கு ஓட்டுப்போடக்கூடாது என மறைமுகமாகக் கூறப்படும்.
 
5. நமது எம் ஜி ஆரில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளே காணப்படும். துக்ளக்கில் சர்க்காரியா கமிஷன் வரை பழைய செய்திகளும் இருக்கும்.
 
6. நமது எம் ஜி ஆர் மற்றவர்களை மட்டும் திட்டும், துக்ளக் அவ்வப்போது தன்னையும் கூடத் திட்டிக்கொள்ளும்.
 
இனிமேலாவது துக்ளக்கும் நமது எம் ஜி ஆரும் ஒன்று எனக் கூறாதீர்கள். தெரிந்ததா?
 
(இது ஒரு முன்னோட்டப் பதிவு. பெனாத்தலாருக்கும் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. நாளை எதிர்பாருங்கள்.. குட்டிக்கதைகளுக்கான ஒரு ஃபிளாஷ் தகவல் சுரங்கம்)
 
 

Mar 15, 2006

அனில் கும்ப்ளே - 500 (15Mar06)

ஒன்று மேட்சில் 8 விக்கெட் எடுத்து ஜெயித்துக் கொடுப்பார்கள் அல்லது 100 ரன் கொடுத்து எதிரணியை ஜெயிக்க வைப்பார்கள். இதுதான் லெக் ஸ்பின்னர்களின் தலையெழுத்தாக இருந்தது ஒரு காலம்.
 
இதை மாற்றி, அளவாக ரன் கொடுத்து அளவோடோ அல்லது அபரிமிதமாகவோ விக்கெட் எடுத்து ஜெயிக்கத் தோள் கொடுத்து உதவாவிட்டாலும் தோல்விக்கு வழிவகுக்காத லெக் ஸ்பின்னர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனக்குத் தெரிந்த அளவில், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே மற்றும் சிறிது காலத்துக்கு முஷ்டாக் முஹம்மது - அவ்வளவுதான் லிஸ்ட்டே.
 
எப்போதாவது ஸ்பின் போடும் மிதவேகப்பந்து வீச்சாளர் என்று கிண்டலடிக்கத் தயங்காத மீடியா,
எப்போதாவது அதிக ரன்களைக்கொடுக்கையில் திட்டத்தயங்காத மீடியா,
 
கும்ப்ளேவின் 500 விக்கெட் சாதனையைப் புறந்தள்ளியது ஏன்? இந்த டெஸ்ட் மேட்சில் குறிப்பிடும்படியான வேறு எந்த ரிக்கார்டும் உடைக்கப்படவில்லை, யாரும் பெரிய அளவில் பிரகாசிக்கவும் இல்லை எனும்போது வெறும் ஆட்டநாயகன் விருதோடு விட்டுவிட்டது ஏன்?
 
என்றோ ஒரு க்ராண்ட் ஸ்லாமில் வெற்றிக்கு சற்று அருகில் வந்துவிட்ட காரணத்தாலேயே "சமுதாயக்கருத்துக்கள்" வரை சானியா மிர்ஸாவிடம்  கேட்கிறார்கள்.. எந்த மேட்சில் தோற்றாலும் ஜெயித்தாலும் "அதிர்ச்சி" செய்தியாகிறது.
 
"இந்த மேட்சிலாவது சாதனையை சமன் செய்வாரா டெண்டுல்கர்" என்று டாஸிற்கும் முன்பே ஹேஷ்யங்கள் வெளியாகிறது.
 
டோனியின் முடியளவைப்பற்றி முஷாரப் வரை பரபரப்பாகிறது - அவரும் மைசூர் சந்தன சோப் விற்கத் தொடங்குகிறார்..
 
இந்த சாதனையை உடைக்கக்கூடிய அடுத்த இந்தியன் 200 விக்கெட்டுக்கும் மேல் பின்னே இருப்பதால் சாதனை முறியடிக்கப்பட பல ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையிலும் பாராமுகம்.. கிரிக்கின்போ இணையத்தளத்திலும் கூட ஒரு மேம்போக்கான தகவலாக மட்டுமே வருகிறது. வலைப்பூக்களிலும் ஆஸ்திரேலியா - தெனாப்பிரிக்கா ஒரு நாள் போட்டி இதை அழுத்திவிட்டது.
 
