தேர்வு முடிவுகள் வந்துவிட்டதில் இன்னிக்கு நீ, நாளைக்கு நான் என்றிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.
பரபரப்பான செய்திகளை முந்தித்தரும் தினக்குழப்பம் நாளிதழில் இரண்டு செய்திகளும் மாறிமாறி வர, குழம்பிப்போயிருக்கிறார்கள் நிருபர்களும் ஆசிரியர்களும். எந்தச் செய்தியை எப்படி எழுதுவது என்ற குழப்பத்தில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் செய்த வன்முறையில்.. இதோ அந்த ஸ்க்ரீன்ஷாட்.
பிகு: க்ளிக்கிப்பார்த்தால் படிக்கும் அளவுக்குத் தெரியும்.
May 9, 2011
தேர்வா? தேர்தலா?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள்
Mar 23, 2011
எங்கே தேடுவேன்.. தலைவனை எங்கே தேடுவேன்.. (Flash - தேர்தல் ஸ்பெஷல்)
பினாத்தல்கள் வழங்கும் மற்றுமொரு ஃப்ளாஷ் குவிஸ்.
தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று புரட்சித்தலைவர் பாடிவிட்டுப்போய்விட்டார். ஆனால் அந்தத் தலைவன் / தலைவி எங்கே இருக்கிறார்?
இந்த ஃப்ளாஷில் ஒருவேளை இருக்கலாம் :-)
விளையாட்டு ரொம்ப சிம்பிள். பதினாறு அரசியல்வாதிகள் போட்டோக்கள் ஃப்ளாஷின் வலதுபக்கத்தில் இருக்கும். பத்து கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான அரசியல்வாதியை க்ளிக் செய்து உறுதி செய்து அடுத்த கேள்விக்குச் செல்லவேண்டியதுதான்.
வெயிட்.. வாட் இஸ் திஸ் பொருத்தமான?
அதற்குத்தான், க்ளூ தர ஃப்ளாஷின் இடதுபக்கத்தில் ஒரு சிறு அனிமேஷன் க்ளிப்; அந்த அசைபடத்தில் வரும் விஷயங்கள் எந்த அரசியல்வாதிக்குப் பொருத்தம் என்பதைத் தேர்ந்தெடுத்து, க்ளிக்க வேண்டும்.
கடைசியில் வரும் கோடை எனக்கு அனுப்பினால், அதை நான் இங்கே அப்டேட் செய்துவிடுவேன்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 67 பின்னூட்டங்கள்
வகை அரசியல், நையாண்டி, போட்டி, ப்ளாஷ், விளையாட்டு
Apr 1, 2010
May 21, 2009
பேருந்துகளுக்கு கலர் அடிக்கலாம் வாங்க! (Flash)
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாஷுடன் வந்திருக்கிறேன்.
பேருந்துகளுக்கு கலர் அடிக்க வேண்டும். இதான் விளையாட்டு. 7 பேருந்து, 7 கலர் காம்பினேஷன் கீழே கொடுத்திருக்கிறேன். எந்தப் பேருந்துக்கு என்ன வண்ணம் அடிக்கலாம்? அதான் கன்ப்யூஷன்.
எந்தக் கலர் எந்த வண்டிக்கு சூட் ஆகும்? வண்டியோட ஓட்டுநர் என்ன நினைக்கிறார், நடத்துநர் என்ன நினைக்கிறார்? வண்டியில என்ன சினிமா ஓடுது, அந்த வண்டியில ஏறிட்ட பயணிங்க என்ன நினைக்கிறாங்க - இதையெல்லாம் ஒட்டுக்கேட்டு, தனித்தனியா கொடுத்திருக்கேன். அதை மறைக்க ஒரு பட்டை - ஒரு க்ளிக் பண்ணா எழுத்து தெரியும். இந்த க்ளூவெல்லாம் வச்சு, கீழே இருக்க ஏழு கலர் காம்பினேஷன்லே இருந்து இந்தப்பேருந்துக்கு கரெக்டா கலர் அடிக்கணும். அவ்வளவுதான் கேம்.
கலர் கரெக்டுதான்னு உறுதிப்படுத்திட்டீங்கன்னா, அடுத்த பேருந்து ரெடியா நிக்கும். அதுக்கும் க்ளூவைப்பாத்து கரெக்டா கலர் அடிங்க. எல்லா பஸ்ஸும் முடிச்சிட்டீங்கன்னா எத்தனைக்கு கரெக்டா கலர் அடிச்சீங்கன்னு மார்க்கும், எவ்வளவு க்ளூ உபயோகப்படுத்தினீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி போனஸ் கூட கிடைக்கும் - அதாவது இருக்கற 4 க்ளூவில் 2லேயே கண்டுபிடிச்சிட்டா அதிக போனஸ்!
அங்க இருக்கிற கோட் - ஐ பின்னூட்டமா போட்டீங்கன்னா நீங்க எவ்வளவு வாங்கினீங்கன்னு நானும் தெரிஞ்சுக்குவேன்.
யார்யார் சரியான விடை சொல்லி இருக்காங்கன்னு இங்கே உடனுக்குடனே பதிவாயிடும்.
இது சங்கமம் போட்டிக்காக உருவாக்கப்பட்ட ப்ளாஷ். நேரம் வரும்போது அங்கேயும் வந்து ஓட்டுப் போட்டுடுங்க!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 67 பின்னூட்டங்கள்
Apr 1, 2009
துக்ளக் இணைய இதழ் - இலவசமாய் படிக்க:
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள்
Jan 19, 2009
திருமங்கலம் Millionaire!
"உனக்கு எப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரியும்?"
"எனக்குத் தெரியும்"
"பெரிய பெரிய ப்ரொபஸர்ங்க, ஐ ஏ எஸ் ஆபீஸருங்க எல்லாம் 4 கேள்வி தாண்டறதில்லை.. உனக்கு மட்டும் எப்படி தெரியும்?"
"தெரியும்"
"நீ யாரு? எந்த ஊர்லே இருந்து வந்தே?"
"மதுரைக்குப் பக்கத்துல திருமங்கலம்னு ஒரு கிராமம்.. அங்கேதான் நான் வளர்ந்தது.. டீக்கடை வச்சு பொழைச்சுக்கிட்டிருந்தேன்"
காட்சி மில்லியனேர் செட்டுக்கு மாறுகிறது.. நிகழ்ச்சி நடத்துபவர் ஆரம்பிக்கிறார்:
"வாருங்கள் நாம் மில்லியனர் நிகழ்ச்சி விளையாடலாம்... நம் எதிரே இருப்பது திருமங்கலத்தில் இருந்து வந்திருக்கும் சுடலைமுத்து.. சுடலைமுத்து என்ன செய்றீங்க?"
"டீக்கடை வச்சிருக்கேன்"............(தேவையான அளவு அவரைக் கிண்டல் செய்ததன் பின்)..
"இதோ உங்களுக்கான முதல் கேள்வி.. ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் போட்டிருக்கும்?
அ. இந்திரா காந்தி
ப்ளாஷ் பேக்:
நானும் எல்லா எலக்ஷனிலும் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் தான் ஓட்டுப்போட்டு கிட்டிருந்தேன்.. திடீர்னு ஒரு நாள் டிவியில மட்டும் பாத்த பெரிய மனுஷங்க எல்லாம் ஊருக்கு வந்தாங்க..
