பொங்கல் ரிலீஸ் படங்களில் ஆதிக்கும் பரமசிவனுக்கும் போட்டியாம்.. விகடனில் இருந்து தினமலர், வலைப்பதிவுகள் வரை அனைவரும் இந்தப்படங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றனர்.
பாசக்கிளிகள் என்று ஒரு காவியம் திரைக்கு வருவதை இவர்கள் எல்லாரும் எப்படி மறக்கத் துணிந்தனர்? சற்று முன்வரை (ஐந்து பத்து ஆண்டுகள் முன்னால்) கொடிகட்டிப்பறந்த அனைத்து மூத்த ஓய்வுபெற்ற கலைஞர்களும் தங்கள் உறக்கம் கலைந்து புத்துணர்ச்சியோடு எதிர்பார்க்கும் திரைப்பாடம் (எழுத்துப்பிழை அல்ல) இது. சன் தொலைக்காட்சியே பெரும் ஆதரவு தராததால்தானே இந்தப் பாராமுகம்? சன் தொலைக்காட்சி மட்டும் தங்கள் அனைத்து விற்பனைத்தந்திரங்களையும் பிரயோகித்திருந்தால்??
சன் செய்திகள்..
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை தமிழகமே பேராவலுடன் எதிர்பார்த்துள்ளது. அதற்குக்காரணம் பொங்கல் பண்டிகை மட்டுமல்ல, கலைஞரின் பாசக்கிளிகள் படம் திரைக்கு வருவதும்தான், இது குறித்து ஒரு சிறப்புக்கண்ணோட்டம்..
திரை அரங்கு வாசலில் நிற்பவர்களைக்காட்டியவாறு..
பெரும் எதிர்பார்ப்புகள், கனவுகள்- இவற்றோடு தமிழ்த்திரை உலகமே புத்துயிர் பெற்றுக்காணப்படுகிறது என்றால் அது மிகை ஆகாது. ஆண்டுக்கு ஆண்டு பொங்கல் வருகிறது, இந்த ஆண்டில் என்ன சிறப்பு என்று மக்களைக் கேட்டபோது -
கே கோவிந்தன், திரை ரசிகர் - இந்த வருஷம் பொங்கல்தான் சார் எங்களுக்கு தீபாவளி. கலைஞர் அன்னிக்கு ஒரு மனோகரா கொடுத்தார், அதுக்கப்புறம் இன்னிக்குதான் பொங்கல் மீண்டும் களை கட்டுது.
பின் குரல் - மகிழ்ச்சியில் இவர்கள் ஆனந்தக்கூத்தாடினாலும், இவர்களுக்கும் சில குறைகள் இல்லாமல் இல்லை..
பழனியப்பன், பாதிக்கப்பட்டவர் - இங்கே 5000 பேரு நிக்கரோம், ஒரே ஒரு போலிஸ்காரர்தான் சார் இருக்காரு. இவ்வளவு ஜன வெள்ளத்தை எப்படி சார் ஒரு ஆளாலே கட்டுப்படுத்த முடியும்?
பின் குரல் - திரை உலகுக்கோ இது ஒரு இனிப்பான பொங்கல் என்பதில் சந்தேகம் இல்லை..
குமாரசாமி, தியேட்டர் உரிமையாளர் - ஏறத்தாழ இருபது வருஷத்துக்கு அப்புறம் இன்னிக்குதான் என் ஹவுஸ்புல் போர்டு தொங்குது, பாக்கவே மகிழ்ச்சியா இருக்கு..
பெரியகருப்பர், நடிகர் - தமிழ்லே வசனம் பேசி நடிக்கணும்னு எனக்கு இருந்த ஆசை, இந்த 25 ஆண்டு திரை வாழ்க்கையிலே இப்போதான் நிறைவேறி இருக்கு.
பின்குரல், இப்போது முகத்துடன் - ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் இப்படியே மலர்ந்தால் அனைவரின் முகத்திலும் ஆனந்தம் பெருகும், நாடு சிறக்கும், சன் செய்திகளுக்காக, திரை அரங்கிலிருந்து நா பெரிய சாமி.
