Apr 26, 2008
இரண்டும் ஒன்றும்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள்
Apr 22, 2008
இதென்ன கலாட்டா?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 24 பின்னூட்டங்கள்
Apr 13, 2008
புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!
இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
=>தமிழ் நாட்டில், பொங்கல் ஆண்டு முதல் நாளாக அறிவிப்பதற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்?
பொங்கல் இந்துக்களின் திருநாள் என்றால் உலக இந்துக்கள் அனைவரும் "பொங்கல்" கொண்டாடவேண்டும். இது தமிழர் திருநாள், தமிழர் அறுவடைத் திருநாள்,தமிழர் நன்றித் திருநாள்.
பல மதத்தினர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களின் மத ஆண்டாக எதை வேண்டுமானலும் கொள்ளலாம் அதற்காக சமஸ்கிருத ஆண்டுதான் தமிழ் ஆண்டாக இருக்க வேண்டும் என்று சொல்வது எப்படி? நாளை இஸ்லாமும்,கிறித்துவமும் அவர்கள் ஆண்டை தமிழ் ஆண்டாக வைக்க வலியுருத்தினால் ?
நிச்சயம் "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒரு பொதுவான ஒரு தேதியை இந்தியா முழுக்க பயன்படும் வண்ணம் யராவது அறிவிக்கலாம்.
"இந்து" தமிழ் நாட்டில் மட்டும் இல்லை அல்லவா?
அப்படி அகில உலக "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒன்று அனைவராலும் ஏற்கப்படும்போது தமிழ்நாட்டில், அந்த மத மக்களுக்காக அதை விடுமுறையாக அறிவிக்கலாம்.
மதம் என்பது தனிப்பட்ட உரிமை. தனிமனித விருப்பம். புத்தாடை உடுத்துவது, கோவில்களுக்கு செல்வது என்பதை தவிர சித்திரைப் புத்தாண்டில் என்னவிதமான சடங்குகள் கொண்டாடப்படுகின்றன என்பதை சொன்னால் அறிந்து கொள்வேன். தை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்ததால் அவையெல்லாம் தடைபடும் என்று சொன்னால் அவர்களின் மத நம்பிக்கை என்பதை போலித்தனமானது என்றே சொல்வேன்.
புத்தாண்டை இடம் மாற்றுவதால் உங்களுக்கு என்ன நட்டம் ? உங்களை யாரும் சித்திரையை தவிர்க்கச் சொல்லவில்லையே. அப்படி சொன்னாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை, பிறகு ஏன் தேவை இல்லாது கவலைப்படுகிறீர்கள் ?
1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?
சித்திரை முதல் நாளுக்கும் விடுமுறை இருக்கும் - இந்து என்போருக்கான சிறப்பு நாளாக அது இருப்பதில் ஆட்சேபணை இல்லை - ஆனால் தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறப்படக்கூடாது.8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
அரசாங்கம் யாரையும் தடுக்கவில்லை, பெயரை மட்டும்தான் மாற்றி இருக்கிறது..
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 33 பின்னூட்டங்கள்
Apr 9, 2008
நாடாட ஓட்டாட.. 2
வெல்கம் பேக் ஆப்டர் தி ப்ரேக்..
நம்ம நிகழ்ச்சியோட அடுத்த கண்டெஸ்டண்ட்.. அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே..
யெஸ்.. யூ கெஸ்ட் இட் ரைட்.. இட் இஸ் நன் அதர் தன்...
வாட்டாள் நாகராஜ்!
அதிரடியாகவே உள்ளே நுழைகிறார்..
அதாண்டா இதாண்டா வாட்டாளு நான் தாண்டா
அந்தத் தமிழ் ஆளுங்க அனைவருக்கும் எனிமிடா..
எடியூரப்பா ஆரம்பிச்சாண்டா.. நாகராஜு தொடர்ந்திடுவாண்டா..
நான் ஆறைப் பங்கு போட விடுவதில்லைடா..
அதிலும் தமிழு பேசும் ஆளை விடுவதில்லைடா.. ஆ ஆ அதாண்டா!
கொஞ்சம் கூல்டவுன் ஆகி, ஒரு மெலடியைப் போட்டுத் தாக்குகிறார்.
என்ன விட.. இங்க கன்னடத்தை காக்கறதுக்கு யாரும் இல்லை எவனும் இல்ல..
என்ன விட.. இங்க கலவரத்தை கிளப்பறதுக்கு யாரும் இல்ல.. எவனும் இல்ல..
ஆத்துத்தண்ணி குடிச்சா ஒழிப்பேண்டி..