கும்ப்ளேவின் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத, நிதானமான சுபாவம் ஒரு முக்கியக்காரணியாக இருக்கலாம். கும்ப்ளேவைவிட சிறந்த டீம் பிளேயர் இந்தியாவில் இல்லை.
 
இவ்வாறு கும்ப்ளே கண்டுகொள்ளாமல் விடப்படுவது இது முதல் முறையும் இல்லை. அவர் உடைத்த பல ரெக்கார்டுகள் கவனிக்கப்படாமல் போனவையே.
 
கும்ப்ளேவின் அபார சாதனைக்கு என் வாழ்த்துக்கள், முரளியும் ஷேன் வார்னேவும் தூரத்தில் இருந்தாலும் எட்டிப்பிடிக்க தளராத உடல் தகுதியும் தேர்வாளர்களின் கருணைப்பார்வையும் பெற பிரார்த்தனை!

Mar 7, 2006

மகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை March 8, 2006

மு கு: இந்த சிறுகதையும் நான் கேள்விப்பட்ட ஒரு உண்மைச்சம்பவத்தைத் தழுவியதே. ஒரு பெண் பார்வையில் கதையைச் சொல்வது கஷ்டமாக இருந்தாலும் முயற்சித்திருக்கிறேன். ரொம்ப நாட்களாக எழுதத்திட்டமிருந்த கதை, இன்று கூடிவரவும், மார்ச் 8 ஆக இருப்பதாலும் நேரடியாக வலைப்பதிவிலேயே ஏற்றிவிட தீர்மானித்தேன், அச்சுக்கு முயற்சிக்காமல்.
________________________________________________________
மகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை

"ராஜி ராதா கார்மெண்ட்ஸ்" பளபளப்பாய்த் தெரிந்தது போர்டு. தினமும் துடைக்கிறான் போல. வாட்ச்மேனுக்கு ஒரு ஐம்பது ரூபாய் இந்த மாதம் கூட்டி விட வேண்டும்.

உற்சாகமாக இருக்கிறது மனது. பூக்காரி கூடக் கண்டுபிடித்துவிட்டாள். "என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கிறே?" என்றாள். ஏன் இருக்க மாட்டேன்? சாதாரணமான வெற்றியா கிடைத்திருக்கிறது? ஐந்து வருடப் போராட்டத்துக்குப் பின்.. எவ்வளவு தோல்விகள், காயங்கள்.. நினைக்காதே.. அதையெல்லாம் பற்றி நினைக்காதே.. இன்று நீ சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள்..

"வணக்கம்மா.. இன்னிக்கு சீக்கிரமாவே வந்துட்டீங்க?"

"கொஞ்சம் வேலை இருக்கு - அதான்" சம்பளத்தை அதிகப்படுத்துவதைப்பற்றி அப்புறம் சொல்லிக்கொள்ளலாம்.

கைப்பையில் துழாவி சாவியை எடுத்துக் கதவு திறக்கும் போதே டெலிபோன் மணி அடித்துக்கொண்டிருந்தது.

அவசரமாக பையை வைத்துவிட்டு போனை எடுத்து "ராஜேஸ்வரி ஸ்பீக்கிங்" என்றேன்

"ராஜியாம்மா? நான் வேதாசலம் பேசறேன், வாழ்த்துக்கள்மா"

"சார் நீங்களா? ரொம்ப நன்றி சார்"

" கம்பெனி ஆரம்பிச்சு ஒரு அஞ்சு வருஷம் இருக்குமாம்மா? சீக்கிரமே சாதிச்சிட்டேம்மா"

"எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார், எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்ததுதானே?"

"சரி எத்தனை பேர் பழசையெல்லாம் நெனச்சு பாக்கறாங்க"

"உங்ககிட்டேயே போட்டின்றது வருத்தமா தான் சார் இருந்துது"

"அதிலே என்னம்மா இருக்கு.. இது பிஸினஸ். இதெல்லாம் சகஜம்தானே"

"காலையிலே முதல் போனே உங்ககிட்டே இருந்து. ரொம்ப சந்தோஷம் சார்"

"பெரிய காண்ட்ராக்டா இருக்கேம்மா.. எதாச்சும் பிரச்சினைன்னா தயங்காம என்கிட்டே பேசும்மா, வேத்தாளா நினைக்காதே."