பொங்கல் சிறப்பு பட்டி மன்றம், கிளிப்பிங்
ராஜா, பேச்சாளர் - நம்ம சம்சாரம் எப்பவும் அவிக வீட்டு மனுசங்கன்னா ஒரு தனி உரிமையோடதான் பாப்பாங்க, இப்போ என்னடான்னு கேட்ட அவிக அண்ணனுக்கு நான் பத்து சவரன் மோதிரம் போடணுமாம் - ஏன்னு கேட்டாக்க இது "பாசக்கிளிகள் ஸ்டையில்"னு கழுத்தை வெட்டறாங்க..
பலத்த கரகோஷம்.
திரை விமர்சனம்
வணக்கம் நேயர்களே, இந்த வார திரை விமர்சனத்தில் நாம் பார்க்கப்போகும் படம் , கலைஞரின் "பாசக்கிளிகள்".
கிளிப்பிங்
வசனம் என்பது விசனமாக இருந்த தமிழ் திரைப்படங்களில், வசனம் என் வசம் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் கலைஞர்.
கிளிப்பிங்
கதை என்பது சதையோ உதையோ அல்ல, அது திரைப்படத்துக்கு விதை என்பதை பாசக்கிளிகள் காண்பித்திருக்கின்றது.
கிளிப்பிங்
ரசிகர்கள் குரல்
வசனம் சூப்பர்!
827 முறை பார்க்கலாம்
பிரபு ஆக்டிங் சூப்பர்
கிளிப்பிங்
மொத்தத்தில், வேஷக்கிளிகளின் முகத்திரையைக் கிழித்து அவை மோசக்கிளிகள் என்று நிறுவுகிறது இந்த பாசக்கிளிகள்.. மீண்டும் திரை விமர்சனத்தில் சந்திப்போம், நன்றி.
எல்லா நிகழ்ச்சிகளின் நடுவிலும் விளம்பரம்..
பார்த்து விட்டீர்களாஆஆஆஆஆஆஅ.. பாசக்கிளிகள்..
கவர்ச்சியா ஆபாசமா - விளக்குகிறார், நவ்யா நாயர்
நான் நடிச்ச படங்களிலேயே எனக்கு பிடிச்ச படம் இதுதானுங்கோ - கூவுகிறார், பிரபு
கதை, திரைக்கதை எழுதி வசனத்தில் குளிப்பாட்டுகிறார் கலைஞர்..
தியேட்டரில் படம் பார்க்க வரும் அனைவருக்கும், அவர்கள் டிக்கட் விலைக்கு சமமான அளவில், சக்தி மசாலா வழங்கும் எலிக்கறி மசாலா, சிக் வழங்கும் சிக் எண்ணை, ரீகல் வழங்கும் கறுப்புத்துணிகளுக்கான சொட்டு நீலம் அனைத்தும், இலவசம்!!
இது தவிர, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, ஒரு மாதத்துக்குத் தேவையான எலிப்பாஷாணம்!
பார்த்து விட்டீர்களாஆஆஆஆஆஆஅ.. பாசக்கிளிகள்..
டாப் டென் மூவீஸ்
இந்த வாரமும் சிறப்பான முதல் இடத்துலே இருக்கு, பாசக்கிளிகள்.
அண்ணனா, பெரிய அண்ணனான்னு கேட்டு தங்கை பண்ற வாக்குவாதம், முதல் முறையா விதவைத் தாயார் வேஷத்துலே மனோரமா, பல படங்களின் வாய்ப்பை நிராகரித்து விட்டு இதில் நடிக்க வந்த முரளி என்று அனைவரும் தங்கள் பங்கை சிறப்பா செஞிருக்காங்க என்றாலும், கலைஞரின் வசனத்தை கேட்பதற்காக்வே தியேட்டருக்கு எத்தனை முறை வேணும்னாலும் போகலாம் என்று சொல்கிறார்கள் ரசிகர்கள்..
பாசக்க்ளிகள், இது மோசக்கிளிகள் அல்ல, நேசக்கிளிகள்.
-------------------------------------------------------------
எதோ சன் டிவி இந்தப்படத்தை சீரியஸ்ஸா எடுத்துக்கலையோ, நாம பொழைச்சோம்.
