Apr 29, 2007

aussies won - so, whats new?

மழையாமே, சரி ரிஸர்வ் தினத்தில்தான் மேட்ச் நடக்கும் என்று வேறு வேலை பார்க்கப் போய்விட்டேன். வந்து பார்த்தால் ஆஸ்திரேலியா வழக்கத்துக்கு மாறாக அடக்கமான ஆரம்பம். 84/0 - 14 ஓவர்களில். சரி ஒரு 5 -6 ரன்ரேட் துரத்த வைப்பார்கள், மேட்ச் சமச்சீராகத்தான் இருக்கும் என்று பார்க்க ஆரம்பித்தால் கில்லிக்கு வந்தது சாமி!

என்னய்யா இது, ஒரு பவுலருக்கு மரியாதை கொடுக்க வேண்டாம்? அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து 140 கிமீ வேகத்தில் போடுகிறானே, அவன் பாலோ த்ரூ முடிவதற்குள் எல்லா எல்லைகளையும் தாண்டிய வரம்பு மீறிய ஆட்டம்.

இத்தனை மேட்சில் அமைதியாக இருந்த கிள்கிறிஸ்ட் இன்று ஆடவும், தலை ஆடுது, இன்னிக்கு வால் ஆடக்கூடாது என்று தீர்மானம் போட்டு ஹேடனும் பாண்டிங்கும் அமைதி (அவங்க ரேஞ்சு அமைதி சார், அதாவது 80 - 90 ஸ்ட்ரைக் ரேட்) காக்க, ஒரு வழையா 281 அடிச்சு அவங்க கடைய மூடும்போதே மணி 11.. தூக்கம் கண்ணை கெஞ்ச ஆரம்பிச்சாச்சு!

பத்தே நிமிஷத்துல ஆரம்பிக்கும்போதே மேன் ஆப் த மேட்ச், முடிவு எல்லாம் ஏறத்தாழ தீர்மானமாகிவிட்டிருந்தது. தரங்கா யாருக்கும் அதிகம் பிரச்சினை வைக்காமல் வீடு திரும்ப, ஜெயசூரியாவும் சங்கக்காராவும் செத்த பிணத்துக்கு உயிர் கொடுக்க முயற்சித்தார்கள். டைட் ஓவரை லூஸ் ஆக்கி 16 ரன், மெக் க்ராத் ஓய்வு பெறுவதை நியாயப்படுத்த 17 ரன் என்று அவ்வப்போது ஒளி தெரிந்தாலும், 8.3க்கு குறையாத ரன்ரேட், நம்பிக்கையை ப்யூஸ் செய்துகொண்டே இருந்தது. சங்கக்காராவும் ஜெயசூரியாவும் அவுட் ஆனபிறகு ஆட்டம் தொடர்வதில் ஸ்டேடிஸ்டிக்ஸுக்கு மட்டும்தான் உதவும் என்று தெரிந்துவிட்டது.

ஆனால் இந்த அம்பயர்கள் செய்த அநியாயங்கள்? பாண்டிங்குக்கு கொடுத்த வார்னிங்குக்கு, க்ளார்க் அடித்த முதல் ரன்னை சாப்பிட்டார்கள். வெளிச்சக்குறைவை ஏற்று இலங்கை பேட்ஸ்மேன் வெளியேற, ஆட்டம் முடியவில்லை, நாளை தொடரும், கொண்டாடாதீர்க்ள் எனத் தடை போட்டார்கள். அடப்பாவிகளா! அது முன்னாலேயே தெரிந்திருந்தால் 30 ஓவரிலேயே வெளியேறி கொஞ்சமாவது அதிகமாக வாய்ப்புகளை வைத்திருப்பார்களே!

இந்தப் பிரச்சினைகளில் 30 - 40 நிமிடம் வழக்கத்தை விட அதிகமாகி, பால் எங்கே அம்பயர் கால் எங்கே என்று தெரியாத ஒரு இருட்டில் ஆட்டத்தை ஆடி கணக்குக் காட்ட முயன்றார்கள். ஜெயவர்தனேவின் பண்பு பாராட்டத்தக்கது. அவர் வேண்டுமானால் பிடிவாதம் பிடித்து இன்னொரு நாள் தோல்வியை தள்ளிப்போட்டிருக்கலாம்.