வீட்டுக்குள்ள ஒழிச்சு வச்சிருந்த ரேஷன் கார்டு .. வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துகிட்டு ஓடிப்போனேன்.. கும்பலையெல்லாம் விலக்கிட்டு உள்ளே நுழைஞ்சேன்.. அப்ப அதைப்பாத்துட்ட்உ ஒரு பெரிய மனுசன் எனக்கு ரூபாய் நோட்டு ஒண்ணு தந்தாரு.. அதில..
போலீஸ் ஸ்டேஷன்..
கான்ஸ்டபிள் சொல்கிறார்: ஆமாம் சார்.. எனக்கு கூட அப்பதான் 1000 ரூபாய்க்கு நோட்டு இருக்குனே தெரியும்..
மில்லியனர் செட்..
"வாழ்த்துக்கள்.. திருமங்கலம் டீக்கடைக்காரருக்கு 1000 ரூபாய் பரிசு.."
"3000 ரூபாய்க்கான இரண்டாம் கேள்வி.. தயாரா?"
"தயார்"
"மின்சார விளக்கு எரிய முக்கியமான தேவை எது?
அ. நெருப்பு பெட்டி
ப்ளாஷ்பேக்:
"என்னாய்யா டீ போட்டிருக்கே.. ஒரே உப்பா கரிக்குது"
"மன்னிச்சுக்கங்க.. சக்கரையும் உப்பும் பக்கத்துல இருந்துச்சு.. உப்பைப் போட்டுட்டேன் போல.."
"ஒரு மெழுகுவத்தி கொளுத்திக்க வேண்டியதுதானே.."
"எல்லாம் தீந்து போச்சுங்க.. நேத்து வரிக்கும் கரண்டே கட் ஆவலையா? அதனால தேவைப்படல. எலக்ஷன் தான் முடிஞ்சு போச்சே.. இதோ போய் வாங்கி வரேன்"
கரவொலி சத்தம் மில்லியனர் அரங்கை நிறைக்கிறது.
"20000 ரூபாய்க்கான பரிசை வாங்கிச் செல்கிறார் திருமங்கலம் சுடலைமுத்து"
"இவ்வளவு பெரிய அமவுண்டை பார்த்திருக்கிறீர்களா சுடலைமுத்து?"
"எங்கேங்க? எங்க வீட்லே மொத்தம் 2 வோட்டுதான். பக்கத்து வீட்டு பரமர் 10 வோட்டு மொத்தமா வச்சிருந்தான்.. அள்ளிட்டான்"
"கவலைப்படாதீங்க.. நீங்க இங்கேயும் அள்ளலாம்"
"ஆறாவது கேள்வி.. தயாரா?"
"கேளுங்க"
"உளியின் ஓசை படத்தின் கதை வசனகர்த்தா யார்?
அ.கலைஞர்
ப்ளாஷ்பேக்:
"மச்சான் என்னை சினிமாக்கு கூட்டிகிட்டு போறதா சொல்லி ஏமாத்திகிட்டே இருக்கே"
"இதோ.. இன்னிக்கு கூட்டிட்டு போறேன்.. வார்டு கவுன்சிலர் வந்தாரு.. எல்லாருக்கும் டிக்கட் தந்தாரு.."
"ப்ரீயாவா?"
"ஆமாம்.. எனக்கு மட்டுமே 10 டிக்கட் தந்தாரு.. முடிஞ்சா ப்ளாக்லே வித்துட்டு அதுலயும் கொஞ்சம் பணம் பாக்கலாம்"
படம் பார்க்கிறார்கள்.
"தோ பாரு.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சங்காத்தமும் கிடையாது.. எங்கப்பன் ஊட்டுக்கு போறேன் நான்.. சினிமா கூட்டுட்டு போறானாம் சினிமா.. தியேட்டர்லே தனியா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இனிமே என்னைப்பாக்க வராதே!"
மில்லியனேர் செட்
"சரியான விடை சுடலை.. நீங்கள் 40000 ரூபாய் ஜெயித்துவிட்டீர்கள்"..
போலீஸ் ஸ்டேஷன்:
"தில்லானா மோகனாம்பாள் யார் வசனம் சொல்லு பாக்கலாம்?"
"எனக்குத் தெரியாது"
"அதுவே தெரியாது.. இது எப்படி தெரியும்?'
"அவங்க அந்தக் கேள்வி கேக்கலையே!"
மில்லியனர் செட்
"1,60,000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி:
தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
அ.பாம்பே
"இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது.. ஆடியன்ஸ் போல்"
போலீஸ் ஸ்டேஷன்..
"இந்தக் கேள்விக்கு உனக்கு விடை தெரியாதா? குழந்தை கூட சரியாகச் சொல்லுமே?"
"படித்த குழந்தை சரியாக்ச் சொல்லும்.. எனக்குத் தெரியாது"
மில்லியனர் செட்டில் கரவொலி.
"ஆஹா.. நம்ம டீக்கடைக்காரர் எல்லாக் கேள்விக்கும் சரியான விடை சொல்லி கலக்கிகிட்டிருக்கார்.. இன்னும் இரண்டு லைப் லைன் வேற வச்சிருக்கார். 320000 ரூபாய்க்கான ஒன்பதாவது கேள்வி.. தயாரா?"
"தயார்.."
"மதுரையில் டிவி பார்க்க எந்த கேபிள் கனெக்ஷன் வேண்டும்?
அ. அரசு கேபிள்
ப்ளாஷ்பேக் விரிகிறது..
"வெட்றா அந்தக் கம்பத்தை.."
"அண்ணே பாத்து வெட்டுங்கன்னே.. டீக்கடை ஓலைச் சாரம் அதோட ஒட்டி இருக்கு"
"இவன் எவண்டா.. அண்ணன் கேபிள்லே தெரியாத சானல் எங்கயும் தெரியக்கூடாதுன்னு பாடுபட்டுகிட்டிருக்கோம்.."
வெட்டிய கம்பம் கீழே விழுகிறது..டீ பாய்லரும் சேர்த்து.
போலீஸ் ஸ்டேஷன்.
"பத்து நாள் ஆச்சு எனக்கு சூடுபட்ட கொப்பளம் ஆற"
மில்லியனர் செட்
"சரியான விடை.. கலக்கறீங்க சுடலை.."
"10 ஆவது கேள்வி..
"லட்டு தயாரிக்க என்ன தேவை?
அ. கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய்
"விடை தெரியுமா தெரியாதா?"
"கேள்வி ரொம்பக் கஷ்டமா இருக்குது"
"வழக்கம் போல ப்ளாஷ்பேக்குக்கு போக வேண்டியதுதானே?"
ப்ளாஷ்பேக்:
"சுடலை.. லட்டு கொடுக்கறாங்களாம்.. போய் வாங்கல?"
"அடப்போடா.. அவன் அவன் வாஷிங் மெஷினும் டிவியும் கொடுக்கறான்.. இவங்க போயும் போயும் லட்டுதான் தராங்களா?"
"அட.. இது சாதா லட்டு இல்லைடா..வாங்கிப் பிரிச்சுப் பாரு"
மில்லியனர் செட்
"விடை ஈ..இவற்றில் எதுவும் இல்லை"
"ஷ்யூர்? கான்பிடண்ட்?"
"ஆமாம்"
"எப்படி சொல்றீங்க?"
"தங்கத்தைப் பத்தி வேறெந்த விடையிலேயும் இல்லியே?"
"வாவ்.. சரியான விடை"
"13 ஆவது கேள்விக்கு வந்துட்டீங்க.. 50,00.000 ரூபாய் இந்தக்கேள்விக்கு சரியான விடை சொன்னா கிடைக்கும்"
"இவற்றுள் எது கலவரத்தை உடனடியாக உண்டாக்கும்?