Jan 14, 2006
பாசக்கிளிகள் promo (14 Jan 06)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள்
Jan 12, 2006
இதனால் சகலமானவர்களுக்கும் 12 Jan 06
மற்ற ஊடகங்களாலும் வலைப்பதிவுகள் கவனிக்கப்படுவது அனைவரும் அறிந்த விஷயமே.
இந்தியா டுடே - சில தவறான தகவல்கள் இருப்பினும் வலைப்பதிவுகளுக்கு ஒரு நல்ல அறிமுகம் கொடுத்து ஆரம்பித்து வைத்தது.
தினமலர் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தினம் ஒரு தமிழ் வலைப்பதிவை அறிமுகப்படுத்தி வருகிறது; (இன்னும் பினாத்தல்கள் அதன் கண்ணில் படாமல் இருக்கிறது:-()
கல்கியும் அவ்வப்போது வலைப்பூக்களில் இருந்து சில துளிகளைத் தெளிக்கிறது.
விகடன் குழுமம் அறிமுகம் என்று செய்யாவிட்டாலும், வலைப்பதிவுகளைப் படிக்கிறது என்பதற்கு அவன் விகடன் ஒரு சான்று. (இன்னமும் விகடனுக்கு யார் இந்தப்பதிவைப் பற்றி சொல்லி இருப்பார்கள் என்ற மர்மம் எனக்கு விலகவில்லை)
இதன் அடுத்த கட்டமாக, நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான சிதம்பர ரகசியம் தொடரில், கதாபாத்திரம் ஒருவர் வலைப்பதிவு வைத்திருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
அவருடைய (கதாபாத்திரத்துடைய) வலைப்பதிவின் பெயர் அறைகூவல்-ஆம்
குறிப்பு - சென்னைவாசியின் அனுபவச்சிதறல்கள் (அடங்குடா மவனேன்னு உள்ளே குரல் கேக்கலை போலும்)
பதிவுக்கு உள்ளே இந்த விமர்சனத்தில் இருந்து சில வரிகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
ஆச்சரியம் என்னவென்றால், அவரும் கவனம் பெற்ற பதிவுகளாக - நம்பிக்கை (கவிதை), இரு சம்பவங்கள் (சிறுகதை) மற்றும் அவன் விகடன் - ஐக்குறிப்பிட்டிருக்கிறார்..
அந்தப்பதிவுக்கு பின்னூட்டம் போட்டவர்களில் என்றென்றும் அன்புடன் பாலா, தருமி, படித்துறை மற்றும் சுரேஷ் (Suresh - பினாத்தல் இல்லை!) ஆகியோரும் அடக்கம்..
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் --
1. வலைப்பதிவுகள் பல்வேறு தளங்களாலும் கவனிக்கப்படுகின்றன - எனவே, சற்றுப் பொறுப்புடன் எழுதுவது அவசியமாகிறது.
2. தங்கள் தள எழுத்துக்கள் வேறு ஊடகங்களால் எடுத்தாளப்படுவதைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் (நான் இல்லை!) காபிரைட் உரிமைகள் பற்றித் தெரிந்துவைத்திருப்பது அவசியம், creative commons license பற்றி பத்ரி ஒரு கட்டுரை எழுதி உள்ளார் (சுட்டி கிடைக்கவில்லை).
3. (குசும்பு) சுரேஷ் பதிவுகளில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு விளம்பரம் இலவசம்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள்
Jan 9, 2006
உள் நோக்கம் இல்லாத வசனங்கள் 09Jan06
பினாத்தலார் தன் பங்குக்கு சில உள்நோக்கம் இல்லாத வசனங்களை அளிக்கிறார். இந்த வசனங்கள் அவர் வீட்டு அரபி வாட்ச்மேன் எழுதியது, எனவே, உள்நோக்கம் சற்றும் இல்லாதது என உறுதியும் அளிக்கிறார்.
1. டேய் எங்கேடா போயி சுத்திட்டு வரே? அந்த கருணா கூட சேராதேன்னா கேட்கறயா? இதுலே விஞ்ஞான முறைப்படி பொய் வேற சொல்லறே.