"எங்களால முடியும்னுதான் சார் நம்பறோம், உங்க வார்த்தையே பெரிய பலம் சார்"

போனை வைத்துவிட்டு சாமி படங்களுக்கு ஊதுபத்தி ஏற்றி நமஸ்காரம் செய்துவிட்டு அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டிருக்கும்போது வெளியே சலசலப்பு ஆரம்பித்துவிட்டது. மணி பார்த்தேன் -ஏழேமுக்கால். சூப்பர்வைஸர் வந்துவிட்டிருப்பார். தையல் பெண்களும் வர ஆரம்பிக்கும் நேரம்தான்.

போனை எடுத்துச் சுழற்றி "கீதா இருக்காங்களா?"

கீதா வந்து "யாரு" என்றாள்.

" நான் தான் ராஜேஸ்வரி பேசறேன். ஸ்ருதி வந்து சேர்ந்துட்டாளா?"

"வந்துட்டாங்க, அப்புறம் ஒரு விஷயம்"

"சொல்லுங்க"

"ராத்திரி ஒன்பது மணிக்கு மேல லேட் பண்ணாதீங்க.. எங்க வீட்டுக்காரர் கத்தறாரு"

"தினமுமாம்மா அப்படி ஆகுது, இப்போ கொஞ்சம் அதிக வேலை அதுனாலதான் ஒரு வாரமா அப்படி ஆயிடுது"

போனை வைப்பதற்குக் காத்திருந்து உடனே மறுபடி அடித்தது.

"மிஸஸ் ராஜேஸ்வரி? வின்சென்ட்"

"சொல்லுங்க சார்"

"இன்னிக்கு பத்து மணிக்கு சைதாப்பேட் ஃபேமிலி கோர்ட், ஞாபகம் இருக்கில்ல?"

"கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் வந்துடறேன் சார். இன்னும் எவ்வளவு நாள்தான் சார் இந்தக்கேஸ் இழுக்கும்?"

"நான் தான் முன்னமே சொன்னேனே மேடம், எக்ஸ் பார்ட்டி செட்டில்மெண்டுக்கு ஒத்துகிட்டா போதுமுன்னு சொல்லறாங்க"

"ஆனா குழந்தையை அவர் வைச்சுக்க விட முடியாதுங்க"

"அப்ப ராகவன் வாய்தா வாய்தாவா இழுப்பார், வேற வழி இல்லை"

போனை வைத்தவுடன் "நீ யாருக்கு வக்கீல்" என்றேன்.

காபியைக் கொண்டுவைத்த பெண்ணிடம் "ராதா மேடம் வந்துட்டாங்களா? என்றேன்.

"இன்னும் வரலைம்மா"

இன்னுமா வரவில்லை? மணி பத்து ஆகிவிட்டதே.

மறுபடி போனைச்சுழற்றி "ராதா?"

" இல்லை நான் சிவா"

"நல்லா இருக்கீங்களா சார்? ரொம்ப நாளாச்சு பாத்து -- ராதா இன்னும் ஆபீஸ் வரலியே, கிளம்பிட்டாங்களா"

"ராதா வரமாட்டா"

"உடம்பு சரியில்லையா"

"இல்லை - நிரந்தரமாவே வரமாட்டா" ஜோக்கடிக்கிறாரா என்ன?

"என்ன சார் தமாஷ் பண்ணரீங்க?"

"தமாஷா? உன்கிட்டே எனக்கு என்ன தமாஷ்? சீரியஸ்ஸாதான் சொல்லறேன். இனி ராதா வரமாட்டா. நாளைக்கு காலையிலே வந்து கணக்கை பிரிச்சிக்கறோம்"

அடிவயிற்றில் குபீரென்றது. குரலில் கோபம்தான் தெரிகிறது. ஒருமையில் பேசமாட்டாரே..

"என்ன சார் இது திடீர்னு?"

"சொன்னா புரியாது? உன்கூட இருந்த டீலிங் எல்லாம் போதும். தனியா கம்பெனி ஆரம்பிக்கப் போறோம் - கணக்கையெல்லாம் சரி பண்ணி வை, நாளைக்கு வர்றோம்" போனை வைத்துவிட்டார்.