அ. பங்காளிச் சண்டை
ப்ளாஷ் பேக்..
"எல்லாக் கடையையும் மூடச்சொல்லுங்கடா.. மேயர் அம்மா வராங்க.. "
போலீஸ் ஸ்டேஷன்..
"ஆச்சரியமா இருக்கு உன்னைப்பாத்தா.. கேள்விக்கு எப்படி பதில் சொல்லி ஏமாத்தினேன்ன்னு கேட்டா அதுல இருந்து தப்பிக்கறதுக்கு கலவரத்துக்கு க்ரிஷ்ணாயில் சப்ளை பண்ணேன்னு ஒத்துக்கற.. இதுக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?"
"என்ன ஒரு இருபதாயிரம் கிடைக்குமா?"
"ஷார்ப்பா இருக்காண்டா"
மில்லியனேர் செட்
"சுடலைமுத்து, நீங்க ரொம்ப கேர்புல்லா இருக்கணும். ஒரு கோடிக்கான கேள்வி இது. தயாரா?"
"தயார் சார்"
"இதோ உங்கள் கேள்வி"
"இவற்றுள் எது இலவசமாகக் கிடைக்காது?
அ. டிவி
"குழப்பமா இருக்கே சார்.. டிவி எங்க ஊருக்கு கிடைச்சிருச்சு.. மத்ததுல.."
"மில்லியா.. மல்லியா கேஸா?"
"குழப்பமா இருக்கு சார்.. 50/50 ஆப்ஷன் உபயோகப்படுத்தறேன்"
"சரி.. கம்ப்யூட்டர், ரெண்டு தவறான விடையை அழிச்சுடுங்க"
"இ. மில்லி, ஈ. மல்லி.. எது சரியான விடை?"
"இப்பவும் சரியாத் தெரியலையே சார்.. எலக்ஷன் டைம்ல மட்டுமா எல்லா டைம்லேயுமா சார்?"
"அது எனக்குத் தெரியாது.. விடை இ. மில்லியா ஈ. மல்லியா?"
"தெரியலையே சார்"
"அப்ப விடை இ. மில்லியாவும் இருக்கலாம், ஈ.மல்லியாவும் இருக்கலாம் இல்லையா?"
"ஓக்கே சார்.. சரியான விடை ஈ. மல்லி"
"ஷ்யூர்? இ.மில்லியாவும் இருக்கலாம் இல்லையா?"
"இருக்கலாம் சார். ஆனா என் விடை ஈ.மல்லிதான்"
"ஓக்கே கம்ப்யூட்டர் கப்யூட்டர் ஈ மல்லியாம். லாக் பண்ணித் தொலைங்க.. லாக் பண்ணித் தொலைங்க"
"ஆ! ஈ மல்லி சரியான விடை.. நீங்கள் இப்ப ஒரு கோடீஸ்வரர்.. அடுத்த கேள்வி,.."
பாங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
"ஆ! அடுத்த கேள்வி நாளை இதே நேர நிகழ்ச்சியில கேட்கப்படும்.. நன்றி"
செட்டை விட்டு வெளியே வந்த நடத்துநர் "போலீஸ் ஸ்டேஷன், சுடலை ஏமாத்துறான்.. அவனை அடிச்சு உண்மையைக் கண்டுபிடிங்க"
போலீஸ் ஸ்டேஷன்.. "எப்படிடா ஈ மல்லின்னு சரியா சொன்னே?"
"எலக்ஷன் டைம்லே நெறய மில்லி ப்ரீயா கிடைச்சுது சார்.. மல்லி எப்பவுமே கிடைச்சதில்ல.. அதான் சொன்னேன்.."
"சரி.. திருமங்கலத்துக்காரன் எல்லாரும் சொல்ற மாதிரிதான் கேள்விய செட் பண்ணி இருக்கானுங்க கேனப்பயலுங்க.. அவனுங்க கிட்ட பிரச்சினைய வச்சுகிட்டு உன்னை அடிக்கச் சொன்னான் பாரு.. அவனைத்தான் உதைக்கணும்.."
மறுநாள் செட்டில்:
"வாங்க சுடலைமுத்து.. உங்ககிட்ட கடைசிக் கேள்வி கேட்கணும்.. இதுக்கு சரியான விடை சொன்னா உங்களுக்கு ரெண்டு கோடி.. தப்பான விடை சொன்னா, அய்யா ஜாலி.. நாங்க எதுவுமே கொடுக்க வேணாம்"
"கேளுங்க சார் கேள்வி"
"இந்தியாவின் பிரதம மந்திரி யார்?
அ. கலைஞர் மு கருணாநிதி
"சுலபமான கேள்விதான்.... இல்ல?"
"எனக்கு இதுக்கு விடை தெரியாதே?"
"ஏமாத்தாதீங்க.. இதுக்கா விடை தெரியாது?"
"நெஜமாதான் சொல்றேன் சார்..போன் அ பிரண்ட் போடலாமா?"
"யாருக்கு?"
"இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.."
"யாரது?"
"சோனியா காந்தி!"
***************************************************************************
தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?
அ.
இல்லை.. எல்லாம் நம் தலைவிதி!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 71 பின்னூட்டங்கள்
Dec 30, 2008
பினாத்தல் டாப் டென் மூவீஸ் 2008!
வழங்குகிறோம்: பினாத்தல் டாப் டென் மூவீஸ்.
இது இந்த வருடம் வெளியான சில படங்களைப் பற்றிய எங்கள் விமரிசனக்குழு கணிப்புகள். தமிழ்நாட்டில் வெளியானவை பற்றி மட்டுமே இந்த கணிப்புகள் வெளியிடப்படுகின்றன; விமரிசனக்குழுவைப் பாதித்த எல்லா படங்களும் இந்த வரிசையில் இருக்கின்றன - ஆனால் எந்தப்படம் சிறந்த படம் என்று வரிசைப்படுத்தப்படவில்லை.
1.அபியும் நானும்:
தாத்தா பக்கமா பேரன் பக்கமா என்று திண்டாடும் ஆவி, கோலங்கள் அபியினால் ஒரு பக்கம் சாயும் கதை. லூஸ் போன்ற சிறுவர்களை வைத்து மதுரையைக் கிண்டல் அடித்தாலும், தாத்தா வேட்டியினால் வந்த பிரச்சினைக்கு ஞானத்தை பலி கொடுக்கும் காட்சி உருக்கம். க்ராபிக்ஸ் மூலம் உயரமாக ஒல்லியாக மாறும் நாயகன், பழைய க்ளிப்பிங்ஸை வைத்தே பொக்கிஷமாக மக்களைக் கவர முயற்சிக்கிறார் - ஆனால் முடிந்ததா எனத் தெரியவில்லை. எதிர்பாராத திருப்பமாக தாத்தாவும் பேரனும் சேர்ந்துவிட, கழுகார் கேட்கும்" நான் யார் பக்கம் என்று உங்களுக்காவது தெரிகிறதா" என்ற க்ளைமாக்ஸ் காட்சி செண்டிமெண்டாக எடுத்திருந்தாலும் சிரிப்பலைதான் பரவுகிறது!
அபியும் நானும் - அலங்கோலங்கள்!