2. உன் பிரெண்டு ஜெயா பணக்காரிடீ, அவளுக்கு ஒரு ரூபா சம்பளம் கட்டுபடியாகும்.. நமக்கு ஆகுமா?
3. சொன்ன பேச்சை கேக்கறயாடா நீ? சீனிவாசன் உன் நண்பன் தானே? என்னிக்காவது அவன் அன்னையோட பேச்சை தட்டி இருக்கானாடா?
4. யாரு முருகதாஸா பிளாட் செகரட்டரி? அவர்தான் தன் குடும்பமே பதவிக்கு வராதுன்னு சொன்னாரே?
5. பெரியண்ணன் தான் நாட்டாமையா வரனுமுன்னு பஞ்சாயத்துலே "ஓ"ன்னு அழுதாரே கோபால் - அவர் வீடு இங்கே எங்கே இருக்குங்க?
6. அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு அண்ணன் கூட தகறாரு பண்ணாதே.. திருபுவனம் ராமமூர்த்தி மாதிரி.
7. தங்கச்சி மேல பாசமே கிடையாதா அண்ணா உனக்கு? பக்கத்துத் தெரு திருமாவைப்பாரு.. அவன் தங்கச்சி தமிழரசிய எப்படி பாதுகாக்கிறான்னு!
8. ஆபீஸர் மோகன் ரொம்ப நல்லவருங்க.. என்ன, அவங்க உறவுக்கார அம்மா - அதான் ஒல்லியா அவங்க வீட்டுலே இருப்பாங்களே - அவங்க சொல்லறதை மட்டும்தான் கேப்பாரு ..
9. ஆமாம்.. அம்மாவுக்கு கோயிலுக்குப்போக கஷ்டமா இருக்குன்னு பக்கத்து வீட்டையே இடிச்சு கோயில் கட்டிட்டுதாம் தம்பி அஷோக்கு!
10. வகுப்புக்குள்ளே அமைதியா இல்லாம எல்லாரும் கூச்சல் போட்டுகிட்டே இருந்தா வாத்தியார் சோம நாதன் என்னதான் பண்ணுவாரு பாவம்!
பி கு: குஷ்பூ மேட்டர் ஓய்ந்துவிட்டு, அரசியல் ரகளைகளுக்கு இன்னும் கொஞ்சம் காத்துக்கொண்டிருக்க வேண்டிய வேளையிலே நமக்கும் பொழுது போக வேண்டாமா?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள்
Jan 6, 2006
சிவாஜி2.0 revised Premier show (flash)
ப்ளாஷ் சற்றே திருத்தப்பட்டிருக்கிறது. வசனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
சந்திரமுகியின் அபார வெற்றி, அன்னியனின் அபார வெற்றி இரண்டுக்கும் காரணமானவர்கள் இணைந்து கொடுக்கும் படம் என்பதால் ஆர்வம் அதிகரித்துவிட்டாலும், பயமும் அதிகமாகிவிட்டது.
நிஜமா பொய்யா எனத்தெரியாத ஒரு கேள்விப்பட்ட கதை. பிஷன் சிங் பேடி தன் மகனுக்கு கவாஸ்பேடி எனப் பெயர் வைக்க முனைந்தாராம். ஏன் எனக்கேட்டதற்கு அப்போதுதான் அவன் கவாஸ்கர் போன்ற பேட்ஸ்மேனாகவும் பேடி போன்ற பௌலராகவும் வருவான் என்றாராம். நடந்தது என்ன? மகன் வளர்ந்தான், பேடி போன்ற பேட்ஸ்மேனாகவும் கவாஸ்கர் போன்ற பவுலராகவும்!
இதில் படத்தைப் பற்றி வெளிவரும் தகவல்கள் இன்னுமே பயமுறுத்துகின்றன. பல பழைய படங்களின் பிரபல கெட்-அப்களில் ரஜினி தோன்றுவாராம். கெட்-அப் மட்டும்தானா, கதையுமா என்று தெரியவில்லை!
எனவே, ரஜினியின் பழைய பட ஃபார்முலாவையும், ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டுக்குலுக்கியதில், இந்தக்கதை(?!) கிடைத்தது!