எனக்கு எரிச்சலூட்டிய விஷயம் என்னவென்றால், அம்பயர்களின் முடிவுகள் வெளிப்படையாக இல்லாதது. முதல் இன்னிங்ஸில் சட்டப்படி அவர்கள் எடுத்த முடிவு சரியானதாக இருக்கலாம். ஆனால் பாண்டிங்குக்கு கொடுத்த வார்னிங்கை க்ளார்க்கின் முதல் பாலிலேயே தண்டனை கொடுப்பது நியாயமா? 3 ஓவரில் 80 ரன் அடிக்கவேண்டி மறுநாள் வருவது சட்டமாக இருக்கலாம், இவர்களுக்கே ஓவராகத் தெரியாதா?

ஒரு வழியாக கோப்பையை ஆஸ்திரேலியர்கள் ஷாம்பெயினால் குளிப்பாட்டிய போது மணி 4! ஆலிம் தர் குறைந்தபட்சம் 40 நிமிஷம் சாப்பிட்டுவிட்டார்!

ஆஸ்திரேலியா எப்படி இப்படி சொல்லிச் சொல்லி ஜெயிக்கிறார்கள்? என்றைக்காவது பாண்டிங்தான் எங்கள் கடவுள் என்று ஒரு போஸ்டர் பார்த்திருக்கிறோமா? வார்னேவை டீமில் சேர்க்க உண்ணாவிரதம் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோமா? ஈஸ்ட் ஆர் வெஸ்ட், கில்லி இஸ் த பெஸ்ட் என்றாவது ஒரு போஸ்டர்? தனிநபர்களாக இல்லாமல் குழுவாகவேதேன் இந்தப் பத்து வருடமுமே அடையாளம் காணப்பட்டிருக்கிறது ஆஸ்திரேலியா. மெக்க்ராத் சொல்கிறார், நாலு பந்து ஆடியிருப்பேன் உலக்ககோப்பையில், அது ஃபோர் டூ மெனி -யாம்.

பேட்ஸ்மேன் அவர்கள் வேலையைச் சரியாகச்செய்கிறார்கள், பௌலர்கள் தங்கள் வேலையை, பீல்டர்களும் அவ்வாறே. வேறெந்த டீமிலும் இல்லாத ப்ரொபஷனல் அணுகுமுறை. பேட்ஸ்மேன்கள் இரண்டிரண்டு பேராக ஜோடி சேர்த்து ஆடுகிறார்கள், கில்லி அவுட்டானால் ஹேடன், பாண்டிங் அவுட்டானால் க்ளார்க்கு, சைமண்ட்ஸ் அவுட்டானால் ஹஸ்ஸி! எதாவது ஒரு மூணு பேர் ஆடிவிடுகிறார்கள்.

தெளிவான திட்டமிடல், எந்த தேவையில்லாத டென்ஷனையும் மேலேற்றிக்கொள்ளாத மனப்பாங்கு, பெர்பார்ம் செய்யாவிட்டால் தொங்கும் கத்தி (பழம்கதையெல்லாம் உதவாது!)-- பொறாமைப்பட வைக்கிறது ஆஸ்திரேலியாவின் டீம்.

ஜெயிச்சதுக்கு வாழ்த்தெல்லாம் அவங்களே எதிர்பார்க்கமாட்டாங்க - சோ, வாட்ஸ் நியூன்னு சொல்லிட்டு போயிடுவாங்க!

Apr 26, 2007

வ வா சங்க ஆப்புரேசல்

ஆப்புரேசல் பேரு வச்சுகிட்டு எல்லாரும் புகழ்ந்துட்டுப் போறாங்க!
சிறுபிள்ளத் தனமால்ல இருக்கு? அவிங்க எப்படியாப்பட்ட ஆளுங்க? இந்த ஊரிலே தல அடிவாங்காத இடமே கிடையாது, தெரியுமா?

ஆப்பு வைக்காம அரவணைச்சுப்போனா சங்கத்துச் சிங்கங்கள் பங்கமாயிப்
போயிடுமேன்றதுக்காக நான் ஆப்பே வைக்கிறேன்.

(எனது மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான் இந்த முடிவெடுத்திருக்கிறேன்
என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை)

SWOT அனாலிஸிஸ் ஆவே பண்ணிடறேன். ஆனா, வரிசைப்படி இல்லாம.