2. சில நேரங்களில்:
ஊர்ப்பெரியவர் ஒருவர் அடுத்த ஊர்ப்பிரச்சினையில் சில நேரங்களில் சில மாதிரி முடிவெடுக்கும் உளவியல் ரீதியான கதை. சில நேரங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு உயிரையும் கொடுப்பேன், பதவியைத் துறப்பேன் என்கிறார் - அடுத்த காட்சிகளிலேயே - கைகோத்தால் போதும், ஏன் உயிரை விடவேண்டும் என்கிறார். அடுத்த ஊர்ப் பிரச்சினையைப் பற்றிப் பேசினால் தண்டனை கொடுப்பேன் என்கிறார் சில நேரங்களில், உணர்ச்சி வசப்பட்டு பேசுவது கூடத் தவறா எனக் குமுறுகிறார் சில நேரங்களில். அத்தனை சில நேரத்து முடிவுகளுக்கும் காரணம் மேலூரில் இருக்கும் பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்துதான் எனத் தெரியும் காட்சிதான் க்ளைமாக்ஸ் - ஆனால் அதையும் ஊகித்துவிட முடிவதால் சுவாரஸ்யம் இல்லை.
சில நேரங்களில் - சில பேரங்களில்!
3. பிரிவோம் சந்திப்போம்:
பச்சைத் துரோகம் செய்திருந்தாலும் நாயகனோடு வேறு வழியில்லாமல் நட்பாக இருக்கும் நண்பனைப் பற்றிய கதை. நாயகன் வேறு வழியின்றி பிரிவதாக அறிவிக்கும் சோகமான காட்சி - எதிர்பார்த்திருந்தாலும் கண்ணீரை வரவழைக்கிறது. தன்னைத் திட்டிய நண்பனின் ஆள் பேசிய சிடி கிடைத்ததும் கோபமாக நண்பனின் குருவைச் சிறையில் அடைக்கிறார் நாயகன். பட முடிவில் நாங்கள் எப்போது பிரிந்தோம், புதிதாகச் சந்திக்க என்று காமெடி செய்கிறார். நடுவில் ஏற்பட்ட மாற்றம் என்ன, குருவை ஏன் சிறையில் அடைத்தார், ஏன் விடுதலை செய்தார், நண்பனின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமலேயே படம் முடிகிறது.
பிரிவோம் சந்திப்போம் - சந்திப்பார்களா? சந்தி சிரிப்பார்களா?
4.பிடிச்சிருக்கு:
வேறு வழியில்லாமல் நாயகியைப் பிடிச்சிருக்கு என்றே படம் முழுக்கச் சொல்லி வரும் நாயகனின் கதை. ஏன் பிடிச்சிருக்கு, எப்படிப் பிடிச்சிருக்கு என்பதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. இத்தனைக்கும் நாயகி கொஞ்ச நாள் முன்னால் நாயகனைச் சிறையில் அடைத்தவள். வெளியூருக்காக பாடுபட்ட நாயகன், நாயகிக்குப் பிடிக்காது என்பதால் அதையும் அடக்கி வாசிக்கிறான். விடியோ கவரேஜ் இல்லை என்பதால் சண்டை போட்ட நாயகனுக்கு அபரிமிதமாக விடியோ கவரேஜ் கிடைத்தாலும் நாயகி "பிடிச்சிருக்கு" என்பதால் எதையுமே உபயோகப் படுத்திக் கொள்வதில்லை. குழப்பமான கதை!
பிடிச்சிருக்கு - என்ன பிடிச்சிருக்கு?
5.ஆயுதம் செய்வோம்:
வேறு யாரும் ஆயுதம் செய்யக்கூடாது, தாங்கள் மட்டும்தான் செய்வோம்; நாங்கள் சொல்லும் ஆளோடுதான் செய்யவேண்டும் என்றெல்லாம் நிபந்தனை வைத்து கூட்டாளிகளைக் கவிழ்க்க நினைக்கும் தோழர்களின் முழக்கம். எதிராளிகளைக் கவிழ்க்க முடியாத நிலையில் ஆயுதம் செய்ய கூட்டுக்கு ஆள் தேடுகிறார்கள் - இதோ எங்கள் அணித்தலைவன், இவர்தாண்டா மதச் சார்பற்ற தலைவி என்று பண்ணும் காமெடி இரண்டாம் பாதியை ரசிக்க வைக்கிறது.
ஆயுதம் செய்வோம் - காமெடி கீமடி பண்ணலியே?
6.ஆனந்த தாண்டவம்:
தோற்றாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அடுத்த முறைக்கு வேறு நாதியில்லை என்று ஆனந்த தாண்டவம் ஆடும் அம்மணியின் கதை. மும்பையில் குண்டு வெடித்தாலும் மூவரசம்பட்டு சாக்கடை அடைத்தாலும் மைனாரிட்டி பஞ்சாயத்து தலைவர் வெளியேறினால் போதும் என்ற சர்வரோக நிவாரணியே துணை என்று வாழ்கிறார் அம்மணி. ஓய்விலேயே செல்லும் முதல்பாதி, ஓய்விலேயே இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கும் இரண்டாம் பாதி; படம் முடிவு வரை க்ளைமாக்ஸ் தேர்தல்கள் வராததால் சொதப்பல்.
ஆனந்த தாண்டவம் - ஓவரா ஆடாதீங்கம்மா!
7.சரோஜா:
படத்தின் பெயருக்கு வித்தியாசமான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் - சத்தியமூர்த்தி பவன் எதிரே ரோட்டில் நடக்கும் ஜாலியான சண்டை என்று. இந்தப்படம் வழக்கம்போலவே பல இயக்குநர்களால் குதறப்பட்டு இருந்தாலும், எப்போது படம் சூடுபிடிக்கும், எப்போது டல்லடிக்கும் என்பது எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. அவ்வப்போது ஊர்ப்பெரியவரோட சண்டை பிடிப்பது மாதிரி தெரிந்தாலும் அம்மா சொன்னவுடன் அமைதியாகிறார்கள் நாயகர்கள்; திடுதிப்பென்று செத்துப்போன அப்பா ஞாபகம் வந்து போடு.. எல்லாரையும் ஜெயில்ல போடு என்று மிரட்டுகிறார்கள் ஊர்ப்பெரியவரை. எனக்கு ஆறு மாசம், உணக்கு மூணு வருஷம் என்பது போல பஞ்ச் டயலாக்குகளும் உண்டு.
சரோஜா - சறுக்கும் ரோஜா!
8.அஞ்சாதே:
26 நவம்பர் வெளியீடு. நிறைய காரக்டர்கள், எது எங்கே எப்போது எப்படி நடந்தாலும் அதை வைத்து நம் கொள்கையை வலுப்படுத்திக் கொள்ள அஞ்சாதே என்பதுதான் கதையின் நாட். எதிரி நம் மேல குண்டு போட்டாச்சு, எதிரி மேலே ஏன் இன்னும் குண்டு போடலைன்னு கேட்க அஞ்சாதே, 16 வருஷம் முன்னாடி நீ போட்ட கடப்பாரைக்கு இந்த குண்டு சரியாப்போச்சு என்று சொல்ல அஞ்சாதே, ஏன் பணக்கார செத்தவனை மட்டும் கவனிக்கிறே என்று திசைதிருப்ப அஞ்சாதே, ஒருத்தனை சாகடிக்கத்தான் 200 பேரைக் கொன்னாங்க என்று சொல்ல அஞ்சாதே - எனப் பல அஞ்சாதேக்கள். விறுவிறுப்பாக போனாலும் வெறுவெறுப்பாக முடிகிறது - யாரும் எப்போதும் மாற மாட்டார்கள் என்பதை வலியுறுத்தும் கதை!
அஞ்சாதே - அஞ்சாமல் இருக்க முடியாதே!