காலையில் இருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்துவிட்டது. நெற்றியில் வியர்வை துளிர்க்கத் தொடங்கியது. "ஏன் ஏன் ஏன்?"

"ஏன் இப்போது? என்ன நடந்தது? எப்படி சமாளிக்கப்போகிறோம்" ஆயிரம் கேள்விகள். அடிமனத்தில் "எல்லாம் கனவு" என்று எழுந்திருக்கப்போகிறோம்.. இல்லை - உண்மைதான். என்னவோ நடந்திருக்கிறது. இதை வளரவிடக்கூடாது. உடனே சரி செய்ய வேண்டும்.

நிலைமையை சீர்தூக்கிப் பார்த்தேன்.

ராதா இப்போது விலகினால் பாதிக்கம்பெனியும் மெஷின்களும் அவளுடன் போய் விடும். இந்தக் காண்ட்ராக்டை முடிக்க நினைப்பது கனவுதான். முதலில் ராதாவே காண்ட்ராக்டையும் கேட்டாலும் கேட்கலாம். அவளுக்கும் நஷ்டம்தான் - ஆனால் அவளைத் தாங்க கணவர் இருக்கிறார். நான் விழுந்தால் எழ முடியாது.

என்ன நடந்திருக்கும்? நான் க்ரெடிட் எடுத்துக்கொண்டுவிடப்போகிறேன் என்ற பொறாமையா? யாருக்கு வெற்றி வந்தால் என்ன? லாபம் இருவருக்கும்தானே? சேச்சே பொறாமையாக இருக்காது..

எல்லா வேலையும் கிடக்கட்டும். உடனே அவள் வீட்டுக்குப் போகவேண்டும். சூப்பர்வைஸரைக்கூப்பிட்டேன்.

"எல்லாருக்கும் பீஸ் கொடுத்துட்டீங்களா?"

"ஆச்சு மேடம்"

"சரி கொஞ்சம் ராதா மேடம் வீடு வரை போயிட்டு, அப்படியே சைதாப்பெட் போகணும்.. ட்ரெயின்லே நேரமாயிடும், ஆட்டோக்கும் தூரம் அதிகம், கொஞ்சம் ராதா வீட்டுக்கு போயிட்டு அப்புறம் என்னை ரயில்வே ஸ்டேஷன்லே ட்ராப் பண்ணிடறீங்களா?"

ராதா வீட்டு வாசலில் அவள் கணவர்தான் நின்றுகொண்டிருந்தார்.

"எங்கே வந்தீங்க?"

"இல்லை ராதாவைப் பாத்து பேசிட்டு போகலாமுன்னு"

"உன்கிட்டே என்ன பேசறது - நீ அவளை ஏமாத்தி சுருட்டினது எல்லாம் பத்தாதா?"

நானா? சுருட்டினேனா! இது என்ன புதுக் குற்றச்சாட்டு?

"என்ன சார் சொல்லறீங்க? கணக்கை யெல்லாம் ராதாதானே பாத்துக்கறா?"

"அப்ப அவள் சுருட்டினான்னு சொல்லறயா?"

இது என்ன விதண்டாவாதம் பேசுகிறார்.. ஒன்று மட்டும் புரிந்தது. முடிவை எடுத்துவிட்டு காரணம் தேடுகிறார்.

"ராதாவைப் பார்க்கணும்"

"நீ மட்டும் உள்ளே வா"

சூப்பர்வைஸரை குற்ற உணர்வோடு பார்த்தேன்.

"நான் இங்கேயே இருக்கேன் மேடம், நீங்க பேசிட்டு வாங்க"

ராதா வீடுக்குள் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் விரோதமும் குழப்பமும் கலந்திருந்தன. உட்காரச் சொல்லவில்லை.

"என்ன ஆச்சு ராதா? என்ன பிரச்சினை சொல்லு?"