ரஜினி ரசிகர்கள் மன்னிப்பார்களாக!
சற்றுப் பெரிய கோப்பாக அமைந்துவிட்டதால் இரண்டு பாகங்களாகக் கொடுக்கிறேன். அதற்கும் மன்னிக்கவும்.
இதுக்கெல்லாம் கோபப்பட்டுகிட்டு கருத்து சொல்லாம போயிடக்கூடாது! ஆமாம்.
இரண்டாம் பாகம் இங்கே துவங்குகிறது:
அனைவரின் வசதிக்காக மொத்த வசனங்களும் இங்கே:
காட்சி 1 - பாடல்:
இந்தியா என்னாலே எழுந்து நிக்கும் பாருடா
இமயத்துக்கு என்னைப்பார்த்தா வேர்த்திருக்கும் பாருடா
ஆந்திரா என் முன்னாலே அடங்கி நிக்கும் பாருடா
ஒரிஸ்ஸா என் சொல்லாலே ஒடுங்கி நிக்கும் பாருடா!
காட்சி 2 - ஜோதிட நிலையம்:
னதியா: ஜோசியர் ஐயா, இது என் மகன் சிவாஜியோட ஜாதகம்.. கொஞ்சம் பாத்து சொல்லறீங்களா?
ஜோசியர்: ஆஹா இதுதாம்மா ஜாதாகம்..
ஆயிரம் கோடி அதிசயம், அமைந்தது சிவாஜி ஜாதகம்!
இந்தக் குழந்தை எப்படியும் இன்னும் 20 வருஷத்துல பெரியவனா மாறிடுவான்
ஆனா எவ்வளவு பெரியவனா ஆவான்னு என்னாலே உறுதியா சொல்ல முடியலே
ஆனா நிச்சயம் ஏதாவது ஒரு துறையிலே பெரிய ஆளா வருவான்..
காட்சி 3: கல்லூரி
பிரகாஷ்: ஹாய் செல்லம்.. சீனியர மதிக்காம கிளாஸுக்குல்லே எல்லாம் போகக்கூடாது.. நில்லு நில்லு நில்லு
ரஜினி: தோ பார் கண்ணா.. என் வழி தனி வழி.. மோதப்பார்த்தே காணாமப்போயிடுவே..
பிரகாஷ்: அதெல்லாம் நீ எப்படி சொல்லலாம்? தப்பு தப்பு தப்பு.. அதெல்லாம் நீ சொல்லக்கூடாது..
இப்போ நீதான் சைன் தீட்டா, எதிர்லே வராளே.. அவதான் காஸ் தீட்டா.. ரெண்டு பேரும் செர்ந்து டேன் தீட்டா பண்ணுங்க பாக்கலாம்..
ரஜினி: டேய் டேய் டேய் டேய்.. ஆண்டவன் கெட்டவங்களுக்கு பிட் பிட்டா அள்ளிக்கொடுப்பான்.. ஆனா பரீட்சையிலே பெயில் பண்ணி வுட்டுடுவான்.
நல்லவங்களுக்கு.. பிட்டே கொடுக்க மாட்டான்.. ஆனா கொஸ்டின் பேப்பரையே அவுட் ஆக்கிடுவான்டா..
இந்தா வாங்கிக்கா..
காட்சி 4 :
ஷ்ரேயா: என்னங்க இந்தட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?
ரஜினி: தோ பாரும்ம.. பொம்பளை பொம்பளையா இருக்கனும்.. ஆம்பளை ஆம்பளையா இருக்கனும்..
கடனை வாங்காதவன் ஆம்பளையும் இல்லே,
புடவை கட்டாதவ பொம்பளையும் இல்லே..
ஆம்பளைன்னா நெருப்பா இருக்கணும்
பொம்பளைன்ன பொறுப்பா இருக்கணூம்..
ரஜினி: பார்.. முழுசா பொம்பளையா மாறியிருக்கிற என்னோட ஆளைப்பார்..
பிரபு: என்ன கொடுமை சார் இது?!!!!