9.குசேலன்:
பங்கு பிரித்த பிறகு ஏழையாக மாறிவிட்ட குசேலன், குபேரன் மீது போர்தொடுத்து, அவனை நல்வழிப்படுத்தும் கதை. குபேரன் வேறு வழியில்லாமல் எதிர்க்கட்சியை ஆதரிப்பதும், அது குசேலனுக்கு இன்னும் கோபத்தை உண்டுபண்ணுவதும் விறுவிறுப்பான காட்சிகள். க்ளைமாக்ஸில் குபேரன் குசேலனுக்கு செட்டில்மெண்ட் செய்து கண்கள் பனிக்கின்றன; ஆண்டி க்ளைமாக்ஸாக போரில் இருபுறமும் உதவியவர்கள் நடுங்கிக்கொண்டு இருக்கும் காட்சி நகைச்சுவையா சீரியஸா எனத் தெரியவில்லை.
குசேலன் - மாடி வீட்டு ஏழை!
10. தசாவதாரம்:
எனக்கு யார் கூட்டும் தேவையில்லை, நானே எல்லா அவதாரமும் எடுப்பேன் என்று சொல்லும் அணித்தலைவன், இன்றாவது நம்முடன் கூட்டு என்று வயிற்றில் பால்வார்ப்பாரா எனக் காத்துக்கிடக்கும் மேலூர்ப் பெரிசுகளை அலட்சியப்படுத்துகிறார். தப்பு - இங்கே எல்லாரும் தப்பு - நான் மட்டும்தான் சரி என்று பஞ்ச் டயலாக் விடுகிறார்; வாரம் ஒரு ஊருக்குச் சென்று விளையாட்டு காட்டுகிறார். வாரிசுகளை ஒழிக்கணும் என்று மனைவியை வைத்தும் பஞ்ச் டயலாக் விடுகிறார். ஊரில் உள்ள மற்ற பெரிசுகள் எல்லாம் இவரை பாம்பு என்று அஞ்சுவதா, பழுது என்று மிதிப்பதா என்று புரியாமல் டரியல் ஆகிறார்கள்.
தசாவதாரம் - பத்துக்கு ரெண்டு தேறும்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 28 பின்னூட்டங்கள்
Oct 9, 2008
சிகரெட்டை சீக்ரட்டா புடிக்கணுமாமே!
விவாதங்கள் பெருமளவு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. "இயற்கையாக வரும் பொருள் புகையிலை - அதனால் ஒரு கேடும் இருக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் ஒரு சாரார். (அரளிவிதை, ஆமணக்கு எல்லாம் இயற்கையாக வரும் பொருட்கள்தானே?) வாகனப்புகையை விட இரண்டாம்கை புகையிலைப்புகை அதிக ஆபத்து என்கிறார்கள் இன்னொரு சாரார். (ஒரு 100 CC வாகனம், ஒரு நிமிடத்தில் சராசரியாக 2,00,000 CC அதாவது 200 லிட்டர் ஆபத்தே இல்லாத புகையை விட்டாலும் ஒரு மனிதன் விடும் 5-6 லிட்டர் புகையிலைப்புகையை விட அதிகக் கெடுதலையே விளைவிக்கும்- இது கெடுதல் பற்றிய கணக்கல்ல - அளவு பற்றிய கணக்கு).
புகைப்பழக்கத்தைக் குறைக்க முதலில் செய்ய வேண்டிய வழி விலையை அதிகப்படுத்த வேண்டியது. நான் முதல் சிகரெட் பிடித்தபோது வில்ஸ் பில்டர் 1.00 ரூ இன்று 3.50 - மூன்றரை மடங்கு மட்டுமே விலை அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தங்கம் ஏறத்தாழ 7 பங்கும், மான்யமில்லாத அரிசி 8 பங்கும் விலை ஏறி இருக்கிறது - ஒரு சிகரெட்டின் விலை, நியாயமாகப்பார்த்தால் இன்று 12 ரூபாய் ஆகியிருக்க வேண்டும். ஏன் ஏறவில்லை? இத்தனைக்கும் வருடா வருடம் புகையிலைப்பொருட்கள் மீது வரி ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. இங்கே வைத்திருக்க வேண்டும் முதல் ஆப்பை.
அடுத்ததாக, தடை விதிக்கும் முன் பொது இடம் என்பதை நியாயமாக வரையறை செய்திருக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாலே பொது இடம் என்பதில் நியாயம் இல்லை. தெருவில் நடந்துகொண்டு பிடித்தால் தப்பில்லை, வணிக வளாகத்தின் வாயில் முன் இல்லாத வரை என்கிறார்கள் - 7 அடி அகல டீக்கடை என்றொரு வணிக வளாகமும் 8 ஆம் அடியில் நகலகம் என்று அடுத்த வணிக வளாகமும் வாயில்கள் அகலத்துக்கே இருக்கும் நம் தெருக்களில் நடந்துகொந்தே இருக்கும்வரை சட்டப்படி இருப்பவன், செருப்பு கடித்தது என்று நின்றால் சட்டமீறல் செய்கிறான் என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
சிங்கப்பூரில் ஒரு நண்பர் சொன்னார்- வானத்தைப்பார் - கூரை இல்லை என்றால், புகை அனுமதிக்கப்படாத வளாகத்துக்குள் இல்லாத பட்சத்தில், (zoo, bird park, railway stations போன்ற இடங்கள்) தாராளமாகப் புகைக்கலாம். (இது 10 வருடத்துக்கு முந்திய கதை - இப்போது மாறுதல் இருந்தால் சொல்லுங்கள்) - இப்படி ஒரு தெளிவான வரையறை இல்லாத பட்சத்தில் - சிகரெட்டை விடமுடியாதவன் முதலில் குற்ற உணர்ச்சியுடனும், பிறகு பழக்கப்பட்ட விதிமீறல் மனப்பான்மையுடனும் பிறகு விதிமீறல் தன் பிறப்புரிமை என்ற உணர்ச்சியுடனும் புகைப்பான்.
கேஸ் போட்டால் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காவல்நிலையத்துக்கு வந்து 200 ரூபாய் கட்டு அல்லது இங்கே என்னிடம் 20 ரூபாய் அழுத்து என்று நோ எண்ட்ரியில் நுழைந்த விதிமீறல் செய்ய விரும்பாதவனையே சட்டப்படி நடப்பதன் சிக்கல்களை உணர்த்தி லஞ்சம் கொடுக்கவைக்கும் நமது சட்டக்காப்பாளர்களுக்குக் கிடைத்த மறைமுக ஊதிய உயர்வுதான் இந்தச் சட்டம்.
சட்டம் போடுவதை நான் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், அமலாக்க நடைமுறை சாத்தியமற்ற நேரத்தில் ஒரேயடியாக இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது எப்படிப்பட்ட விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை போன முறை இதே சட்டம் வந்தபோதே பார்த்தோம். மற்ற போதைகளை பொது இடங்களில் இருந்து எப்படிப் பாதுகாத்திருக்கிறோம்? மதுவுக்கு டாஸ்மாக் தவிர மற்ற எல்லா இடங்களிலும் விற்பனை தடை என்றவுடன் போதை என்பது டாஸ்மாக் மற்றும் சுற்றுப்புற குறைந்த பரப்பிலும் குன்றிவிடவில்லையா? பான்பராக் எல்லா பெட்டிக்கடைகளிலும் சகஜமாகவே கிடைத்தாலும் விற்பவரும் வாங்குபவரும் அதை மறைத்தே கையாளுவதில்லையா? விற்பனையைத் தடை செய்தால் நிச்சயம் புகை குறையும் - அதே இடங்களில் மறைவாக விற்கப்பட்டாலுமே கூட.