முதல்ல வீக்னஸ் Weaknesses (பெசிமிஸ்டிக் பெனாத்தலார் ;-)

சீரியஸான குறைகளை முதல்ல சொல்லிடறேன்.

1. நகைச்சுவைக்கு எவ்வளவோ ஸ்கோப் (அரசியலைக் கிண்டலடிக்கிறது, சினிமாவைக் கிண்டலடிக்கிறது எட்ஸெட்ரா) இருந்தாலும், சங்கத்துச் சிங்கங்களோட கேரக்டரை மட்டுமே வச்சு காமடி பண்றது, பாதுகாப்பான விளையாட்டா இருக்கலாம், ஆனா சீக்கிரமே அலுத்துப்போய்விடும். (இதுவரை இல்லைன்றதையும் ஆறுதல் பரிசா சொல்லி வைக்கிறேன்:-)

2. நகைச்சுவையை வெளிப்படுத்த எத்தனையோ மீடியங்கள் இருந்தாலும்
(போட்டோஷாப் கிம்மிக், வாய்ஸ் ஓவர் விடியோ, மசாலா மிக்ஸ், ப்ளாஷ்
அனிமேஷன்) பெரும்பாலான வ வா சங்க படைப்புகள் நாடகம் போலவே
அமைந்திருக்கிறதும் ஒரு குறை. (மைண்ட் வாய்ஸிலே பாதிக்குப் பாதி வருவதும் அதிகமாகப்போனால் அலுத்துவிடும். லக்கிலுக் அட்லஸா சில போட்டோஷாப் பண்ணாரு, நான் அட்லஸா இருந்தப்ப சிவாஜி ரீ-ரிலீஸ் பண்ணேன்.. இதெல்லாம் விதிவிலக்குகள்தான்.

3. அனுபவ நகைச்சுவை, பொதுமைப்படுத்தப்பட்ட கேரக்டர்கள் என்ற இரு
பாகங்களிலேயே ஏறத்தாழ எல்லா பதிவுகளையும் வகைப்படுத்திவிடலாம். கவிதை,
கட்டுரை, டங் ஆப் ஸ்லிப், ஸ்லாப்ஸ்டிக், அடுத்தவன் செலவிலே சிரிக்கறது..
இதெல்லாம் தேடினாலும் கிடைக்கவில்லை.

ஆக, சுருக்கமாச் சொல்லப்போனா ஒரு பிராண்டு நகைச்சுவை மட்டும்தான் கிடைக்குது. ஆனா,

எண்ணிக் க்ளிக்க பதிவை - க்ளிக்கிட்டு
எண்ணுவம் என்பது டூலேட்டு.

என்ற இணைய வள்ளுவரின் வாக்கினிற்கேற்ப, க்ளிக்கியவன் மனம் கோணாமல், சிரிக்கவைப்பதில் வெற்றிபெறும்வரை ஒரு பிராண்டா இருந்தா என்ன, வெர்ஸடாலிட்டி கிடைக்காட்டாதான் என்ன? மெக்டொனால்ட்ஸ்லே மைசூர் போண்டா கிடைக்குதா? கே எப் சிலேதான் இடியாப்பம்-பாயா கிடைக்குதா?

அடுத்ததா ஸ்ட்ரெங்த் (Strengths):

நிறைகளைச் சொல்லபோனால் சொல்லிக்கொண்டே போகலாம்.

1. நகைச்சுவைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது. காண்ட்ரவர்ஸி
தவிர்த்த நகைச்சுவை வேண்டும் என்பதற்காகவே பொதுவாழ்வில் உள்ள யாரையும் பிடிக்காமல், தனிநபர் தாக்குதலை அறவே தவிர்த்து, சின்ன க்ரவுண்டா இருந்தாலும் அதுலே பீல்ட் அழகா செட் பண்ணி விளையாடுறது.

2. எழுதறவங்களுக்கே பொதுவா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ப்ளாக் வந்துடும், கை ஓடாது. அதிலும் காமடி எழுதறவங்களுக்கு இன்னுமே அடிக்கடி இந்த ப்ளாக் வரும். மூடு, சூழ்நிலை, நேரம் எல்லாம் வாஸ்துப்பிரகாரம் அமைஞ்சிருந்தாலே நகைச்சுவை எழுத்து வர்றது கஷ்டம்.