"உன்கூட இருந்தா நானோ என்கூட இருந்தா நீயோ முன்னேற முடியாதுன்னு தோணுது. அதனால பிரிஞ்சுடறதுதான் நல்லது"

"அதுக்கு சரியான நேரம் பார்த்தியே.. ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோ. இந்த காண்ட்ராக்ட் முடிஞ்சதும் பிரிச்சிக்கலாம்"

"பிரியறதுக்கு முடிவெடுத்ததுக்கு அப்புறம் நேரமா பாக்க முடியும்? அது மட்டும் இல்ல.. அந்த காண்ட்ராக்டும் எங்க பங்குதான்" சிவாதான் பதில் சொல்கிறார். அவள் பேசவில்லை. என்னதான் நடக்கிறது?

"கெஞ்சிக்கேக்கறேன் ராதா.. ஒரு ஆறு மாசம்.."

"அவள் இருந்தான்ன, உனக்கு ஆபீஸுக்கு மட்டுமில்ல, கோர்ட்டுக்கும்தான் கூடவரவேண்டி இருக்கும்"

இப்போது புரிகிறது.. முடிவு இவருடையது..

என்ன செய்வது எனப்புரியவில்லை. இப்போது கோபப்பட்டாலோ, யோசிக்காமல் வார்த்தையை விட்டாலோ பிரச்சினையின் தீவிரம் அதிகமாகிவிடும். ஓரிரு நாள் ஆறப்போடலாம். பிறகு ராதாவிடம் தனியாகப்பேசிப்பர்க்கலாம்..

"இப்படி நட்டாத்துலே விட்டுட்டுப் போறது உனக்கே சரியான்னு யோசிச்சுப்பாரு" சொல்லி எழுந்தேன்.

என் பின்னாலேயே கதவு அறையப்படும் சத்தம் கேட்டது. எனக்கு அழுகை வராதது ஆச்சரியமாக இருந்தது. நிராகரிப்புகளும், ஏமாற்றங்களும் பழகிவிட்டன.

வெளியே வந்ததும்தான் கவனித்தேன். என் கைப்பை வீட்டுக்குள்ளேயே விட்டுவிட்டேன்.

கதவைத் தட்ட யத்தனிக்கும் முன்னே உள்ளே இருந்து பேச்சு கேட்டது.

"வேதாசலம் எப்படி மனுஷன்? சொன்னா சொன்னபடி செயாவாரா?"

"நானும் ராஜியும் அவர்கிட்டேதான முதல்லே வேலை பார்த்தோம்.. அதெல்லாம் கரெக்டா தந்துடுவாரு."

"அவர் சொன்னப்ப கூட நான் நம்பலைடி.. இப்போகூட அந்த சூப்பர்வைஸர் கூடவே வந்திருக்கான் பாரு"

"உங்களுக்கு என்னங்க, கூடவே இருந்த எனக்கே தெரியாது.. சேர்ந்து சேர்ந்து எல்லா இடத்துக்கும் போவாங்க, அப்படித்தான் எங்கேயோ வேதாசலம் பார்த்திருக்கணும்"

இப்போது எனக்கு அழுகை வந்தது.

_____________________________________________________#5

Mar 6, 2006

சன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா? (05 Mar 06)

தமிழ்த் தொலைக்காட்சிகளில் சந்தேகத்துக்கு இடமின்றி முதலிடம். எப்படிப்பெற்றது என்பதற்கு தூர்தர்ஷனின் அரசாங்க சோம்பேறித்தனத்திலிருந்து சுமங்கலி கேபிள் விஷனின் அத்துமீறிய உதவிகள், தொலைத்தொடர்புத்துறையின் நெருங்கிய தொடர்புகள் என எந்தக்காரணம் இருந்தாலும் முதலிடம்தான், அதை மறுக்க முடியாது.

பெற்ற முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஊடகங்களின் அடைபட்ட சுழற்சியில் சுலபமே. (நிறைய பேர் பார்க்கிறார்கள் - அதிக விளம்பர வருவாய் - அதிக செலவில் நிகழ்ச்சிகள் - நிறைய பேர் பார்க்கிறார்கள்--)

சாதாரண நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, செய்திகளில் கூட தமிழ்த் தொலைக்காட்சிகளில் சன்டிவியே அதிகப் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது (TRP).

