Oct 23, 2004

வீரப்பனுக்கு சில இரங்கல் கவிதைகள்

எல்லாரும் வீரப்பனை கொன்றது பற்றி ப்ளாக்கித் தள்ளிவிட்டார்கள். என் பங்குக்கு சில பிரபல கவிஞர்களிடமிருந்து இரங்கல் கவிதைகளை வாங்கி இங்கே பிரசுரிக்கிறேன்.

முன்னாள் அ(று)ரசவைக் கவிஞர் கோலி:

அடைந்திருக்கலாமே நீ சரண்-
உன் மேல் இருந்த வழக்கு எல்லாம்
ஏறி இருக்குமேபரண்.

சுடப்பட்டதாலே நீ
வீணப்பன்..பிழைத்திருந்தால் தின்றிருக்கலாமே
மைசூர் கார பன்.

நீ செய்ததோ நூறே கொலை-
உன் உயிரா அதற்கு விலை?

கொன்றவரும் அடித்தார் மொட்டை--
விட்டிருந்தால் காடே மொட்டை!

நீ நிறுத்திவிட்டாய் உன் ஆட்டத்தை--
நானும் நிறுத்துகிறேன் என் பாட்டத்தை.

கவிச் சர்வாதிகாரி தங்கப் பவழம்:

நீ கண் திறந்தால் ஆனைகள் அதிரும் -
பொறை உன் கண் மூடியதால் அன்றோ
பூனைகளும் புது வீரம் கண்டன?

உன் ராஜராஜாங்கத்தில் சிறு நரிகளையும்
உலவ விட்டதனால் அன்றோ
எலிகளும் இன்று ஏரியல்-வ்யூ பார்க்கின்றன?

நீ கைமுஷ்டிக்குள் புயலை அடக்குபவன்..
வெறும் தென்றலா உன்னை புரட்டிப் போட்டது?

நீ காட்டையே கட்கத்தில் அடக்கியவன் -
சிறு செடியா உன்னை இடறி விட்டது?

யாரும் அடிக்க வர்றதுக்கு முன்னாடி வுடு ஜூட்!

Oct 17, 2004

வணக்கம்..

முதல் முறையாக வலைப்பதிவுக்கு வந்துள்ளேன்.

எனக்கு எழுத வராது. ஆனாலும் எழுதுவேன்.

(ஒரு பழைய ஜோக்:
என் மாப்பிள்ளைக்கு சீட்டாட வராது, ரேஸ் ஆட வராது..

பரவாயில்லையே! நல்ல விஷயம் தானெ!

அவருக்கு ஆட வராதுன்னு தான் சொன்னேன். ஆட மாட்டாருன்னா சொன்னேன்?)

முயற்சி செய்கிறேன்.. நன்றாக கிறுக்குவதற்கு!

 

blogger templates | Make Money Online