டிவியில தமிழ அழிப்பேண்டி..
பாதி ஊரு எல்லாம் எமக்கேடி..
மீதி ஊரு நாளைக்குக் கேப்பேண்டி..
என்ன விட...
முடிக்கும் விதமாக ஒரு குத்துப்பாட்டைப் போட்டு முடிக்கிறார்:
ஏய்.. தாத்தா.. ஆத்தோரமா வாரியா..
நான் பாத்தா.. பம்மிகிட்டே போறியா!
அட எங்க பக்கம் நியாயம் இல்ல..
ஆமா அருவி கேட்டா உனக்கு தொல்ல...
ஏய்ய்!!
நடுவர் 1: பின்ன? இவரு கான்சப்ட் இல்லாமயே கம்பு சுத்துவாரு. இப்படி ஒரு மேட்டர் கிடைச்சா.. முதல்ல கலவரத்தைக் கிளப்பிட்டுதான் காரணமே கேப்பாரு.. இவருக்கு, வேற வழியில்ல, 10!
நடுவர் 2: நான் இதுக்கெல்லாம் பயப்படாது. ஆனா சினிமாவ நிறுத்திடுவாரோன்னுதான் பயப்படுது. சோ, என் மார்க் 8!
நடுவர் 3: முதல் அக்கா சொன்னதுகூட சேந்துக்கறேன். ஏன்னா, எனக்கும் பயம்.
டூயட் ரீமிக்ஸ்.. கர்நாடக பாஜக, காங்கிரஸ் ஒரு கட்சியாவும், தமிழக காங்கிரஸ் பாஜக இன்னொரு கட்சியாவும்..
நாடொன்று கண்டேன், நியாயம் காணவில்லை, என்னென்று நான் சொல்லலாகுமா.. என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
ஓட்டொன்று கண்டேன், உண்மை காணவில்லை, என்னென்று நான் சொல்லலாகுமா.. என்னென்று நான் சொல்ல வேண்டுமா?நான் வாங்கும் ஓட்டு நீ பார்ப்பதில்லை, நீ வாங்கும் ஓட்டு நான் பார்ப்பதில்லை..
நான் பார்க்கும் ரீஜன் உன் ரீஜன் இல்லை, என்னோட வோட்பேங்க் உன் பேங்கு இல்லை..
எல்லையிலே கொள்கையில்லை.. ஒற்றுமையில் நாட்டமில்லை..
ஓட்டோடு உறவாடும் கட்சி எங்கள் கட்சியல்லவோ..நின்றேன்.. ம்ஹூம்.. வென்றேன்.. ம்ஹூம்.. சுருட்டினேன்..
காம்படிஷன்லேயே இல்லாட்டியும் சும்மா கிளப்பிட்டாய்ங்க இல்ல பீதிய!
நிக்ழ்ச்சியோட அடுத்த.. அதாவது கடைசியான ஜோடி வரப்போறாங்க! லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்! ஆமாம்.. வி வெல்கம் ஆன் ஸ்டேஜ்.. தெ கிரேட் கலைஞர் கருணாநிதி அண்ட்.. ஹிஸ் உட் பி கர்நாடகா கவுண்டர்பார்ட்.. மிஸ்டர் எஸ் எம் கிருஷ்ணா!
டூயட் பாட்டில், கலைஞர் தொடங்குகிறார்:
ஏலே.. ஏலேலே லே..
ஹொகெனக்கல் ஓரத்துல
பாத்திகட்டி பத்திரமா
தண்ணியத்தான் ஊத்தித்தரேன்
தாகமெல்லாம் தீத்துத்தரேன்
வாடி .. நீ வாடி..
பத்துவருசம் முன்னாலியே
எல்லாரையும் கேட்டுப்பிட்டேன்
பாச்சலோட ஓடிவாரேன்
எலும்பொடிஞ்சா
கவலையில்ல
வாடி.. நீ வாடி..
ஏலே ஏலே லே லே..
எல்லைதாண்டி வாராம் பாரு..
அவனைச் சிறையெடுக்கப் போறேன் வாடி..
எஸ் எம் கிருஷ்ணா:
அய்யய்யோ.. என் ஓட்டுக்குள்ளே கைய வச்சான் அய்யய்யோ..
அய்யய்யோ.. என் ஊருக்குள்ளே தண்ணி மொண்டான் அய்யய்யோ..
கலைஞர்:
திண்டாடி நான் தேடித் தேடி..
நானும் கொண்டாந்தது இந்தத் தண்ணி..
கிருஷ்ணா:
நீ போனாக்கூட குத்தம் இல்லை..
நல்லா ஆட்சி பாக்கும் இந்தப் புள்ள! அய்யய்யோ!