பெரும்பான்மைத் தமிழ்நாட்டிற்கு பொழுதுபோக்கும் செய்திகளும் வழங்குவதால், அரசிய்லிலும் மிகப்பெரிய சக்தியாக இருந்திருக்க வேண்டிய சன் டிவி, திமுக கூட்டணிக்கு பெரிய பலவீனமே என்றே நான் கருதுகிறேன்.

சன்டிவி திமுக கட்சியின் பிரச்சார பீரங்கியா? இதை ஒரு அடிமட்ட திமுக தொண்டன் ஒத்துக்கொள்வானா? கலைஞர் தவிர்த்து சன்டிவியில் காட்டப்படும் திமுக (இரண்டாம் நிலை) தலைவர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மு க ஸ்டாலினையே எப்போதாவதுதான் கண்டுகொள்கிறார்கள் எனும்போது, துரைமுருகனும், பொன்முடியும் புலம்பிப் பிரயோஜனமில்லை.

தயாநிதி மாறனின் அனைத்து நிகழ்ச்சிகளும் காட்டப்படும்போது கலைஞர் பங்குபெறாத மாநில மாநாடுகளும் ஒருவரிச்செய்தியாகவும் இடம்பெறாமல் போவதை திமுக தொண்டர்கள் கவனித்துக்கொண்டுதான் இருப்பார்கள். இதுபோன்ற நிகழ்வுகள், திமுக ஒரு குடும்பக்கட்சி மட்டும்தான் என்ற தோற்றத்தை கடைநிலைத் தொண்டனுக்கும் ஏற்படுத்தி விடுவதால், கட்சி உணர்வு குறையத்தான் செய்யுமே அன்றி கூடப்போவதில்லை.

கூட்டணிக்கட்சிகளைப் பொறுத்தவரை, சன்டிவி வைகோ மனத்தில் ஒரு ஆறாத வடுவாகவே இருந்து வந்திருக்கிறது. அணி மாறிய நேற்றைய செய்திகளில் வைகோ 2002-இல் பேசியது, 2004-இல் பேசியது என்று அடுக்கி 15 நிமிஷம் காண்பித்தையெல்லாம், அந்த 2002இலும் 2004-இலும் அரை நிமிஷம் காட்டியிருந்தால் கூட அவரைத் திருப்தி செய்திருக்க முடியும். (கூட்டணி மாற்றம் இதனால்தான் என நான் கூற வரவில்லை)

பா ம க வின் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சந்தித்த, சந்திக்கும் மிகப்பெரிய கேள்வி - சன்டிவியை மட்டும் ஏன் தார் பூசாமல் விட்டுவைத்திருக்கிறீர்கள் - நிச்சயம் அவர்களுக்கு சன்டிவியால் தர்மசங்கடம்தான்; அவர்களின் கொள்கைக்கு பின்னடைவுதான்.

சன் செய்திகளுக்கு, விளையாட்டுச் செய்திகள் என்றாலே சச்சின் மட்டும்தான் (சமீப காலமாக சானியா மிர்ஸா). அதேபோல, ஜெயலலிதாவைத் திட்டாத வரையில் காங்கிரஸ் என்றால் சோனியா மட்டும்தான். அதுசரி, காங்கிரஸில் வேறு யார் பெயரைத் தெரிந்துவைத்டுத்தான் என்ன ஆகப்போகிறது?

சரி கட்சிகளை விட்டுவிடுவோம், சாதாரண, கட்சி சாராத பொது மக்களைப் பார்ப்போம். (என்னைப்போன்ற ஒரு ஜந்து). மதுரை மாவட்டத்தில் டி கல்லுப்பட்டிக்கு அருகிலிருக்கும் சிற்றுரில் தண்ணீருக்காக மக்கள் (சுமார் 5 பேர்) திடீரென (சன் காமெராவைப்பார்த்ததும்) சாலை மறியலில் ஈடுபட்டதை செய்தி என்றே வைத்துக்கொள்வோம்.. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவியது எனும்போது, அந்த ஊருக்கு அருகிலேயே இருக்கும் எனக்கு ஏன் பரபரபரப்பு வரவில்லை என்ற கேள்வி என் மனத்தில் எழாதா? நிஜமான போராட்டத்துக்கும் நிஜமான பரபரப்புக்கும் மரியாதை குறைந்ததுதான் மிச்சம்.