காட்சி 5:
புஷ் அலுவலகத்துள் நுழையும் ரஜினி: இதோ பார் பிரச்சினை எனக்கும் உனக்கும் நடுவுலே.. அனாவசியமா பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது..ஈராக்லே இருந்து உன்படையெல்லாம் வாபஸ் வாங்கு.. அரிசிய இடிச்சா மாவு.. இந்த சிவாஜி அடிச்சா.. சாவு!! சிவாஜி கவுண்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. ஒன் டூ த்ரீ..
காட்சி 6:
னாசா தலைவர்: Mr.Sivaji, only you can help us!
ரஜினி: இப்போ என்ன ஸ்டேடஸ் சார்..
னா த: செவ்வாய் கிரகத்துலே இருந்து கிளம்பிய எரிகல் எப்போ வெணும்னாலும் உலகத்தை தாக்கலாம்.. அது மட்டும் நடந்தா.. வெல்.. தட் வில் பீ த என்ட் ஒஃப் அவர் வேர்ல்ட்..
ரஜினி: இப்ப என்ன பண்ணறது சார்?
னா த: நீங்கதான் எதாவது பண்ணனும் சிவாஜி
ரஜினி: ஒரே ஒரு வழிதான் சார் இருக்கு.. இங்கே பக்கத்துலே லைட் ஹவுஸ் எங்கே இருக்கு?
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இயக்கம் -- உங்கள் பினாத்தல்!
Jan 5, 2006
சிவாஜி திரை முன்னோட்டம் 04 Jan 06
சந்திரமுகியின் அபார வெற்றி, அன்னியனின் அப்பார வெற்றி இரண்டுக்கும் காரணமானவர்கள் இணைந்து கொடுக்கும் படம் என்பதால் ஆர்வம் அதிகரித்துவிட்டாலும், பயமும் அதிகமாகிவிட்டது.
நிஜமா பொய்யா எனத்தெரியாத ஒரு கேள்விப்பட்ட கதை. பிஷன் சிங் பேடி தன் மகனுக்கு கவாஸ்பேடி எனப் பெயர் வைக்க முனைந்தாராம். ஏன் எனக்கேட்டதற்கு அப்போதுதான் அவன் கவாஸ்கர் போன்ற பேட்ஸ்மேனாகவும் பேடி போன்ற பௌலராகவும் வருவான் என்றாராம். நடந்தது என்ன? மகன் வளர்ந்தான், பேடி போன்ற பேட்ஸ்மேனாகவும் கவாஸ்கர் போன்ற பவுலராகவும்!
இதில் படத்தைப் பற்றி வெளிவரும் தகவல்கள் இன்னுமே பயமுறுத்துகின்றன. பல பழைய படங்களின் பிரபல கெட்-அப்களில் ரஜினி தோன்றுவாராம். கெட்-அப் மட்டும்தானா, கதையுமா என்று தெரியவில்லை!
எனவே, ரஜினியின் பழைய பட ஃபார்முலாவையும், ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டுக்குலுக்கியதில், இந்தக்கதை(?!) கிடைத்தது!
ரஜினி ரசிகர்கள் மன்னிப்பார்களாக!
சற்றுப் பெரிய கோப்பாக அமைந்துவிட்டதால் இரண்டு பாகங்களாகக் கொடுக்கிறேன். அதற்கும் மன்னிக்கவும்.
இதுக்கெல்லாம் கோபப்பட்டுகிட்டு கருத்து சொல்லாம போயிடக்கூடாது! ஆமாம்.
இரண்டாம் பாகம் இங்கே துவங்குகிறது:
அனைவரின் வசதிக்காக மொத்த வசனங்களும் இங்கே:
காட்சி 1 - பாடல்:
இந்தியா என்னாலே எழுந்து நிக்கும் பாருடா
இமயத்துக்கு என்னைப்பார்த்தா வேர்த்திருக்கும் பாருடா
ஆந்திரா என் முன்னாலே அடங்கி நிக்கும் பாருடா
ஒரிஸ்ஸா என் சொல்லாலே ஒடுங்கி நிக்கும் பாருடா!
காட்சி 2 - ஜோதிட நிலையம்:
னதியா: ஜோசியர் ஐயா, இது என் மகன் சிவாஜியோட ஜாதகம்.. கொஞ்சம் பாத்து சொல்லறீங்களா?