அடடா.. அணுகுண்டை அக்குள்லே சொருகிகிட்டோமோ ன்னு கலைஞர் கொஞ்சம் மாடரேட் பண்றாரு..
உன்னைத்தானே.. பஞ்சம் என்று தண்ணீர் கேட்டேன் நானே
உயிர் போகிறது.. திட்டம் போடவிடு..
குடிநீர் கொடுத்து கொஞ்சம் வாழவிடு!
விடாம சண்டித்தனம் பண்றாரு கிருஷ்ணா
என்னைத்தானே.. தானமாகத் தண்ணீர் கேட்டாய் நீயே..
ஓட்டு போகிறது.. ஆட்சி போகிறது
நியாயம் பேசிவிட்.. இது நேரமில்லை..
சோகத்தின் உச்சத்தில் தொடர்கிறார் கலைஞர்:
ஓடும் கட்சிகளே..
ஒருசொல் கேளீரோ..
ஆடும் ஆட்சியிலே
ஆதரவு தாரீரோ..
நாடாளும் சட்டசபையில்
மைனாரிட்டிக்கு நான் தலைவன்,,
கூட உள்ள கட்சிகளின்
தலைமைக்கு நீ தோழன்..
தண்ணீரிலே உன் ஓட்டு..
பிஜேபி போட்ட ரூட்டு
பிரச்சினையில் என் கூட்டு.
இதில் நான் அந்த ப்ளான்
பற்றிப் பாடுவதெங்கே பாட்டு!
அரங்கம் ஒளிரத்தொடங்க, எல்லாரும் அவசரமாக கண்ணைத்துடைக்க கர்சீப் தேடுகிறார்கள்.
ஆஹா.. நவரசமும் கலந்த கான்சப்ட்.. ஜாலியா டூயட் பாடினாலும் கடைசியில எல்லாரையும் அழவைச்சுட்டாங்க! நடுவர்கள் உடனே எதுவும் சொல்ல முடியாத நிலைமையில இருக்காங்க.. ஜட்ஜஸ், கண்ணைத் தொடச்சுக்கிட்டு கமெண்ட் சொல்லுங்க..
நடுவர் 1: என்னன்னு சொல்லுவேன்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி பர்பார்மன்ஸ். வேற எங்க இருந்து வராட்டியும், கண்ணுல இருந்து தண்ணி வரதை நிறுத்தவே முடியல.. என் மார்க் 10!
நடுவர் 2: ஆமாக்கா.. வழக்கமா நாமதான் இவர் முன்னாடி ஆடுவோம், இப்ப நம்ம முன்னாடி இவர் ஆடுறாரேன்றதப் பாத்ததும் கண்ணுலேயே அருவி.. அது என்னோட எல்லைக்குள்ளதான் இருக்கு! நானும் 10!
நடுவர் 3: நீங்க ரெண்டு பேரும் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு.. (விசும்பியபடி) நானும் 10 மார்க்தான்.
வாவ்.. புல் மார்க் எடுத்து போட்டியிலே பரிசைத் தட்டிக்கிட்டுப் போறாங்க கலைஞர்-கிருஷ்ணா ஜோடி.. அவங்களோட சூப்பர் பர்பார்மன்ஸ் இப்படியே கண்டின்யூ ஆனாதான் எடியூரப்பா அண்ட் கோ தோக்க முடியும்..
நாம நிகழ்ச்சியோட சோகமான கட்டத்துக்கு வந்துட்டோம். (எல்லாருக்கும் கிளிசரின் சப்ளை பண்ணியாச்சாப்பா?) இன்னிக்கு எலிமினேட் ஆகப்போற டீம் யாருன்னு பார்க்கப்போறோம்! யார் அந்த பாவப்பட்ட டீம்?
அழாதீங்க.. இன்னிக்கு இல்லாட்டியும் அடுத்த சான்ஸுல நீங்க உள்ள வர வாய்ப்பு இருக்கு..
இல்ல மேடம்.. இதுவரைக்கும் எந்த காம்படிஷன்லேயும் ஜெயிச்சதே இல்லை..
உங்க பர்பார்மன்ஸை இம்ப்ரூவ் பண்ணனும்.. ஆனா நம்பிக்கையத் தளர விடாதீங்க!
பொதுமக்கள் டீம் அழுதுகொண்டே விலக க்ரெடிட் டைட்டில்ஸ் ஓட ஆரம்பிக்கிறது.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 24 பின்னூட்டங்கள்
Apr 7, 2008
நாடாட.. ஓட்டாட!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 22 பின்னூட்டங்கள்