கலைஞர் கைது விவகாரம் நிச்சயமாக ஒரு அனுதாப அலையாக உருவெடுத்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் அந்த 2 நிமிட ஒளித்துணுக்கை இதுவரை குறைந்தபட்சம் 2000 முறையாவது ஒளிபரப்பி செய்திகளுக்கு முன் காண்பிக்கப்படும் கடிகாரம் ரேஞ்சில் ரிபீட் செய்து அந்த அஸ்திரத்தைப் பயனிழக்கச் செய்ததுதான் நடந்தது.

மொத்தத்தில், ஒரு பிரம்மாஸ்திரமாக இருந்திருக்கவேண்டிய சன்டிவி, முனை மழுங்கிய குண்டூசியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.

உங்கள் கருத்து?
 
((republish))

Mar 1, 2006

தேர்தலுக்குத் தயாராகிறது ப ம க (01Mar06)

ப ம க பொதுக்குழு நேற்று இரவு சற்றேறக்குறைய இரண்டு மணிக்கு அனைவரும் தூங்கியிருந்த நேரத்தில் கூடியது. நாட்டு நிலவரம் பற்றியும், வரவிருக்கும் தேர்தலில் எதுபோன்ற அணுகுமுறையைக் கையாண்டு ஆட்சியைக்கைப்பற்றுவது போன்ற பல விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.

இ து பொ செ: தலைவரே, நம்ம கட்சி இந்தத் தேர்தல்லே போட்டியிடப்போகுதா இல்லியா? நேத்து ஆரம்பிச்ச கட்சியெல்லாம் கூட இரண்டில் ஒரு கூட்டணியிலே ஐக்கியம் ஆயிடுச்சி. ஆனா நம்ம நிலைமைய பாருங்க.. வலை மக்களுக்கே நம்ம கொ ப செ யாருன்னு தெரியாத அளவுக்கு கட்சியை மறக்கடிச்சுட்டோம்..

நிறுவனர் - தலைவர்: அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க, நாம லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்..

இ து பொ செ: (முணுமுணுப்பாக) ஆமா.. இந்த ரஜினியத்தான் சொல்லணும்.. இப்படி ஒரு டயலாக்க பிரபலப்படுத்தி, சோம்பேறிங்களை வளர்த்து விட்டுட்டாரு. (சத்தமாக) சரி நாம எந்தக்கூட்டணியிலே சேரப்போறோம்?

த: நமக்கு இதுவரை எந்தக்கூட்டணியிலிருந்தும் அழைப்பே வரவில்லையே. "கதவுகள் திறந்துதான் இருக்கின்றன"ன்னு அறிக்கை கூட விட்டுப்பாத்துட்டோம்..

இ து பொ செ: நாம இந்த மாதிரி பெரிய கட்சி ரேஞ்சிலயெல்லாம் பேசலாமுங்களா? நம்ம பலத்தை பத்தி நமக்கே தெரிய வேணாம்?  ஒரு தொகுதியிலயாவது டெபாஸிட்டை வாங்க முடியுமா நம்மாலே?

த: நம்ம கட்சியைப்பற்றி இவ்வாறு பேசினால் கட்டம் கட்டிவைக்கப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன்.

இ து பொ செ: அட நமக்குள்ளேதானே தலைவரே.. அவன் அவன் பத்துத் தொகுதி என் பாக்கெட்டுலே,  அஞ்சு தொகுதி என் லாக்கெட்டுலேன்னு ராக்கெட்டுலே பறந்துகிட்டிருக்கான்.. நாம என்ன சொல்றது..

த: நாம நிச்சயமா ஜெயிக்கக்கூடிய தொகுதின்னு இல்லாட்டியும், 234 தொகுதியிலயும் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் பண்ணப்போறது நாமதானே..

இ து பொ செ: அதெப்படிங்க?

த: எல்லாத்தொகுதியிலயும் பரவலா நமக்கு ஒரு நாலு - அஞ்சு ஓட்டு இருக்குதுன்னு வச்சுக்குவோம். தேர்தல் முடிவுலே 4 - 5 ஓட்டு வித்தியாசம் வந்தா அந்த முடிவை நிர்ணயம் பண்ணது நாமதானே.. இப்பவே பாருங்க, இந்த வார வலைத் தேர்தல்லே நம்ம வாய்ஸ் கொடுத்ததால்தானே ரோஜா அணிக்கு அமோக வெற்றி..