விலையேற்றமும் இல்லை, விற்பனைத் தடையும் இல்லை என்பதால் தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிய அளவு பாதிப்பு இல்லை. தெளிவற்ற அமலாக்கத் திட்டம் என்பதால் ரொம்ப நாள் ஓடப்போவதும் இல்லை. இந்த நிலையில் பொது இடப் புகைத் தடை என்பது இந்த அரசாங்கமும் எதோ செய்கிறது என்ற கண்துடைப்பன்றி வேறில்லை.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 29 பின்னூட்டங்கள்
Sep 13, 2008
ஆறிப்போன விஷயங்களும் ஆறாத கழுத்தெலும்பும் (13 Sep 08)
இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது பதிவெழுதி. யாரும் என்னை மிஸ் செய்ததாகத் தெரியவில்லை. எனவே ஒருவேளை விலக நேர்ந்தாலும் "மனக்கனத்துடன் விடை பெறுகிறேன்" "போகாதே போகாதே என் பதிவா" போன்ற பதிவுகள் தேவைப்படாது என்பது திண்ணம் ஆகிவிட்டது :-)
ஊருக்குப் போனதில் பெரும்பாலும் இணையத்தின் தொடர்பில் இருந்து அறுபட்டேன். அரை மணிநேரம், கால்மணிநேரம் என்று பார்த்ததில் மின்னஞ்சல் தவிர வேறெதுவும் கவனிக்க முடியவில்லை. ஊரில் இருந்து திரும்பி வந்தும் தட்டச்ச முடியாத நிலையில் படிக்க மட்டுமே முடிந்தது.. ஏன் தட்டச்ச முடியாத சூழல்? கடைசியாகச் சொல்கிறேன்.
படித்த / பார்த்த / கேள்விப்பட்ட விஷயங்களில் என் பரிதாபத்துக்கு ஆளானவர்கள் ரஜினிகாந்த், கலைஞர் டிவி, ஞாநி, ஆற்காடு வீராசாமி!
ரஜினிகாந்த் தெளிவாகப் பேசினாலே குழப்புவார்கள், குழப்பமாகப் பேசினால்? குசேலன் அடிவாங்க வேண்டிய படம்தான் என்றாலும் மன்னிப்பு வருத்தம் என்பதைப் போட்டு வறுத்து எடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை. என்னவோ ரஜினிகாந்த் மட்டுமே கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் பாலம் போலவும் அவர் தப்பாக ஒருவார்த்தை (அது கூட சொல்லவில்லை, ஊடகங்கள் பிரம்மாண்டப்படுத்திவிட்டன) சொன்னால் அடுத்த செகண்ட் பிரச்சினை வெடிக்கும் போலவும் என்னா பில்ட் அப்! இதில் செய்தி சொன்ன அடுத்த செகண்ட் க்ரூசிபை பண்ணக்காத்திருக்கும் சக நடிகர்கள், ஊடகங்கள், பதிவர்கள்!
கலைஞர் டிவி விநாயகர் சதுர்த்தியை விடுமுறை நாள் என்று சொன்னது தவறு என்று சொன்ன அனைவரும், விநாயகர் சதுர்த்தி என்று சொல்லி இருந்தாலும் எகிறிக் குதித்திருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஞாநியின் பூணூல் மீண்டும் ஆராய்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. கலைஞர் அரசைத் திட்டும்போது மட்டுமே இந்த ஆராய்ச்சி செயல்படுவது ஆச்சரியம். இதில் அங்கங்கே கேட்கும் இன்னொரு குரல்: முற்போக்குப் பாப்பானை நம்பாதே! சரிதான்.
கரெண்ட் கட்டைக் கண்டுபிடித்தது ஆற்காடு வீராசாமி என்று தினமணி கார்ட்டூன் போட்டிருக்கிறதாம். என்னவோ இதுக்கு முன்னே யாரும் கரெண்ட் கட்டே பார்க்காதது போல. அநியாயம்.
இப்போது, கழுத்தெலும்புக்கதை.
சென்னை (மாநகர எல்லைக்குள் மட்டும்) போக்குவரத்து பெரும் அளவில் சீராகிவிட்டது போலத்தான் தோன்றியது. ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட முக்கியத்தடங்களில் 6 வழிப்பாதைகள் நீளத்தை அதிகப்படுத்தினாலும் சீரான ஓட்டத்துக்கு வழி வகுக்கிறது. கத்திப்பாராவின் முடிக்கப்பட்ட பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தினேன். இந்த அளவுக்கு இந்தப்பாலத்தால் நன்மை ஏற்படும் என நினனக்கவில்லை. அருமையான ஓட்டம். நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் 6 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிவிட்டிருந்த தரையடிப்பாலம் இப்போதுதான் உபயோகத்துக்கு வரத் தொடங்கி இருக்கிறது. பல இடங்களில் குறைகள் இருக்கலாம் - ஆனால் போக்குவரத்துத் துறை நிவாரண முயற்சிகளை எடுத்து வருவதே பாராட்டத்தக்க விஷயம்.
ஆனால், மக்கள் இன்னும் போக்குவரத்து விதிகளை மதிக்கத் தயாராக இல்லை என்பதை என் விடுப்பு முடியும் தருவாயில் கண்டேன்.
கோயம்பேடு SAF விளையாட்டு வளாகத்துக்கு எதிரே ஒரு சிக்னல். நான் வரும்போது ஆரஞ்சு அணைந்து சிகப்பாகி விட்டது. சிகப்பு விழுந்தால் நிறுத்தவேண்டும் எனக் கற்ற பாடத்தில் நிறுத்தினேன். பின்னால் ஒரு டெம்போ, அட இவன் நிறுத்தவா போகிறான் என்ற எண்ணத்தில் முழுவேகத்தில் வந்து என் வண்டியின் பின்னால் இடிக்க, வண்டியை விட்டுப் பறந்தேன், கிழே விழுமுன் மூன்று சுற்றுக்கள் சுற்றியதாக சிக்னலில் இருந்த போக்குவரத்துக் காவலர் பின்னால் அறிவித்தார். எங்கே அடிபட்டது என்று தெரியும் முன்னால் நெற்றிப்பொட்டிலிருந்து ரத்தம் கசிவதை உணர்ந்தேன். ஹெல்மெட்டோடு வண்டி ஓட்டுவது பழக்கமின்மையால் திட்டிக்கொண்டே (நல்லவேளையாக) உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். அந்த ஹெல்மட்டின் தகரம் உடைந்து, அது கீறியதால்தான் நெற்றிப்பொட்டில் ரத்தம் என்பது புரிந்ததும் திகில்!
கையைக்காலை ஆட்ட முடியவில்லை. இடுப்பெலும்பில் எதோ வலி. உடலெங்கும் பட்சபாதம் பார்க்காமல் சிராய்ப்புகள். என்ன செய்வது என்று புரியாமல் முதலில் நாராயணையும் ஐகாரஸ் பிரகாஷையும் அழைத்தேன் (இவர்களைச் சந்திக்கத்தான் சென்றுகொண்டிருந்தேன்). பிறகு என் உறவினரையும் அழைத்தேன்.
போலீஸ்காரர் தெளிவாக என் மீது தவறில்லை, டெம்போ மீதுதான் தவறு என உணர்ந்து டெம்போக்காரரைப் பிடித்து வைத்துவிட்டார். டெம்போக்காரர் கண்ணில் என்னைவிட அதிகம் வலியும் பயமும். இரவு வரை என்னுடனே சுற்றியதில் அவர் பரிதாபக்கதை தெரிந்தது. கேஸ் எதுவும் வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.