இந்தப் பிரச்சினைக்கு இவங்க கண்டிருக்க தீர்வு சிம்பிள் ஆனா எபக்டிவ்.
ஒரு ஆளை மட்டும் நம்பாதே - கூட்டத்தை வளைச்சுப்போட்டுக்க. முதல் ஆளுக்கு ப்ளாக் வரும்போது மூணாவது ஆள் பாத்துப்பான், அவனுக்கு வந்தா அடுத்த ஆளுன்னு காமடி எழுதறதுக்குப் பஞ்சமே இல்லாத கூட்டம்

3. ஏற்கனவே இவங்களுக்கு நல்ல கூட்டம் இருந்தாலும், வெளியே போற
சிரிப்புமூட்டிகளையும் மாசத்துக்கு ஒருத்தரா சேத்து விளையாடறதால வர
புதுமை, ப்ரஷ்னெஸ்.

4. நல்ல நிர்வாகம். சீரா பதிவுகள் வருவது கவனத்தில் நிற்க ரொம்ப
முக்கியம். ஆரம்பிச்ச ஜோர்லே எல்லாரும் பங்களிப்பாங்க. கொஞ்ச நாள்
கழிச்சு இங்க ஆணி, அங்க ஸ்க்ரூன்னு ஸ்க்ரூட்ரைவர் அடிக்கக்
கிளம்பிடுவாங்க. எல்லாத்தையும் அரவணைச்சு ஒரு குழுப்பதிவை நடத்தறது எவ்ளோ கஷ்டம்ங்கறது விக்கிக்கு கஷ்டப்படற கொத்தனாரைப் பாத்தபிறகுதான் புரிஞ்சுகிட்டேன். பெரிய இடைவெளி விழாம பதிவுகள் வருவதே நிர்வாகத்தின் திறனைக் காட்டுகிறது.

அடுத்ததா த்ரெட்ஸ் (Threats):

1. ஒரே மாதிரியான பதிவுகளே திரும்பத் திரும்ப வரும் வாய்ப்புகள். வெற்றி
அடையும் பதிவுகள் என்பது பின்னூட்டம் வாயிலாக மட்டுமே கணக்கிடப்படும் நிலையில், இப்படிப் பதிவிட்டால் பின்னூட்டம் வரும் என்று தெரிந்து அடைபட்ட சுழற்சியாக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடலாம்.

2. பின்னூட்டங்களில் நான் தான் பர்ஸ்ட், இப்போதைக்கு அட்டண்டண்ஸ்,
அப்புறம் படிச்சிட்டு வரேன் போன்ற ஒத்தை வரிப் பின்னூட்டங்கள், இது எதோ ஒரு தனிக்குழுவோட டிஸ்கஷன் போர்டு போலத் தோன்றக்கூடியவை. புதியவரை விலக்கிவிடும் அபாயம் கொண்டவை.

கடைசியா ஆப்பர்சூனிட்டீஸ் (Opputunities):

1. புதிது புதிதான பதிவர்களை - நகைச்சுவையாளர்களை உள்ளே இழுக்கலாம்.

2. புதிது புதிதான பார்மட்களில் நகைச்சுவை முயலலாம்.

3. போட்டி என்று வைக்கும்போது சில விதிமுறைகளை அதிகப்படுத்தலாம் -
போட்டிக்கான தலைப்பு அல்லது தீம் போல!

4. தினம் ஒரு ஜோக் மாற்றலாம் - ட்ராபிக் தினமும் இருக்கும்.

ஆக, மொத்தமாக நான் சொல்வதெல்லாம், இன்றுபோல் என்றும் வாழ்க - இல்லை, இன்றைவிடவும் சிறப்பாக என்றும் வாழ்கதான்.

ஆப்பு பந்தத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல அண்ணன் சாத்தான்குளத்தானை அழைக்கிறேன்.

Apr 25, 2007

இன்னும் ஒரு பட்டை

பட்டை போடுவது பேஷனாகிவிட்ட இக்காலத்தில் இசைவண்டியில் எகிறிக்குதிக்கும் முகமாக (Jumping the Bandwagon:-))பெனாத்தலார் இந்தப்பட்டையை வழங்குகிறார்.