ஜோசியர்: ஆஹா இதுதாம்மா ஜாதாகம்..
ஆயிரம் கோடி அதிசயம், அமைந்தது சிவாஜி ஜாதகம்!
இந்தக் குழந்தை எப்படியும் இன்னும் 20 வருஷத்துல பெரியவனா மாறிடுவான்
ஆனா எவ்வளவு பெரியவனா ஆவான்னு என்னாலே உறுதியா சொல்ல முடியலே
ஆனா நிச்சயம் ஏதாவது ஒரு துறையிலே பெரிய ஆளா வருவான்..
காட்சி 3: கல்லூரி
பிரகாஷ்: ஹாய் செல்லம்.. சீனியர மதிக்காம கிளாஸுக்குல்லே எல்லாம் போகக்கூடாது.. நில்லு நில்லு நில்லு
ரஜினி: தோ பார் கண்ணா.. என் வழி தனி வழி.. மோதப்பார்த்தே காணாமப்போயிடுவே..
பிரகாஷ்: அதெல்லாம் நீ எப்படி சொல்லலாம்? தப்பு தப்பு தப்பு.. அதெல்லாம் நீ சொல்லக்கூடாது..
இப்போ நீதான் சைன் தீட்டா, எதிர்லே வராளே.. அவதான் காஸ் தீட்டா.. ரெண்டு பேரும் செர்ந்து டேன் தீட்டா பண்ணுங்க பாக்கலாம்..
ரஜினி: டேய் டேய் டேய் டேய்.. ஆண்டவன் கெட்டவங்களுக்கு பிட் பிட்டா அள்ளிக்கொடுப்பான்.. ஆனா பரீட்சையிலே பெயில் பண்ணி வுட்டுடுவான்.
நல்லவங்களுக்கு.. பிட்டே கொடுக்க மாட்டான்.. ஆனா கொஸ்டின் பேப்பரையே அவுட் ஆக்கிடுவான்டா..
இந்தா வாங்கிக்கா..
காட்சி 4 :
ஷ்ரேயா: என்னங்க இந்தட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?
ரஜினி: தோ பாரும்ம.. பொம்பளை பொம்பளையா இருக்கனும்.. ஆம்பளை ஆம்பளையா இருக்கனும்..
கடனை வாங்காதவன் ஆம்பளையும் இல்லே,
புடவை கட்டாதவ பொம்பளையும் இல்லே..
ஆம்பளைன்னா நெருப்பா இருக்கணும்
பொம்பளைன்ன பொறுப்பா இருக்கணூம்..
ரஜினி: பார்.. முழுசா பொம்பளையா மாறியிருக்கிற என்னோட ஆளைப்பார்..
பிரபு: என்ன கொடுமை சார் இது?!!!!
காட்சி 5:
புஷ் அலுவலகத்துள் நுழையும் ரஜினி: இதோ பார் பிரச்சினை எனக்கும் உனக்கும் நடுவுலே.. அனாவசியமா பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது..ஈராக்லே இருந்து உன்படையெல்லாம் வாபஸ் வாங்கு.. அரிசிய இடிச்சா மாவு.. இந்த சிவாஜி அடிச்சா.. சாவு!! சிவாஜி கவுண்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. ஒன் டூ த்ரீ..
காட்சி 6:
னாசா தலைவர்:
ரஜினி: இப்போ என்ன ஸ்டேடஸ் சார்..
னா த: செவ்வாய் கிரகத்துலே இருந்து கிளம்பிய எரிகல் எப்போ வெணும்னாலும் உலகத்தை தாக்கலாம்.. அது மட்டும் நடந்தா.. வெல்.. தட் வில் பீ த என்ட் ஒஃப் அவர் வேர்ல்ட்..
ரஜினி: இப்ப என்ன பண்ணறது சார்?
னா த: நீங்கதான் எதாவது பண்ணனும் சிவாஜி
ரஜினி: ஒரே ஒரு வழிதான் சார் இருக்கு.. இங்கே பக்கத்துலே லைட் ஹவுஸ் எங்கே இருக்கு?
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இயக்கம் -- உங்கள் பினாத்தல்!