நாராயணும் பிரகாஷும் உடனே வந்து ஆறுதல் அளித்தார்கள். காலில் ஒன்றும் ஆகவில்லை , நடக்க முடிகிறது ஆனால் இடுப்பில் உட்கார்ந்து எழும்போது மட்டும் வலி எனத் தெரிந்தது.இடது உள்ளங்கை வீங்கி விட்டது, வலது கையைச் சுற்ற முடியவில்லை.
மருத்துவமனையில் உடனடியாக எடுக்கப்பட்ட எக்ஸ் ரேக்கள் வலது கழுத்தெலும்பு உடைந்திருப்பதையும், இடது கை விரல் எலும்புகள் சில பிசகி இருப்பதையும் காட்டின. இடுப்பில் எதுவும் இல்லை.
பெரிய அடி என்று சொல்லமுடியாவிடினும், இரண்டு கைகளுமே டிஸ் ஏபிள் ஆகிவிட்டிருக்கிறது. தலைக்கு வந்தது நிச்சயமாக தலைப்பாகையோடு போனது! இனி அந்த ஹெல்மட்டையும் வண்டியையும் உபயோகிக்க முடியாது.
விபத்து நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் கழுத்தெலும்புக்கு இன்னும் 10 நாள் ஆகும் என்று சொல்கிறார்கள், கை கூடிவிட்டது, இடுப்பு சரியாகிவிட்டது.
நீதி: எவ்வளவு கஷ்டமாய் இருந்தாலும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் போடுங்கள்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 75 பின்னூட்டங்கள்
Jul 23, 2008
India Inc - என்ன விலை அழகே!
நம்பிக்கை வாக்கெடுப்பு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பாக உருவகப்படுத்தப்பட்டதுதான் காமெடி. 541 பேரில் எத்தனை பேர் நிஜமாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள்? ஜன்மவைரி அமெரிக்கா என்ற ஸ்மரணையோடு மட்டும் மக்கள் பணி செய்யும் இடதுசாரிகள், இப்போது என்ன அவசரம், ஆறு மாதம் பொறுத்தால் எங்கள் பேனாவில் கையெழுத்துப் போடலாம் என்ற உயர்சிந்தனை கொண்ட பாஜகவும் எதிர்த்து வாக்குப்போட்டு கடமை நிறைவேற்றிய விதம் புல்லரிக்கவைத்தது!
நாட்டுமக்களின் நலனுக்காக அரைமணி நேரத்தில் ஒப்பந்தத்தின் சாதக பாதகத்தைச் சீர்தூக்கி் முடிவெடுத்த அண்ணன் அமர்சிங்கின் அறிவாற்றல் வியக்கவைத்தது. அதைவிட வேகமாக பாதக அம்சங்களைப் புரிந்துகொண்ட மாயாவதியின் மக்கள் பற்று பிரம்மிக்க வைத்தது.
அணு - ஆட்சி என்று இருபரிமாணத்தோடே ஆரம்பித்தாலும் அணு-ஆட்சி-அம்பானி என்ற மூன்றாவது பரிமாணம் வந்தபின் தான் கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. ஓட்டுக்கு 25-30 கோடி (மந்திரி), ஓட்டுப்போடாமல் இருக்க 10 கோடி, உடம்பு சரியில்லை என லீவ் லெட்டர் கொடுக்க 5 கோடி என்று விலைப்பட்டியல் அடித்து நினைத்ததை விட அதிக வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறவைத்த அம்பானி சகோதரபாசம் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கவைத்தது.
நல்ல வேளை வித்தியாசம் பெரிதாக இருக்கிறது. கொறடா உத்தரவை மீறி பதவி விலகக் காத்திருக்கும் ஏழெட்டு உறுப்பினர்கள் மட்டுமே வித்தியாசமாக இருந்திருந்தால், நம்பிக்கைத் தீர்மானத்தைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்திருக்குமே - அது தவிர்க்கப்பட்டதில் மனம் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறது.
நம் மீடியாவின் பொறுப்புணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. ஜார்ஜ் பெர்னான்டஸ், பங்காரு மீதான ஸ்டிங் வீடியோக்களைக் காட்டியபின் வந்த முதிர்ச்சியோ தெரியவில்லை - அத்வானியும் பிரகாஷ் காரத்தும் லஞ்சப்பணம் பட்டுவாடா செய்ய முயன்றதுக்கு ஆதாரம் இருக்கிறது என்று சொன்னால் கூட, அதைப்பற்றிப் பேசாமல், பார்லிமெண்டுக்குள் பணக்கட்டைக் கொண்டுவந்த எம்பிக்களின் பாதுகாப்பு மீறலை SMS ஆக ஓடவிட்டுக்கொண்டிருந்த மனமுதிர்ச்சி நெகிழச் செய்கிறது.
உணர்ச்சிக்கொந்தளிப்புகளை மீறி அணுசக்தி தேவையா இல்லையா என்ற விவாதம் பாராளுமன்றத்துக்கு வெளியேதான் நடந்தது - ஆட்சியாளர்கள், எதிர்ப்பாளர்கள் -நாளைய ஆட்சியாளர்கள், உடன் இருந்தவர்கள் - இப்போது இல்லாதவர்கள் என்ற எந்த சக்திவாய்ந்த அமைப்பும் அணுசக்தி தேவையில்லை எனச் சொல்லவில்லை என்பதால் இப்படிப்பட்ட விவாதங்கள் Academic ஆக மட்டுமே முடியும்.
மேலும், மின்சாரம் பெற மரபுசாரா வழிமுறைகள் - அலையிலிருந்தும் காற்றிலிருந்து மின்சாரம், எலுமிச்சையிலிருந்து பல்ப் எரியவைத்தல், வேப்பங்குச்சியிலிருந்து செல்போன் சார்ஜ் - யானைப்பசிக்கு சோளம் இருக்கும் இடத்தைக் காட்டுவது மட்டும்தான்! அதைப் பொறிக்கக்கூட இன்னும் முயற்சிகள் ஆரம்பிக்கவில்லை, பொறிந்தாலுமே தேவைக்கு எந்தப்பயனும் இருக்காது. மரபுசார் வழிமுறைகள் எரிபொருளை இழக்க ஆரம்பித்துவிட்ட தறுவாயில் அணுசக்தி தவிர்க்கமுடியாதது. பாதுகாப்பான வழிமுறைகளை ஆராயவேண்டுமே அன்றி செர்னோபில்லையும், தவறான உதாரணமாக ஹிரோஷிமாவையும் சொல்லும் மக்கள் மின்சாரம் இன்றி இருக்கத் தயாராகவேண்டியதுதான் என்பது என் கருத்து.
ஆனால், வழிமுறைகள்?
மாயன் எழுதிய பதிவு அதிகக் கவனம் பெறாமல் போனது வருத்தமே. Frederick Forsyth வகையறா ஒற்றர் கதைகளில் அடிக்கடி வரும் ஒரு வாக்கியம் - Co incidence களை நம்பக்கூடாது! அப்படிப் பார்த்தால் சென்ற மாதம் கிடுகிடு பாய்ச்சல் காட்டி இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கவிழும் எண்ணெய் விலையும், வரலாறு காணாத "அறிவிக்கப்பட்ட" மின்வெட்டும் குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மிகச் சமீபத்தில் நடப்பது Coincidence ஆக எனக்குத் தோன்றவில்லை. அமெரிக்கா தன் நலங்களுக்காக ஒரு மெல்லிய பயமுறுத்தலைச் செய்வது முதல் முறையாகவும் இருக்காது. இந்த பயமுறுத்தல் நிச்சயமாக அரசியல்வாதிகளை இல்லாவிட்டாலும் மக்களை நோக்கி தன் கடமையைச் செய்யும்.