உங்களுக்குத் தேவையான நிறங்கள், பின் வண்ணங்களிலும் வழங்கப்படும்.




தேவையான நிறத்தைப் பின்னூட்டமிட்டு, வாங்கிக் கொள்ளுங்கள்.




உபயோகப்படுத்துகிறவர்கள் ஒரு பின்னூட்டம் தண்டம் கட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apr 22, 2007

பதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்!!!!!

பல முக்கியமான பதிவர்கள் பல முக்கியமோ முக்கியமான விஷயங்களை அலசி
ஆராய்ந்து காயப்போடும் காட்சிகள்:

இந்தப்படத்தில் சிற்றுரை நடத்திக்கொண்டிருக்கும் பிரபல பதிவர் பற்றி
அறிமுகம் தேவையில்லை.

சுடச்சுட புகைப்படங்கள்,, ஆனால் சுடவே முடியவில்லை :-(

Apr 12, 2007

போக்கிரி - பேக்கரி - சிவகாசி

துபாயில் கேபிள் தொலைக்காட்சி வழங்கும் ஈ-விஷன், புதன் கிழமைகளில் ஒரு
தமிழ்ப்படத்தைக்காட்டுகிறது, கடந்த சில வாரங்களாக. சந்திரமுகி, காக்க
காக்கவை தாமதமாகச் செய்தி தெரிந்ததால் தவறவிட்டதால், அடுத்ததையாவது
விடக்கூடாது என்ற ஆர்வத்தில் நேற்றைய படத்தை முழுவதும் பார்த்தேன்,
தூக்கத்தைத் தொலைத்தேன்!

பேரரசு கதை வசனம் திரைக்கதை பாடல்கள் இயக்கத்தோடு பஞ்ச் டயலாக்
ஆரம்பத்தோடும் வந்து அசத்தியிருந்தார். (களைப்பை ஏற்படுத்தினார்
என்பதற்கும் இதைத்தானே சொல்லவேண்டும்?)

கமர்ஷியல் படங்களுக்கு நான் எதிரியல்ல என்பதை முதலிலேயே
சொல்லிவிடுகிறேன். சண்டை போட்டு எதிரி பறப்பது, வேகமான குத்தாட்டம்,
அம்மா தங்கை செண்டிமெண்ட் எல்லாவற்றையும் ரசிப்பேன். கில்லி, பாட்ஷா,
முதல்வன், இந்தியன், வரலாறு, நாட்டாமை -- இது போன்ற படங்களை மோசம் என்று
நிச்சயம் சொல்லமாட்டேன்.

ஆனால், சிவகாசி! பார்ப்பவனுக்கு மூளை கிடையாது, வெறும் பேக்கிரவுண்டு
சத்தத்தையும் மாறி மாறிப்பேசும் சவசவ வசனங்களையும் வைத்தே
முழுப்படத்தையும் ஓட்டிவிடலாம் என்ற பெரும் தைரியம் பேரரசுவுக்கு!

லாஜிக் என்ற விஷயம், படத்துக்குப் படம் மாறுபடும். வாயாலே மட்டும்
சுவாசிப்பவன் என ஒரு குணாதிசயத்தை ஒரு பாத்திரத்துக்கு முதல் காட்சியில்
சொல்லிவிட்டால், அதை நாம் ஏற்றுக்கொண்டு, அவன் மூக்கால் சுவாசிப்பதாகக்
காட்டினால் லாஜிக் ஓட்டை என்போம். விண்வெளியில் நடக்கும் படத்தில்
கிராவிட்டி காட்டினால் லாஜிக் ஓட்டை - இல்லையா..

இந்தப்படத்தில் ஒரு கேரக்டருக்கும் குணாதிசயம் ஒன்றுமே கிடையாது. பெண்கள்
முழுதாக ஆடை அணிந்திருக்கவேண்டும் என்று நடுத்தெருவில் அறிவுறுத்துவார்
ஹீரோ. அடுத்த காட்சியில் தாவணி அணிந்து வருபவளையும் கிண்டல். காதல் இல்லை
- நீ போ என்று ஒரு காட்சி. என் காதலியை என்னுடன் அனுப்பு என
அரிவாள்சகிதம் பெண்வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சி (இரண்டுக்கும் இடையே
இடைவெளி, மனம் மாறக்காரணம் ஒரு எழவும் கிடையாது!), இவ்வளவு கோபமாக என்னை
அடிக்க வருகிறானென்றால் அவன் தான் உலகிலேயே பெஸ்ட் மாப்பிள்ளை என்னும்
பணக்காரத் தந்தை, சகோதரர்கள்..