இ து பொ செ: அதை அவங்க ஒத்துக்கணுமே.. எங்களை ஆதரித்த மு மு க, க ச க, ய ப க, ப ம க, ஜ ஜ க மற்றும் கோ கு கவுக்கு நன்றின்னு கலைஞர் ரேஞ்சிலே அறிக்கை விட்டாங்கன்னா?

த: சரி அதை அப்ப பாத்துக்கலாம். புதிய ப ம க நம்ம கூட்டணியிலேதானே இருக்கு..

இ து பொ செ: அவ்ரு கட்சி ஆரம்பிச்சதே உங்களை எதிர்த்துத்தானே.. அவர் எப்போ வேணும்னாலும் வெளிய போயிடுவாரு.

த: நீங்க என்ன நெகடிவ்வா பேசறதுதான் நேர்மைன்னு நெனச்சுகிட்டிருக்கீங்களா? அதெல்லாம் அவர் போக மாட்டார், நான் சென்டிமெண்டலா பேசி கரெக்ட் செய்துடறேன்.

இ து பொ செ:  நீங்க சென்டியா பேசுங்க, அவர் நம்மள மெண்டலாக்கிட்டு போயிடுவாரு. அவரை நிறுத்தி வைக்கணும்னா ஒரே வழி, சின்ன முகமூடிய கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க.

த: நானும் பாத்துகிட்டுத்தான் இருக்கேன், உங்களுக்கு தைரியம் அதிகமாகிகிட்டே வருது. கூட்டணிக்கட்சிக்காரங்க தியாகம் பண்ணாட்டாலே எனக்குக் கோபம் வரும்.. நீங்க நம்ம கட்சியிலே இருந்துகிட்டே இப்படிப்பண்றீங்கன்ன உங்களுக்கு என் இதயத்துலே இடம் குடுக்கறதைத் தவிர வேற எதுவும் பண்ண முடியாது.

இ து பொ செ: அப்புறம் நீங்க புத்தம் புதிய ப ம கவையும் எதிர்நோக்கவேண்டியிருக்கும். சரி சரி நமக்குள்ளே எதுக்கு பிரச்சினை. நம்ம அணுகுமுறையை சொல்லுங்க.

த: அப்படிக்கேளுங்க, நம்ம திட்டங்களை சொல்றேன். முதல் திட்டம், மகாபாரதக்கட்சின்னு ஒன்னு இருக்காமே, அது கூடக் கூட்டணி வைக்கணும். அப்புறம், ராமயணக்கட்சி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கட்சி, தென்கச்சி சுவாமிநாதன் கட்சி இதையெல்லாம் நம்ம கூட்டணியிலே வளைச்சிப் போடணும்.

இ து பொ செ: எதுக்கு?

த: தெரியலையா, அதுனாலதான் நான் தலைவன்! எலக்ஷன் நேரத்துலே எல்லாப் பேச்சாளர்களும் குட்டிக்கதை சொல்லுவாங்க இல்லையா?

இ து பொ செ: ஆமாம்,

த: எதிலே இருந்து சொல்லுவாங்க? ராமயணம், மகாபாரதம், பரமஹம்ஸர் விட்டா தென்கச்சி - இங்கே இருந்துதான அவங்க கதைய சொல்ல முடியும்?

இ து பொ செ: அதனாலே?

த: நம்ம கூட்டணியிலே இந்தக்கட்சியெல்லாம் இருக்கரதாலே, நாம எலக்ஷன் கமிஷன்கிட்டே சொல்லி வேற யாரையும் குட்டிக்கதை சொல்ல முடியாம தடுத்தடலாம் இல்லயா? அவங்களோட பிரசார உத்தியை தவிடுபொடி ஆக்கிடலாமே!

இ து பொ செ: அது சரிதான். மத்த பிரசார உத்தியெல்லாம்?

(மற்றப் பிரசார உத்திகளை பொதுக்குழுவில் இருந்த மற்ற தோழர்கள், தலைவர் ஆகியோர் தொடர்வார்கள்)

 

blogger templates | Make Money Online