வேறு வழியில்லை எனச் சொல்லப்படும் அணுசக்தியை பயமுறுத்தி ஏன் உள்ளே கொண்டு வர முயற்சிக்கவேண்டும்? கருத்தொற்றுமை பெற்று, மக்கள் வாக்கைப் பெற்று நாடாள வந்து பிறகு இதைச் செய்வதுதானே நியாயமான வழியாக இருக்கமுடியும்? அந்த வழிமுறையில் நம்பிக்கை இல்லாததால் பணம் ஒரு பக்கமும் பயம் ஒரு பக்கமுமாக இரட்டைத் தாக்குதலா?
எனக்கென்னவோ நடக்கிற மொத்தக்கூத்திலும் மன்மோகன் அம்பானி அத்வானி அமர்சிங் இடதுசாரி - எல்லாருமே தோல்பாவைகளாகத் தான் தெரிகிறார்கள். சூத்திரக்கயிறு கண்ணில் படவில்லை - ஊகிப்பதும் கடினமில்லை! 271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்களில் இந்தியப் பாராளுமன்றத்தை - அதன் மூலம் India Inc ஐ வாங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை அந்த சூத்ரதாரிகளுக்கு இப்போது வந்திருக்கும். நிம்மதிப் பெருமூச்சும் வந்திருக்கும்.
வாழிய பாரத மணித்திரு நாடு!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 35 பின்னூட்டங்கள்
வகை அரசியல்
Jun 24, 2008
கமலின் தசாவதாரம் - தொடருது பினாத்தலின் Quiz அவதாரம்!
அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை.
உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன்.
கான்சப்ட் என்னன்னா (இந்தக் கான்சப்ட்ன்ற வார்த்தையையே டிவிக்காரங்க நாறடிச்சு வச்சிருக்காங்க!) .. சரி விடுங்க.. இந்த விளையாட்டோட ஆரம்பம், குமுதத்துல வர பயோடேட்டா மாதிரிதான். ஒரு நபரைப் பத்தி 4 குறிப்பு சொல்லியிருக்கேன்.. சமீபத்திய மகிழ்ச்சி, சமீபத்திய சோகம், வாழ்நாள் சாதனை, நீண்டநாள் கடுப்பு - ஆனா குறிப்பா சொல்லாம, படமா சொல்லி இருக்கேன். அந்தப் படத்தை வச்சு,படம் என்ன சொல்லவருதுன்னு புரிஞ்சுகிட்டு, அவை எந்தப் பிரபலத்தைக் குறிக்குதுன்னு தெரிஞ்சவுடனே அந்த போட்டோவைக் கிளிக் செய்யணும், அப்புறம் உறுதிப்படுத்தணும் அஷ்டே.
அதுலயும், அந்தக்குறிப்புள்ள படங்கள் எல்லாம் உடனே தெரியாது. அதை ஒரு சின்ன வெள்ளை சதுரம் வச்சு மறைச்சிருக்கேன். அந்த வெள்ளை சதுரத்தைக் கிளிக் பண்ணீங்கன்னா, படம் தெரியும். குறைந்த குறிப்புகள்லேயே கண்டுபிடிச்சீங்கன்னா, அதுக்கு போனஸ் உண்டு. சீக்கிரம் முடிச்சீங்கன்னா அதுக்கும் டைம் போனஸ் உண்டு.
படம் சரியாத் தெரியாட்டி, எந்த இடம் பெரிசாத் தெரியணுமோ அந்த இடத்துல வலது-கிளிக்கி, zoom செய்துகொள்ளலாம். பார்த்தவுடனேயே மறுபடி வலது-க்ளிக்கி, show all எனத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
முதல் பக்கத்துல இருக்கிற உதவியைக் கிளிக்கினா உதாரணமும் எப்படி விளையாடணும்ன்ற விதிமுறைகளும் இருக்கு.
ஒரு முறை உறுதிப்படுத்திட்டீங்கன்னா அடுத்த கேள்விக்குப் போயிடும். அதே கேள்விக்குத் திரும்பி வரமுடியாது. கவனமா உறுதிப்படுத்துங்க..
மொத்தம் 10 கேள்விகள். 10 கேள்விக்கு, 16 பிரபலங்களோட படம்.. எனவே, எலிமினேஷன் பண்ணி எல்லாம் ஆன்சர் சொல்ல முடியாது :-) 10 கேள்வியும் முடிஞ்சவுடனே உங்க மார்க்கும், ஒரு கோட் -உம் வரும். அந்தக் கோடை மட்டுமே பின்னூட்டமா போட்டீங்கன்னா கூட போதும், அதை டீ கோட் பண்ணி எவ்வளவு மார்க்குன்னு நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களுக்கும் சொல்லிடுவேன் :-)
கோடை மட்டும் பின்னூட்டமா போட்டா போதும்னு ஒரு பேச்சுக்குதான் சொல்றேன், எப்படி இருந்தது, என்ன மாதிரி மேம்பாடு செய்யலாம்னு ஆலோசனையும் சொல்லலாம்..
இது தயாராகி 10 நாளுக்கு மேலே ஆகுது.. தசாவதாரம் சுனாமிலே மாட்டிக்கக்கூடாதுன்னு டிலே பண்ணினா நாட்டிலே ஆயிரம் மாற்றங்கள்.. படத்தையெல்லாம் அடிச்சு அடிச்சு திருத்தவேண்டியதாப் போச்சு. தயாரிப்பில் உறுதுணையாகவும், மேம்பாடுகளும் சொல்லி இருந்த மின்னரட்டை நண்பர்கள் - இலவசக்கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், பாஸ்டன் பாலா, வெட்டிப்பயல், கண்ணபிரான் ரவிசங்கர், சிறில் அலெக்ஸ், இட்லிவடை ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.
தற்போதைய விடை நிலவரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.
Jun 16, 2008
கேள்வி பதில் ச சங்கர் - கொத்தனார் வயா பினாத்தல்!
2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு?
3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா?)? அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள்?
இரவு 11 மணிவரை மனைவியின் அருகில் இருந்தேன். வலி எடுக்கவில்லை. எப்போதும் எடுக்கலாம் என்ற நிலை. எனக்கு இருக்கும் குறைபாட்டினால் அங்கே பக்கத்தில் இருக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். காலல 8 :30க்குத்தான் மறுபடி மருத்துவமனைக்கு வந்தேன். வருவதற்கு இரண்டே நிமிடம் முன் குழந்தை பிறந்தது எனத் தெரிவித்தார்கள். வெயில் அதிகமாக இல்லாததால் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி உள்ளறையில் விளக்கொளியில் வைத்து கண்ணாடி ஜன்னலைத் திறந்து காட்டினார்கள் என் தேவதையை!
எண்ணங்களா? முதல் எண்ணம் மனைவி பெத்துப் பிழைச்சு வரணும்ங்கறதுதான். ரெண்டாவதா, ஒண்ணு ரெண்டு மைக்ரோ செகண்டுக்கு, "அப்பாவா ஆகப்போறே, இனியாவது குழந்தைத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கணும்" அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. இன்னி வரைக்கும் அந்த எண்ணத்தை ஜெயிக்க விடலையே! நாமல்லாம் யாரு!
ஹலோ பி ஏ.. இப்ப உடனடியா, அடுத்த மூணு நிமிஷத்துக்குள்ள எனக்கு இந்த உத்தரவெல்லாம் டைப் ஆகி வரணும்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 36 பின்னூட்டங்கள்