அனுதாப ஓட்டு வாங்க தங்கை புருஷன் இறந்ததாக நாடகமாம், ஓட்டு எண்ணிக்கை
முடிந்த கையோடு அவன் வீடு திரும்புகிறானாம் - ஊரில் உள்ள பொதுமக்கள்,
பார்க்கும் பொதுமக்கள் எவனுக்கும் சிந்திக்கச் சக்தி கிடையாது என்ற
எண்ணம்!

ஆச்சரியமான ஒற்றுமை, இந்தப்படத்துக்கும் வெயிலுக்கும்.

இரண்டிலும் தகப்பன் அடிக்க பையன் ஊரை விட்டு ஓடுகிறான், பத்துப்
பதினைந்து வருடம் கழித்து திரும்பிவருகிறான். ஊரில் உள்ள சகோதரன்
பணக்காரனாய் இருக்கிறான்.

ஆனால் ஒற்றுமை அங்கேயே முடிகிறது. இந்த ஒற்றுமை எப்படிப்பட்டதென்றால்,
சைக்கிளிலும் பால்பேரிங் இருக்கிறது, ஏரோப்ளேனிலும் பால்பேரிங்
இருக்கிறது என்பதைப்போல!

சரி ஒழிந்து போகட்டும், உதவாத படத்தை உருப்படாத நேரத்தில் பார்த்து
உணர்ச்சிகளைக் கொந்தளிக்கவைத்துக்கொண்டது என் தவறு, இதை ஏன் பதிவாகப்போட
வேண்டும்?

போக்கிரி என்ற அடுத்த மகா டுபாக்கூர் படத்தையும் பார்த்து விமர்சனமும்
எழுதியிருந்தது என் ரசிகக்கண்மணிகளுக்கு நினைவிருக்கலாம்.

http://penathal.blogspot.com/2007/01/blog-post_21.html

லொள்ளு சபாவில் லேட்டஸ்ட்டாக அந்தப்படத்தைக் கிண்டலடித்திருந்தார்கள்.
நானும் பார்த்தேன். அருமையான கிண்டல்.

1 - http://www.youtube.com/watch?v=h8bOpkqJAPA
2 - http://www.youtube.com/watch?v=_pNK9jT2NWc
3 - http://www.youtube.com/watch?v=ffqh8uAdqhA
4 - http://www.youtube.com/watch?v=HClK_rmyRt8

மிகவும் ரசித்துச் சிரிக்க முடிந்தது - அடிக்கத் துரத்துபவர்களை நிறுத்தி
ஆர அமற பஞ்ச் டயலாக் பேசுவது, சண்டை-காதல்-சண்டை-காதல் எனத் திரைக்கதையை
கிண்டலடித்திருந்தது, ஆடியன்ஸ் ரியாக்ஷன் என ஒவ்வொரு சீனும் சிரிப்பை
வரவழைத்த சடையர்!

அதற்கு திடீரென பொதுமக்களிடம் (?) இருந்து எதிர்ப்பு வந்ததாம், விஜய்
டிவி மன்னிப்புக் கேட்டிருக்கிறது!

http://bharathi-kannamma.blogspot.com/2007/04/blog-post_11.html

கிண்டல் அடிக்கக் கூட உரிமை இல்லையா இந்த நாட்டில்? இந்த லொள்ளு சபா
எபிஸோட் படத்தைத் தான் கிண்டல் அடித்திருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில்
விஜய் மீது தாக்குதல் செய்திருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.

எத்தனையோ நல்ல படங்களையும் ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்களையும்
கிண்டல் செய்தபோது எழாத பொதுமக்கள் எதிர்ப்பு இப்போது
எழுந்திருக்கிறதென்றால், அது காபி வித் தயாநிதி மாறனின் விட்டகுறை
தொட்டகுறை போலத்தான் தெரிகிறது - நல்லதுக்கில்லை!!

Apr 9, 2007

BJP..வீடியோ குறித்து..

