1982ல் பாரதியாருக்கு நூற்றாண்டு வந்தபோது கல்கியில் ஒரு பரிசுப்போட்டி வைத்திருந்தார்கள் (கோகுலமா கல்கியா எனச்சரியாக நினைவில் இல்லை). பாரதியார் பாடல்களில் சில எண்களைக்கண்டுபிடிக்கச் சொல்லி. சில எண்கள் சுலபமாக இருந்தாலும் (முப்பது கோடி - முப்பது கோடி முகமுடையாள், அறுபது கோடி - அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் கூட்டுவள் தாய்) சில எண்களுக்காக பலமுறை படிக்க வேண்டி வந்தது (நாற்பதாயிரம் - நலமோர் எத்துணையும் கண்டிலேன், இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் - சுயசரிதை).
போட்டியில் பரிசு கிடைக்கவில்லை - ஆனால் பாரதியார் பாடல்களின் மீதும் தமிழின் மீதும் தீராத ஆர்வத்தை எனக்குள் உருவாக்கிவிட்டதற்காக அந்தப்போட்டிக்கு என்றும் என் நன்றிகள்.
ஆதர்சத்தை வீட்டில் உருவாக்குவது என்றும் மகிழ்ச்சியைத் தருவது.
பாரதியாருக்கு ஓட்டைப்பல் என்பதை சரித்திர ஆசிரியர்கள் மறைத்தது ஏனோ?
அவர் பாட்டை அவரே பின்பாட்டாய்ப் பாடுகிறார்.
Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts
Dec 11, 2006
டிசம்பர் 11
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள்
Subscribe to:
Posts (Atom)