பாரதீய ஜனதா கட்சியைப்பற்றி பெரிய அபிப்பிராயம் ஒன்றும் எனக்கு இருந்தது
கிடையாது. சந்தர்ப்பவாத காங்கிரஸுக்கு ஒரு மாற்று, வலதுசாரியும்
சேர்த்தால்தான் பாராளுமன்றம் சமச்சீர் பெறும் என்பதால் ஆதரவான
எண்ணங்களும், மாற்று என்பது alternate ஆக இல்லாமல் substitute ஆகச்
செல்கிறதே என்பதாலும், சிறுபான்மையினரின் அபிமானத்தை பெற இயலாமல்
இருப்பதாலும் எதிர்ப்பு எண்ணங்களும் சேர்ந்தே ஓடும்.

இன்று காலை சன் டிவி செய்திகளில் "கைதாவாரா பிஜேபி தலைவர்?" என்று
கேட்ட்போதும்கூட, சன் டிவியின் மீதுள்ள நம்பிக்கையால் (?) கவனிக்காமல்
விட்டுவிட்டேன்.

கில்லி மூலம் கிடைத்தது சித்தார்த் வரதராஜன் எழுதியுள்ள இந்தக்கட்டுரை:

http://svaradarajan.blogspot.com/2007/04/that-communal-bjp-cd-transcript.html

உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு அங்கமாக, பிஜேபி
தயாரித்திருக்கும் விளம்பரப்படத்தின் காட்சியமைப்புகளை எழுதியிருக்கிறார்
சித்தார்த் வரதராஜன்.

அந்தக்காட்சிகளின் சுருக்கத்தை இங்கே தருகிறேன், ஆங்கிலத்தில் உள்ளது
அவர் பதிவின் காபி பேஸ்ட்:

காட்சி 1: இரு முஸ்லிம் இளைஞர்கள், இந்து எனப் பொய்சொல்லி, ஒரு தூய
இந்துவிடம் பசுமாட்டை விலைகொடுத்து வாங்கி, வெட்ட இழுத்துச்
செல்கிறார்கள். பசுமாதா செண்டிமெண்ட்!

Uncle [head in hands]: This is a terrible crime, what am I going to do?

Nephew: You can cry about this your whole life. You've committed a big
sin by selling your cow to the butchers.

காட்சி 2: இந்துக்கள் அனைவரும் குடும்பக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க,
முஸ்லீம்கள் திட்டமிட்டு தங்கள் ஜனத்தொகையை ஏற்றுகிறார்களாம்.

real news clip of speech by saffron-clad woman: "Hindus will produce
two children and Muslims will marry five times and produce 35 dogs
each and make this country into an Islamic state -- என்ன வார்த்தைகள்,
எவ்வளவு கண்ணியம்!

காட்சி 3: விவரம் தெரிந்த ஆசிரியர், மக்களுக்கு எதிர்காலத்தை
விளக்குகிறார் -- வேறு யாரும் ஆட்சிக்கு வந்தால் குங்குமம் இறங்கும்,
தாடி வளர்க்கவேண்டிவரும் என்று!

you are calling the Masterji mad but everything he said is correct. If
today we don't take care, these tilaks will go and we will all be
sporting beards and caps.

காட்சி 4: அதே ஆசிரியர், பெண்களிடம் பேசுகிறார் -- இப்போது சரியான
முடிவெடுக்காவிடில் புர்க்காவுடன் தான் அலையவேண்டி வரும்..

Woman 4: Masterji, why are you chewing your brains? People will vote
for whoever they want.

Masterji: It is your brain that has been ruined! You will end up
covered in burqas and eating paan!


காட்சி 5: ஹை டிராமா! இந்து எனப் பொய்சொல்லி காதலித்த பெண்ணை வேறு ஒரு
கிழவனுக்கு மணம் முடிக்கிறான் ஒரு முஸ்லிம் இளைஞன். செய்தி கேட்ட
சோகத்தில் பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்!

Muslim man: Ha ha ha! When Hindu girls get ensnared by us, they scream
and shout but sadly there is no one to listen to them and we have
great fun. Ha ha ha ha ha!

காட்சி 6: மேற்படி ஆசிரியர் மறைவின்போது மக்கள் பேசிக்கொள்கிறார்கள் --
ஆசிரியரின் தியாகம், தீர்க்கதரிசனம் குறித்து, சோகன்லால்களும்
மோகன்லால்களும் நக்வியாகவும் அப்பாஸாகவும் மாறப்போகும் அவலம்
குறித்தும்..

Who knows how many more masters will be martyred because of their
concern for this country! But your eyes will still not open. And now,
that day is not far away when we will be afraid to even call ourselves
Hindu, and you will never be able to find a Sohanlal, Mohanlal,
Atmaram or Radhekrishan anywhere

இதைத் தொடர்ந்தும், உள்ளேயும், தலைவர்கள் பேச்சுக்கள், நிஜநிலைமை, பாபர்
மசூதி இடித்த வெற்றிச்சம்பவம் குறித்த க்ளிப்புங்குகள்..

மிகைப்படுத்தல், திரித்தல், பயத்தை உருவாக்குதல் என்ற வெற்றிகரமான
விளம்பரங்களின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கக்கூடிய வீடியோ.

திறமையான பிரச்சாரம், படிக்காத மக்களைச் சென்றடையக்கூடிய பிரசாரம்,
இம்பாக்டை உருவாக்கக்கூடிய காட்சியமைப்புகள் -- இதைத் தடை செய்தே
ஆகவேண்டும் என்பதற்கான முதல் காரணிகள்.

தலைமை அலுவலகத்தின் ஆசியோடு இப்படி ஒரு படம் வெளிவருமென்றால், இதை
மையமாகக் கொண்டு பேசக்கூடிய இரண்டாம் மூன்றாம் மட்டப் பேச்சாளர்களின்
தொனி எப்படி இருக்கும்! தலை குனியவேண்டும் அந்த ஸோ கால்டு மென்மையான
தலைவர்கள்.

சட்டமும் நீதியும் உடனடியாக கைகொடுக்கவேண்டும். இதைப் பரவாமல்
பார்க்கவேண்டும், இப்படிப்பட்ட தாக்கங்கள் மனதில் இல்லாமல் ஓட்டளிக்க,
தேர்தலையே தள்ளிவைத்தாலும் சரிதான்.

முந்தைய தேர்தல் தோல்வியினால் கடின நிலை எடுக்கவேண்டி இருக்கும் என்பது
எதிர்பார்த்ததுதான் - ஆனால் இவ்வளவு கடினநிலையா? ஆட்சிக்கு வரும் பாதை
இப்படிப்பட்டதென்றால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எந்த நிலைக்குச்
செல்வார்கள் இவர்கள்?

தீவிரவாதிகள் -- இரு மதத்திலும் உள்ளவர்கள் என்பது ஒரு சிறு
சதவிகிதம்தான். அதை அதிகப்படுத்தி, உணர்ச்சிகளோடு விளையாடி கலவரத்தைத்
தூண்டி அதன் மூலம் ஒரு ஆட்சியைப் பெற நினைக்கும் பிஜேபிக்கு..

சீஈஈஈஈஈய்த்தூஊஊஊஊஊஊஊஊஊ!

நாசமாய்ப் போங்கள்!

Apr 4, 2007

Reservation குறித்த என் சந்தேகங்கள்

இட ஒதுக்கீடு - Reservation, மறுபடி தலைப்புச் செய்திகளில் இடம்பெறத்
துவங்கிவிட்டது. பல பதிவுகள் இதைப்பற்றி வந்தாலும், என் எளிய சந்தேகம்
ஒன்றே ஒன்று.. அது தீர்ந்தபாடில்லை. இதன் நுணுக்கம், செயல்பாடு பற்றிப்
பல பதிவுகள் வந்திருந்தாலும் இந்தக்கேள்விக்கு யாரும் தெளிவான
விடையிறுக்கவில்லை.

கேள்வி இதுதான்:

சிவாஜி என்று ரிலீஸ்? என்று ரிஸர்வேஷன் ஆரம்பிக்கும்?

பி கு1: சில உப்புமாவுக்கு சீஸன் உண்டு, சிலது ஆல்-டைம் -ஃபேவரைட் :-)

பி கு2: இந்த மீள் உப்புமா பதிவு, நானும் பதிவுலகத்தில்தான் இருக்கிறேன்
என்று காட்டிக்கொள்ள மட்டுமே.

பி கு 3: ரெண்டு போதாது?

 

blogger templates | Make Money Online